சி. கார்த்திகேயன், சாத்தூர்
"நாட்டு நாட்டு' பாடல் பி.ஜே.பி. வெற்றி இல்லை என்று நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன் கார்கே காமெடியாகக் கூறியது பற்றி?
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு முறை தலைமைப் பதவி என்கிற சுற்றின் அடிப்படையில் இந்திய பிரதமருக்கு கிடைத்திருக்கும் ஜி-20 நாடுகளின் தலைமைப் பதவியை மோடியின் தனிப்பட்ட வெற்றி போல பா.ஜ.க. சித்தரிப்பதும், எல்லா பெருமைகளை யும் மோடியின் கணக்கில் எழுதுவதை யும் எத்தனை காலம்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும் மல்லிகார்ஜூன கார்கேயால்.
ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தமிழகத்தில் 40 இடங்களையும் கைப்பற்றி விடுமா?
ஒரு தேர்தல் போல இன் னொரு தேர்தல் இருக்காது. கடந்த முறை புதுச்சேரி உள்பட 39 இடங்களை தி.மு.க. கூட் டணி வென்றது. அப்போது மத்தியில் பா.ஜ.க., மாநிலத்தில் அ.தி.மு.க. என இரண்டு ஆளுங்கட்சிகளுக்கும் எதிரான மக்க ளின் மனநிலை தி.மு.க. கூட்டணிக்கு முழுமையாக சாதகமானது. இப்போது தமிழ்நாட்டை ஆள்வது தி.மு.க அரசு. அதன் சாதக பாதகங்களையும், கடந்த முறை வெற்றி பெற்று எம்.பி.யான தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் செயல்பாடுகளையும் மக்கள் எடை போட்டுப் பார்த்தே வாக்களிப்பார்கள். அதனால், 40 இடங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் தி.மு.க.வும் அதன் கூட்டணியும் கடுமையாக உழைக்க வேண்டும். மதவாதமும், மொழி ஆதிக்கமும், ஜனநாயக விரோதத் தன்மையும் கொண்ட ஒன்றிய பா.ஜ.க அரசு மீதான மக்களின் அதிருப்தியைத் தன்பக்கம் சாதகமாக்கும் வகையில் தி.மு.க. கூட்டணி மக்களின் முழு நம்பிக் கையைப் பெறவேண்டும்.
தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயரை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது எதற்காக?
நீட் தேர்வு என்பது எத்தனையோ இளையவர் களின் மருத்துவக்கனவை சிதைத்திருக்கிறது. குறிப்பாக, கிராமப் புற-ஏழை-பட்டியல் இன சமுதாயத்தினர் தங்கள் மருத்துவப் படிப்பு நிறைவேற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோச்சிங் சென்டர்களுக்கு அதிக அளவில் பணம் கொட்டிக் கொடுக்க வேண்டி யிருப்பதால் அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, நீட் தேர்வுத்தாள் குளறுபடிகள், விடைத்தாள் திருத்தங்களில் மோசடிகள் என செய்தி கள் வந்து கொண்டே இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள் ளையை நீட் தடுத்துவிடும் எனச் சொல்லப் பட்ட நிலையில், தனியார் கோச்சிங் சென்டர்களின் கொள்ளை லாபத்திற்கு மட்டுமே நீட் பயன்படுகிறது. பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. +2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்குத் தேர்வு செய் திருந்தால் அரியலூர் மாணவி அனிதாவுக்கு சென்னை மருத் துவக் கல்லூரியிலேயே மெரிட்டில் சீட் கிடைத் திருக்கும். அவரது எம்.பி.பி.எஸ். கன வைச் சிதைத்தது நீட் நுழைவுத் தேர்வு. தனது அம்மாவைப் போல கிராமத்தினர் யாரும் பாதிக்கப் படாதபடி சொந்த ஊரிலேயே சிகிச் சை அளிக்கலாம் என்கிற அவ ருடைய இலட் சியத்தை நீட் தகர்த்தது. உச்சநீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்காததால் அனிதா தற் கொலை செய்துகொண்டார். அவரைப் போல தற்கொலை செய்துகொண்ட தமிழ்நாட்டு மாணவிகள் அதிகம். தற்போது வெளி மாநிலங்களிலும் நீட் தேர் வினால் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இத்தகைய நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பழைய முறைப்படி +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நோக் கம். அதற்காக இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டும் ஆளுநரின் அலட்சியத் தாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சத்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாமல் உள்ளது. தமிழ் நாட்டுக்கு விலக்களிக்கப்படவுமில்லை. இந்த நிலை யில்தான், நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதாவின் பெயரை அவரது ஊரான அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புது அரங்கத்திற்கு சூட்டியிருக்கிறார் முதல் வர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டி யதன் அவசியத்தை ஒவ் வொரு மருத்துவ மாண வருக்கும், மருத்துவம் படிக்க நினைப்பவர் களுக்கும், அனிதா என்ற பெயர் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
சமீபகால ரஜினிகாந்தின் வாய்ஸ் பற்றி!?
1996 தேர்தலில் முதன்முதலாக ரஜினி வாய்ஸ் கொடுத்தார். கலைஞர்+மூப்பனார் கூட்டணிக்கு ஆதரவாகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் அவர் கொடுத்த முதல் வாய்ஸ் அது. ஜெயலலிதா மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்ற அந்த வாய்ஸ் மக்களிடம் எடுபட்டது. அதற்குப் பிறகு அவர் பல முறை வாய்ஸ் கொடுத்திருக்கிறார். தேர்தல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க. என மாறி மாறி ஆதரித்து வாய்ஸ் கொடுத் திருக்கிறார். அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. இப்போது அவர் கொடுத்திருப்பது அரசியல் வாய்ஸ் அல்ல. தன் மனதின் குரல்.