நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

மோடி அமித்ஷாவின் கூண்டுக்கிளிதான் சி.பி.ஐ. என உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறாரே?

சி.பி.ஐ. மட்டுமா... அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாமும் ஒன்றிய அரசின் கூண்டுக்கிளிகள்தான். தன்னுடைய அரசின் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளால்தான் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றன என்று ஒரு பிரதமர் சொல்கிறார். அதாவது, ஜனநாயகத்தின் குரல்வளையை நான் நெரிப்பதால்தான் நீங்கள் எல்லாம் அலறுகிறீர்கள் என்கிற ஒப்புதல் வாக்குமூலம் இது.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

Advertisment

"பட்டியலினத்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் ஸ்டாலினை பாராட்டுவேன்' என்கிறாரே வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ?

துணை முதல்வர் என்பது ஓர் அடையாளம்தான். அதற்கு என்று தனி அந்தஸ்து எதுவும் கிடையாது. அமைச்சரவையில் எத்தனையாவது இடம் என்பதுதான் முக்கியமானது. வெறும் அடையாளத்தை பட்டியல் இனத்தவருக்குத் தரச்சொல்லும் வானதி சீனிவாசன், அதிகாரம் மிக்க பிரதமர் பதவியில் பட்டியல் இனத்தவர் ஒருவரை உட்கார வைக்கவேண்டும் என்று மோடி-அமித்ஷாவிடம் பரிந்துரைத்து, பா.ஜ.க.வின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யலாமே!

Advertisment

mm

சி.கார்த்திகேயன், சாத்தூர்

"அரசை விமர்சனம் செய்வது தேசத்துரோகம் அல்ல' என்கிறதே நீதிமன்றம்?

அவதூறு இல்லாத எந்த ஒரு விமர்சனமும் தேசத்துக்கு நல்லதுதான். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் அவர்களின் கட்சிக்காரர்கள் மட்டுமே தேசபக்தர்கள் போலவும் மற்ற எல்லாரும் தேசத்துரோகிகள், ஆன்ட்டி இண்டியன்ஸ், அர்பன் நக்சல்ஸ் எனவும் வகைப்படுத்தப்படுகிறார்கள். மோடியையும், அவரது அரசையும் விமர்சித்தால் அது தேசத்துரோகமாக சித்தரிக்கப்படுகிறது, வழக்கு போடப்படுகிறது, சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஜாமீன்கூட கிடைக்காதபடி சட்டம் நெரிக்கப்படுகிறது. ஊடகங்களின் வாயைப் பொத்தும் வேலைகள் நடக்கின்றன. "மீடியா ஒன்' என்ற ஊடகத்தின் வாய் பொத்தப்பட்டது. தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில்தான், தடையை நீக்கியதுடன், அரசை விமர்சனம் செய்வது தேசத் துரோகம் அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், பா.ஜ.க அரசு திருந்திவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. எது உண்மையான செய்தி, எது பொய்யான செய்தி, எது அவதூறான செய்தி என்பதைத் தரம் பார்க்கும் வேலையை ஒன்றிய அரசின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ எனப்படும் பி.ஐ.பி.யிடம் கொடுத்திருக்கிறது மோடி அரசு. அதாவது, தனது அரசின் அதிகாரிகளைக் கொண்டே எது அரசுக்கு எதிரான செய்தி என மோடி அரசு தீர்மானிக்கு மாம். உலகில் இப்படி ஒரு ஜனநாயக நாட்டைப் பார்த்திருக்கிறோமா!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்- தேனி

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய் யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டது குறித்து?

மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆண்- பெண் உறவு அவரவர் விருப்ப உரிமை களைக் கொண்டது என்றாலும், பதவிப் பொறுப்பில் இருப்பவர் களுக்கு அது முக்கியமான அளவுகோலாக ஆகிவிடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர்களுக்கும் பெண்களுக்குமான நட்பு அடிக்கடி சர்ச்சையாகிறது. ஜான் கென்னடி ஜனாதிபதியாக இருந்தபோது புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ வுடனான நட்பு பலவித கேள்வி களை அவரை நோக்கியும், அவரது சகோதரரை நோக்கியும் எழுப்பப்பட்டன. கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இதுபற்றி பல்வேறு வதந்திகள் பரவின. பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய மோனிகா லெவன்ஸ்கி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிளிண்டனின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் விசாரணை சென்றது. அந்த வகையில், நடிகை ஸ்டார்மி டேனிய லுக்கு பணம் கொடுத்த விவகாரத் தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் சிக்கியுள்ளார். பாலியல் படங்களில் புகழ்பெற்றவர் ஸ்டார்மி டேனியல். அமெரிக்காவின் தொழிலதிபராகவும், தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர் ட்ரம்ப். இருவருக்குமான உறவை மறைப்பதற்காக பணம் கொடுத்தார் ட்ரம்ப் என்பதுதான் ஸ்டார்மியின் குற்றச் சாட்டு. அமெரிக்க சட்டப்படி இத்த கைய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை, கைவிலங்கு எல்லாம் சகஜம். எனினும், டிரம்ப்புக்கு கொஞ் சம் தளர்வு கிடைத் திருக்கிறது. துப்பி னால் துடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவர் டிரம்ப். மீண்டும் ஜனாதி பதி தேர்தலில் போட்டியிடுவேன் என் கிற டிரம்ப் இதையும்கூட தேர்தல் ஆதாயமாக்கிக்கொள்ள நினைக்கலாம்.

பிரகாஷ், தேனி

"நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்'' என எச்.ராஜா அறிவித்துள்ளது பற்றி?

சாரணர் தேர்தல் உட்படவா...? அந்த அளவுக்கு அடி பலமோ!