சி. கார்த்திகேயன், சாத்தூர்
அன்னையர் தினம் - தந்தையர் தினம் என்ன வித்தியாசம்?
மே 12-க்கும் ஜூன் 18-க்குமான வித்தியாசம். அதாவது 36 தினங்கள். மற்றபடி புதிது புதிதாக தினங்களைக் கொண்டாடும் வழக்கம் பரவலாகி வருகிறது. விருப்பம் இருப்பவர்கள் தாய்- தந்தை மீதான தங்கள் பிரியத்தை வெளிக்காட்ட இத்தினங்கள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் 365 நாட்களும் நாம் எதையாவது கொண்டாடிக்கொண்டும், செலவழித்துக் கொண்டும் இருப்பதை விரும்புகின்றனர்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
சிறார்களுக்கு எதிராக நிலுவையிலுள்ள அனைத்து போக்சோ வழக்குகளின் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக மற்றும் புதுச்சேரி டி.ஜி.பி.க்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளதே..?
மேலாளர் பார்க்கிறார் எனத் தெரிந்தால் ஊழியரின் வேலையில் ஒரு சுறுசுறுப்பு வருமல்லவா? அதுபோலத்தான். நீதிபதிகள் கேட்கும்போது காவல்துறை உயரதிகாரிகள் சுறு சுறுப்பாவார்கள். தேக்கத்தில் இருக்கும் வழக்குகளின் விசாரணை கூட சூடுபிடிக்கும். இது மறைமுகமாக சட்டம் ஒழுங்கு நிலவரம் மேம்பட உதவுவதோடு, போக்சோ குற்றங்களும் குறைவதற்கு வழி வகுக்கும். தவிரவும் ஏதாவது பொதுநல வழக்குக்காக போக்சோ வழக்கு குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கலாம். அதுகுறித்த மேலதிக தெளிவைப் பெறுவதற் காகவும் நீதிபதிகள் இந்த விவரங்களைக் கேட்டிருக்கலாம்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
பற்றி எரியும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மௌனம் அனுஷ்டிப்ப தேன்?
மணிப்பூர் விவகாரத்தில் மட்டுமா?… இரண்டு ஆட்சிக் காலத்திலும் சர்ச்சைக்குரிய, பிரதமர் அத்தியாவசியமாக பதிலளிக்கத் தேவையான விஷயங்களில் எல்லாம் கருத்துச் சொல்வதில்லை என்பதை மோடி ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார். பணமதிப்பிழப்பு சர்ச்சை, கொரோனா தொற்றின் போதான மாபெரும் இடப் பெயர்வு, டெல்லி கலவரம், விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயர்வு, நாடாளு மன்றம் இதிலெல்லாம் கருத்துச் சொல்லாமலே மோடி கடக்க, அவர் அரசைச் சேர்ந்தவர்கள் பேசிச் சமாளிப் பார்கள். மாறாக "தி கேரளா ஸ்டோரிஸ்' படம் குறித்து, நேரு, இந்திரா, சோனியா, ராகுல் குறித்து, வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு, தேர்தல் பிரச்சார மேடைகளில் மோடியின் வாய்ஜாலத்தை பார்க்கலாம்..
மல்லிகா அன்பழகன், சென்னை. 78
எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதால் முன்கூட்டியே தேர்தல் நடக்கலாம் என்று நிதிஷ்குமார் சொல்கிறாரே?…
அது ஒரு யூகம்தான். ஆனால் அதில் பொருளிருக்கிறது. ஆட்சியிலிருப்பதால் தேர்தலுக்கான தயாரிப்பை பா.ஜ.க. விரைவில் செய்துவிடும். எதிர்க்கட்சிகள் கூட்டணி பற்றிய தயாரிப்பிலிருக்கும்போதே, அவர்களுக்கு அவகாசம் கொடுக்காமல் திடீரெனத் தேர்தலை அறிவித்து திகைப்படையச் செய்து, அவர்களை பின்னடையச் செய்யக்கூடும் என நிதிஷ்குமார் நினைக்கிறார்போல. பாம்பின் கால் பாம்பறியும்!
வாசுதேவன், பெங்களூரு
நேதாஜி இருந்திருந்தால் நாடு பிளவுபட்டிருக்காது என அஜித் தோவல் கூறியிருக்கிறாரே?…
வாரன் ஹேஸ்டிங்க் மட்டும் வராமல் போயிருந்தால், ஆங்கில ஏகாதிபத்தியமே இந்தியாவில் வந்திருக்காது என்று ஒருவர் சொன்னால் அதற்கு என்ன மதிப்பிருக்குமோ, அதே மதிப்புதான் அஜித் தோவல் கருத்துக்கும். காந்தியும், நேருவும் இன்னும் மற்றவர்களும் தேசப் பிளவை விரும்பவா செய்தார்கள்? இது ஏதோ காங்கிரஸும் மற்றவர் களும் திட்டமிட்டு தேசத் தைப் பிளந்து ஜின்னாவின் கையில் கொடுத்தார்கள் என்பதுபோன்ற சிந்தனை யை ஏற்படுத்துவதற்கான ஒரு யுக்திதான்.
இல. சுகன்யா, நெற்குன்றம்
ஜூன் 13-ஆம் தேதியுடன் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான அரிசி, கோதுமை விற்பனையை நிறுத்தியுள்ளதே?…
இந்தத் திட்டத்தில் மத்திய அரசிடம் அரிசி, கோதுமை வாங்கும் மாநிலங்களில் சில தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா. அதேசமயம், சமயோசிதமாக பா.ஜ.க. ஆளும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள மாநிலங்கள் இனி இந்தத் திட்டத்தை நிறுத்தவேண்டும்… அல்லது தங்கள் கையிலிருந்து சொந்தக் காசைப் போட்டு தொடரவேண்டும். எதிர்க்கட்சிகளுக்குப் பாடமெடுக்கிறேன் என்ற வேகத்தில், பொதுமக்களின் சோற்றுத் தட்டை தட்டிவிட்டிருக்கிறது ஒன்றிய அரசு.