டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

நிறைய கட்சிகளை, தேர்தல் ஆணையம் தேசிய அந்தஸ்தை இழக் கச் செய்துவிட்டது குறித்து?

எத்தனையோ அரசியல் கட்சிகள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. தேர்தல் களத்தைச் சந்தித்திருக்கின்றன. புதிது, புதிதாக பல கட்சிகள் உருவாகி யும் வருகின்றன. நேற்று இருந்த கட்சி கள் இன்று இல்லை. இன்று உருவாகும் கட்சிகள் நாளை எந்தளவில் தாக்குப் பிடிக்கும் என்பது தெரியாது. அதுதான், மக்களுடைய வாக்குரிமையின் சிறப்பு. மாநிலக் கட்சியாக இருப்பதற்கும், தேசிய கட்சியாக இருப்பதற்கும் சில வரையறை களை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. மாநில அளவில் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களையும் அல்லது குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தையும் பெற்றிருந்தால் அது மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெறும். அதுபோலவே இந்திய அளவில் ஒன்றுக்கும் மேற்பட்ட சில மாநிலங் களில் எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏக்களையோ, அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவிலான வாக்கு சதவீதத்தையோ பெற்றிருக்கும் கட்சிகள் தேசிய கட்சிகளாகத் தகுதி பெறுகின்றன. இந்தியாவின் நீண்ட கால தேசியக் கட்சி, காங்கிரஸ். அதற்கடுத்து அதிக காலம் அந்தத் தகுதியுடன் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதனைத் தொடர்ந்து தேசியக் கட்சி என்ற தகுதியுடன் இன்று ஆளுங்கட்சியாகவும் இருப்பது பாரதிய ஜனதா கட்சி. பா.ஜ.க.வுக்கும் மார்க்சிஸ்ட் டுக்கும் முன்பாக தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இன்று அது அந்தத் தகுதியை இழந்துள்ளதன் காரணம், இந்திய அளவில் அந்தக் கட்சிக்கு இருப்பது 2 எம்.பி.க்கள் மட்டுமே. அந்த இருவரும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்த பீகார், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங் களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய செல்வாக்கை இழந்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவையில் இருப்பது 3 எம்.பி.க்கள். அதில் இருவர் தமிழ்நாட்டவர். ஒருவர், கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவில் ஆளுங்கட்சியாகவும் இருக்கிறது மார்க்சிஸ்ட். ஆனால், முன்பு ஆட்சி செய்த மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் அந்தக் கட்சி தன் செல்வாக்கை இழந்திருப்பதுடன், அந்தக் கட்சிக்கு வாக்களித்த வர்கள் பா.ஜ.க. பக்கம் சென்றிருப்பது அரசியல் விநோதம். சிவப்பு வெளுத்து காவியாவது நாட்டுக்கு நல்லதல்ல. இந்தச் சூழலில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி தேசிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களிலும் செல்வாக்கை இழந்துள்ளது. இந்திய அரசியல் களம் எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை முற்போக்கு -சமூக நீதி -ஜனநாயக சக்திகள் உணர்ந்து விழித்துக்கொள்ள வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் உணர்த்து கின்றன.

Advertisment

mm

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆ.ர்., ஜெ., எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள்... தி.மு.க.வில் அண்ணா, கலைஞர், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் என்ன வித்தியாசம்?

அண்ணாவின் அமைச்சரவையில் இருந்தவர் கள் அவருடைய அரசியல் தம்பிகள். அவரவர் பணியை சரியாகச் செய்யவேண்டும் என்பது அண்ணாவின் எண்ணமாக இருந்தது. அண்ணா முதல்வராக இருந்தது குறைந்த காலமே. அவர் மறைவுக்குப் பிறகு, முதல்வரான கலைஞர் தன்னைவிட சீனியர்களையும் தனக்கு ஜூனியர்களையும் சமமாகப் பங்கேற்கச் செய்யும் வகையில் அமைச்சரவையைக் கையாண்டார். மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதில் அதிகாரிகளின் நேரடிப் பங்களிப்பையும் முன்னிறுத்துகிறார். எம்.ஜி.ஆர்., தன் செல்வாக்கால் அமைச்சரவையில் இருந்த சீனியர்களையும் ஜூனியர்களையும் கையாண்டார். ஜெயலலிதா ஆட்சி என்பது தன்னை மட்டுமே முன்னிறுத்திய ஆட்சி. யார், யார் மந்திரிகள், எத்தனை நாள் மந்திரிப் பதவி நீடிக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு ஆட்சி செய்தார். எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எல்லா அமைச்சர்களையும் ஃப்ரீயாக விட்டவர். இதில் நாவலர் நெடுஞ் செழியன், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நால்வரின் அமைச்சரவையிலும் இரண்டாம் இடம் வகித்தவர். நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் இருவரும் எம்.ஜி.ஆர், கலைஞர் இருவரின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தவர்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆரோ எம்.ஜி.ஆர்., கலைஞர், ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றவர். முத்துசாமியும் சளைத்தவரல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஸ்டாலின் அமைச்சரவை யில் பங்கெடுத்திருக்கிறார். ரகுபதியும், செந்தில் பாலாஜியும் ஜெ. மற்றும் ஸ்டாலின் அமைச்சரவை யில் இடம்பெற்றவர்கள். இன்னும்கூட இப்படிப் பட்டியலிடலாம்.