பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள் ளாரே?
நாடாளுமன்றத்தில் பல நிலைக்குழுக்கள் உண்டு. அதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்தந்த கட்சியின் பலத் திற்கேற்ப நியமிக்கப்படுவது வழக்கம். பொதுக்கணக்கு குழு என்பது முக்கியமான குழுக் களில் ஒன்று. அதற்கான 7 இடங்களுக்குரிய தேர்தல் மார்ச் 28 அன்று நடைபெற்றது. ஆளுங்கட்சியான பா.ஜ.க. சார்பில் 3 பேர், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங் கிரஸ், அ.தி.மு.க. சார்பில் தலா ஒருவர் தேர்வாகினர். இவர் களில் 42 வாக்குகளுடன் முதலிடம் பெற்றவர் தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா. அ.தி.மு.க.வின் தம்பிதுரை குறைந்த அளவில் 16 வாக்குகள் பெற்றுத் தேர்வானார். பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் சார்பில் தேர்வானவர்களும் திருச்சி சிவாவைவிட குறைவாகத்தான் வாக்குகள் பெற்றனர். தி.மு.க. உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையைவிட திருச்சி சிவா எம்.பி. பெற்ற வாக்குகள் அதிகம். அவரது நீண்டகால நாடாளுமன்ற அனுபவமும், முக்கியமான பிரச்சினைகளில் அவர் எடுத்து வைக்கும் வாதங்களும், திருநங்கையர் உரிமை உள்ளிட்ட கவனிக்கப்படாத பிரச்சினைகளுக்காக அவர் கொண்டுவரும் தனி நபர் தீர்மானமும் கட்சி எல்லைகளைக் கடந்த வரவேற்பைப் பெறுவது வழக்கம். மொழி உரிமை லிமாநில உரிமை இவற்றை விட்டுக்கொடுக்காமல் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் நாடாளுமன்றவாதியாக செயல்படுபவர். அவருடைய கருத்துகளுக்கு எப்படி கட்சி கடந்த வரவேற்பு கிடைக்குமோ, அதுபோல அவரைத் தேர்வு செய்வதிலும் அந்த வரவேற்பைக் காண முடிகிறது. இந்திய அரசியலில் தி.மு.க.வின் முக்கியத்துவம் பெருகி வருவதன் அடையாளம், திருச்சி சிவா எம்.பி. பொதுக்கணக்குக் குழு தேர்தலில் பெற்ற வாக்குகள்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
ஆவின் தயிர் பாக்கெட்டில் தயிர் என ஹிந்தியில் அச்சிட வேண்டும் என மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு குறித்து...?
ஆவின் நிறுவனம், அமைச்சர் ஆவடி நாசர் கட்டுப்பாட்டில் வருகிறது. அவர் யார் மீதோ கல் வீசுவதுபோல சில மாதங்களுக்கு முன் சர்ச்சை உருவானது. ஆனால், அவர் சரியாக குறி வைத்து எறிந்தது மத்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவு மீதுதான். தஹி என்று அச்சிட முடியாது. தயிர் என்றுதான் அச்சிடுவோம் என உடனடியாக பதிலடி கொடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்ட நினைத்தால் தொலைந்துவிடுவீர்கள் என்று எச்சரித்தார். தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, பா.ஜ.க. ஆளும் கர்நாடகத்திற்கும் இந்த தஹி உத்தரவு போடப்பட்டிருந்தது. அங்கே தேர்தல் வருகிறது. கன்னடர்கள் ஏற்கனவே பா.ஜ.க. மீது சரியான கோபத்தில் இருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக அங்கே கடந்த சில ஆண்டுகளாக கடும் போராட்டங்கள் நடக்கின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை உடைத்து தள்ளினார்கள். டெல்லியிலிருந்து வரும் பா.ஜ.க. தலைவர்களுக்கு இந்தியில் வைக்கப்பட்ட பேனர்களைக் கிழித்துத் தள்ளினார்கள். தஹி நஹி என்று தமிழ்நாடு உரக்கச் சொன்னது. கர்நாடகத் தேர்தல் நிலவரம் கலங்க வைத்தது. உத்தரவை வாபஸ் பெற்றுக்கொண்டது மத்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம்.
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
இப்போது நிம்மதியாகத் தூங்குவது மோடியா? ராகுலா?
அரசியல்வாதிகள் நிம்மதியாகத் தூங்க மாட்டார்கள், தூங்க விடவும்மாட்டார்கள்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
தொப்பியும், கூலிங்கிளாசும் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியுமா?
பள்ளிக்கூட மாறுவேடப் போட்டியில் பாரதியார், நேதாஜி, அப்துல்கலாம் என விதவித வேடங்களில் சிறுவர்-சிறுமிகள் மேடை ஏறி மகிழ்வதில்லையா? அதுபோல அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவரும் அவருடைய ஆட்களும் சேர்ந்த நடத்திய சிறுபிள்ளை விளையாட்டு. அ.தி.மு.க.வின் அடிப்படைத் தொண்டர்கள் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரையும் எம்.ஜி.ஆராகப் பார்க்கமாட்டார்கள். அப்படி ஒருவரை அவர்களால் கற்பனை செய்யவும் முடியாது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது இயல்பான எம்.ஜி.ஆரின் தோற்றத்தில் படங்களும் வீடியோவும் வெளியானது. அப்படி அவரைக் காட்டுவதைக்கூட தொண்டர்களால் தாங்க முடியவில்லை. தொப்பியும் கண்ணாடியும் அணிந்த எம்.ஜி.ஆர். தன் கன்னத்தில் கைவைத்து சிரிப்பது போன்ற படம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றது. அவரே அறியாமல் ஸ்ரீஹய்க்ண்க்ஆக அப்போது எடுத்தவர் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம். தொப்பி-கண்ணாடி அணிந்த எம்.ஜி.ஆரின் சிரிப்பு பலரையும் வசீகரித்தது. தொப்பி-கண்ணாடி அணிவிக்கப்பட்டபோது எடப்பாடிக்கே அதை தாங்கமுடியாமல் சிரிப்பு வந்துவிட்டது.