டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
500 டாஸ்மாக் கடைகளை தமிழ்நாட்டில் மூடப்போவதாக தமிழக அரசு கூறியுள்ளதே, அது எப்போது நிறைவேற்றப்படும்?
தமிழ்நாடும், மதுவிலக்குக் கொள்கை யும் தள்ளாட்டமானது. ஒரு பகுதியில் கடைகளை மூடுவதும் இன்னொரு பகுதி யில் கடைகளைத் திறப்பதும் ஆட்சி யாளர்களின் வாடிக்கை. மது குடிக்க பர்மிட் இருந்த காலம் உண்டு. பர்மிட் இல்லாதவர்கள்-பர்மிட் கிடைக்காதவர்கள் கள்ளச்சாராயம் குடித்தனர். பிறகு, மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு கள்-சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. ஒரு நேரத்தில் எல்லாமும் மூடப்பட்டன. பின்னர், மலிவு விலை மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அவை மூடப்பட்டு, பார் வசதியுடன் கூடிய மதுபானக் கடைகள் வந்தன. அதில் எலைட், டிலைட் என்று வசதிகளும் பெருகின. மதுபானங்களை கொள்முதல் செய்வதற்காக டாஸ்மாக் உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த டாஸ்மாக் மூலம் சில்லறை
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
500 டாஸ்மாக் கடைகளை தமிழ்நாட்டில் மூடப்போவதாக தமிழக அரசு கூறியுள்ளதே, அது எப்போது நிறைவேற்றப்படும்?
தமிழ்நாடும், மதுவிலக்குக் கொள்கை யும் தள்ளாட்டமானது. ஒரு பகுதியில் கடைகளை மூடுவதும் இன்னொரு பகுதி யில் கடைகளைத் திறப்பதும் ஆட்சி யாளர்களின் வாடிக்கை. மது குடிக்க பர்மிட் இருந்த காலம் உண்டு. பர்மிட் இல்லாதவர்கள்-பர்மிட் கிடைக்காதவர்கள் கள்ளச்சாராயம் குடித்தனர். பிறகு, மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு கள்-சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. ஒரு நேரத்தில் எல்லாமும் மூடப்பட்டன. பின்னர், மலிவு விலை மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அவை மூடப்பட்டு, பார் வசதியுடன் கூடிய மதுபானக் கடைகள் வந்தன. அதில் எலைட், டிலைட் என்று வசதிகளும் பெருகின. மதுபானங்களை கொள்முதல் செய்வதற்காக டாஸ்மாக் உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த டாஸ்மாக் மூலம் சில்லறை மதுபான விற்பனையையும் அரசே மேற்கொண்டது. ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து மதுவிலக்கு என தேர்தல் வாக்குறுதி கொடுத்தவர்கள் உண்டு. படிப்படியாகக் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் உண்டு. இன்றைய நிலையில் மதுக்கடைகள் என்பவை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியவைதானே தவிர, மொத்தமாக மூடக்கூடியவை அல்ல. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமன்று. அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மதுவிலக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மதுக்கடைகள் கிடையாது. ஆனால், வீட்டுக்கு மதுபாட்டிலை டோர் டெலிவரி செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்று குஜராத் மதுவிலக்கு லட்சணம் பற்றி ஜெயலலிதா ஆட்சியில் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் சட்டமன்றத்திலேயே பதிலளித் திருக்கிறார்.
ச.இராமதாசு சடையாண்டி, வானூர்- விழுப்புரம்
அண்ணாமலை பேட்டி கொடுத்து... பேட்டி கொடுத்து பெரிய ஆளாக நினைப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே...?
தனது இத்தனை ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் எடப்பாடி பழனிசாமியின் சரியான கணிப்பு அண்ணாமலை பற்றியதுதான். தமிழ்நாட்டில் எப்போதுமே பேச்சுக்கு ஈர்ப்பு உண்டு. அதை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் முதல்வராகிவிடலாம் என்ற நினைப்பில், ஊடக வெளிச்சத்திற்காகவும், இளைய தலைமுறையை ஈர்ப்பதற்காகவும் நடைபெறும் போட்டியில் சீமானும் அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் மிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பேசாமல் இருந்தே அரசியலில் பல காரியங்களை முடித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையின் நோக்கத்தைக் கச்சிதமாகக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனாலும், அரசியலைப் பொறுத்தவரை அரண்மனை கோழிமுட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும். டெல்லியை ஆளும் பாதுஷாவின் அரண்மனையில் ஓர் அங்கமாக இருக்கிறார் அண்ணாமலை. அதுவும்கூட எடப்பாடிக்கு நெருடலாக இருந்திருக்கும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பற்றி?
பொதுவாக, ஆட்சியாளர்கள் என்றால் சலாம் போடுவது திரையுலகினரின் வழக்கம். தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் திரையுலகினர் நடத்திய பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாக்கள், தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா? என கோர்ட் தீர்ப்புக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டங்கள் என சினிமா ஹீரோக்களும் நிஜத்தில் காமெடியன்களானதைப் பார்த்தவர்கள் மக்கள். அதுபோல, வடமாநிலங்களில் மோடி புகழ்பாடும் சினிமாக்காரர்கள் அதிகம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய இந்தியா பிறந்துவிட்டதாக ட்வீட் செய்த படாபடா நடிகர்களும் உண்டு. அப்போதிருந்து இப்போது வரை மோடியின் அரசியலை ஆழமாகப் புரிந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்புபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். மதவாதத்தை முன்வைத்து மனித உரிமைகளை நசுக்கும் மோடி ஆட்சியை எதிர்ப்பதற்கு கம்யூனிஸ்ட்டாகவோ, திராவிட இயக்கமாகவோ, காங்கிரசாகவோ வேறு எந்த இயக்கத்தைச் சார்ந்தவராகவோ ஒருவர் இருக்க வேண்டியதில்லை. மனிதத் தன்மை கொண்டவராக இருந்தால் போதும் என்கிற பிரகாஷ்ராஜின் விமர்சனம், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் சொல்லத் தயங்குகிற விமர்சனம்.
தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி -தேனி
உத்தரப்பிரதேசத்தில் ஆதிக்அகமதுவும், அவரது தம்பியும் போலீஸ் முன் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யப்பட்டது குறித்து...?
காவியும் காக்கியும் கைகோர்த்து செயல்படும் ஆட்சியாக இருப்பதால், சட்டத்தை துப்பாக்கி முனையில் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு நீதியைப் புதைகுழிக்கு அனுப்புகிறார்கள்.