ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.
தமிழிசை... இல.கணேசன்... சி.பி. ராதாகிருஷ்ணன்... அடுத்தது யார்?
உங்கள் பட்டியலை பொன்.ராதா கிருஷ்ணன் உற்றுப் பார்க்கிறாராம். பா.ஜ.க.வில் தேர்தலில் போட்டியிட்டு தோற்றால்கூட பதவி நிச்சயம் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு லோக்கல் தலைவருக்கும் உருவாகியிருக்கிறது.
திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
முதல்வன் படம் போல எனக்கு ஒருநாள் முதல்வர் பதவியைக் கொடுத்துப் பாருங்களேன்… என்கிறாரே சீமான்?
ஜனநாயக நாட்டில் உள்ள அரசியல் சட்டத்தின்படி, தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்தான் முதல்வ ராக முடியும். பதவிக்காலம் 5 ஆண்டு கள். ஒரு நாள் முதல்வர் என்ப தெல்லாம் சினிமா கதைக்கும், அதைப் பார்ப்பவர்களுக்கும் பரவசத்தைத் தரும். அரசியலில் அது கனவுதான். சீமான் இப் போது டைரக்டர் அல்ல. கட்சித் தலைவர். அதனால், அந்தக் கனவி லிருந்து மீண்டு, தனது கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற வைப்பதற்கேற்ற ஆக்கப்பூர்வ மான அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது.
மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி
எல்லா சூழ்நிலை யிலும் சட் டம் தன் கடமையை சரிவரச் செய் கிறதா?
சட்டத்தை நடைமுறைப் படுத்தும் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அதற்கேற்பவே சட்டத்தின் கடமையும் இருக் கும். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லியின் துணை முதல்வர் மீது ஊழல் புகார் என்றால் சட்டம் கைது செய்து சிறையில் அடைக்கும். கர்நாடக மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் குடும்பத்தார் லஞ்சம் வாங்குவது ஆதாரப்பூர்வமாகவே அம்பலமானா லும் சட்டம் ஜாமீன் வழங்கிக் காப்பாற்றும்.
த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.
அதிக பேச்சாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தது தி.மு.க. மேடை தந்த கொடைதானே?
தி.மு.க உருவாவதற்கு முன்பு இருந்த கட்சிகளிலும் பேச்சாளர்கள் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலை உணர்ச்சியை மக்களிடம் உருவாக்கிய தீரர் சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் பேச்சாளர்கள் உண்டு. பொதுவுடைமை இயக்கத்தில் புரட்சிகரமான கருத்துகளை வெளிப்படுத் தும் சிங்காரவேலர் போன்ற பேச்சாளர்கள் உண்டு. பகுத்தறிவுக் கருத்துகளைப் பாமரருக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் 3 மணிநேரத்திற்குக் குறை யாமல் பேசியவர் தந்தை பெரியார். அவர் பட்டறை யில் உருவான பேரறிஞர் அண்ணா, பேச்சைக் கருத்தாயுதமாக ஆக்கினார். பேச்சை செயல்வடிவமாக்க வேண்டுமென்றால் அதற்கு பேச்சே ஒரு செயலாக மாறவேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டார். அண்ணா வழியில் அவரது தம்பிகள் திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகளாக மாற்றினார்கள். நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், கலைஞர், பேராசிரியர் அன்பழகன், மதியழகன், நாஞ்சில் மனோகரன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணியில் பேச்சு. தி.மு.க மேடைகளில் சிறப்புப் பேச்சாளர்கள்தான் மாப்பிள்ளை. பேச்சாளரைவிட உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் கட்சி நிர்வாகிகள்கூட, அந்த மேடையில் பேச் சாளருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தோளில் துண்டுடன் பேச்சாளர் மைக் முன் நிற்பது ஒரு கம்பீரம். மேடையைவிட்டு இறங்கியபிறகும் அந்த கம்பீரம் தொடர்ந்தது. பேச்சு, செயலானது. தேர்தல் களத்தில் வெற்றி கண்டது. ஆட்சி அமைத்தது. இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. துரைமுருகன், ரகுமான்கான், வைகோ, திருச்சி சிவா, நாஞ்சில் சம்பத், ஆ.ராசா, தமிழன் பிரசன்னா என அடுத்தடுத்த தலைமுறைகளிலும் கருத்தாளர் களான பேச்சாளர்களை உருவாக்கியதில் தி.மு.க. போன்ற மற்றொரு அரசியல் இயக்கம் இல்லை.
வ.நடராஜன், கூடுவாஞ்சேரி
வாக்காளர்கள் மட்டுமல்ல,… சட்டமன்ற உறுப்பினர்களும் விலைக்குக் கிடைக் கிற நிலை உருவாகி யுள்ளதே?…
ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கொடுப்பது என்பது பெரிய வேலை. கடினமான வேலை. அந்த வேலையைச் செய்து ஒருவர் எம்.எல்.ஏ. வாகிவிட்டால், அந்த ஒருவருக்கு லம்ப்பாக -வெயிட்டாக செட்டில் செய்து பர்சேஸ் செய்வது எளிதாயிற்றே! பா.ஜ.க. இந்த பர்சேஸிங் பாலிடிக் ஸைத்தான் கடைப் பிடிக்கிறது. அதே பாணியை மற்ற கட்சிகளும் கடைப் பிடிக்கலாம். எம்.எல்.ஏ.வுக்கு ரேட் ஏறினால் வாக்காளர்களுக்கும் ரேட் ஏறும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.
அதானி குடும்பத்தின் அனைத்துச் சொத்துக்களையும் பிரதமர் மோடி தேசியமயமாக்கி ஏலம்விடவேண்டும் என்று சுப்ரமணியசாமி கூறியுள்ளாரே
தேசத்திற்கு மிச்சமிருக்கும் சொத்துகளை அதானி குடும்பத்திற்கு விற்காமல் இருந்தால் போதாதா?