வாசுதேவன், பெங்களூரு

தட்சணைக்கும், வரதட்சணைக் கும் என்ன வித்தியாசம்..!

தட்டுல போடுங்க என்று சொல்லிவிட்டு, எத்தனை நோட்டு விழுகிறது என்று உன்னிப்பாகக் கவனிப்பதற்குப் பெயர் தட்சணை. உங்க விருப்பத்துக்கு செய்யுங்க என்று சொல்லிவிட்டு, எத்தனை பவுன் என்று கரெட்டாகக் கணக்கு பார்ப்பதற்குப் பெயர் வரதட்சணை.

Advertisment

mm

நடேஷ்கன்னா,கல்லிடைக்குறிச்சி

நடிகர் மயில்சாமி மறைவு குறித்து?

எளிமையானத் தோற்றம் -பழக்கம், தனது துறையில் வலிமையான -மக்கள் மனம் கவர்ந்த செயல்பாடு கள் என வாழ்ந்த இருவர் ஒரே நாளில் மரணம் அடைந் தார்கள். ஒருவர், நடிகர் மயில்சாமி. மற்றொருவர், முன்னாள் அமைச்சர் தஞ்சை எஸ்.என்.எம்.உபயதுல்லா. திரையில் மயில்சாமியை எல்லாருக்கும் தெரியவந்தது 1989ல் வெளியான கமலின் "அபூர்வ சகோதரர்கள்' படத்தில்தான். அதே 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றவர் எஸ்.என்.எம்.உபயதுல்லா. "சிரிப்போ சிரிப்பு' என்ற தலைப்பில் லஷ்மண்(ஸ்ருதி)யுடன் இணைந்து மயில்சாமி வெளியிட்ட மிமிக்ரி ஆடியோ கேசட் அப்போது தமிழ்நாடெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. அதில், ’"36 மொட்டைகளின் அட்டகாசங்கள்'’என்ற தலைப்பில் அன்றைய அரசியல் -திரையுலக -ஆன்மிக பிரபலங்கள பலரையும் மிமிக்ரி செய்து அதகளம் செய்திருப்பார் மயில்சாமி. அதே காலகட்டத்தில், தஞ்சையின் சுவர்களெங்கும் ஆயில் பெயின்ட்டில் ஒளிரும் வகையில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து, இரவிலும் சூரியஒளி தெரிவதுபோல அசத்தியிருந்தார் உபயதுல்லா. அப்போது ஸ்டென்சில் முறையில் சின்னங்கள் வரையப்பட்டு வந்த காலம். உபயதுல்லாவின் பிரச்சார உத்தி பின்னர் பிற தொகுதிகளுக்கும் முன்னுதாரண மானது. எம்.ஜி.ஆர். பக்தரான மயில்சாமி பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட நகைச்சுவைக் கலைஞர். கலைஞரின் உடன்பிறப்பான உபயதுல்லா, கட்சி பேதமின்றி மக்களை நேசிக்கும் பண்பு கொண் டவர். இலக்கிய ஆர்வ மிக்கவர். தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவித்தவர். எளி யோருக்கு உதவியவர். மயில்சாமிக்கும் உபய துல்லாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம். ஆனால், மனதளவில் இருவரும் உயர்ந்தவர் கள். அவர்கள் மரணம் கடந்து மனதில் நிலைக்கக் கூடியவர்கள்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

சீமான் இலங்கையை சார்ந்தது போல பேசுகிறாரே?

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காதபோது, ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி அசத்துவ தில்லையா? அதுபோலத்தான், தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் வெற்றி கனியாத நிலையில், இலங்கையை வைத்து அரசியல் ஆட்டம் நடத்துவது கிட்டத் தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. பழ.நெடுமாறன் கொஞ்சகாலம் ஆடினார். தமிழ் உணர்வாளர்கள், பெரியாரிஸ்ட்டுகள் உள்ளிட்டோர் கொஞ்சகாலம் ஆடினார்கள். வைகோ கொஞ்ச காலம் அத்தாரிட்டியாக இருந்தார். இப்போது சீமான் சீசன்.

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது ஏ.பி. வி.பி. மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து?

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் என்பது மாணவர்களுக்கான அரசியல் பயிற்சிக் களம். வரலாற்றை ஆராய்ந்து அறிந்த மாணவர் கள், உண்மை வரலாறு என்ன என்பதை உணர்ந்திருக் கிறார்கள். அதே நேரத் தில், புராண-இதிகாச வழி வரலாற்றை வ-யுறுத்துபவர் களும் அங்கே இருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீதாராம் யெச்சூரியும் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதே பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான். இடதுசாரி மாணவர் அமைப்பும், சமூக நீதி மாணவர் அமைப்பும் வலிமையாக உள்ள ஜவகஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏ.பி.வி.பி. அமைப்பு, அதிரடி வேலைகளை செய்து வருகிறது. தற்போது பா.ஜ.க .ஆட்சி என்பதால் கூடுதல் அட்டகாசங்கள். அதனால்தான், பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் நடத்திய நிகழ்வில் புகுந்து பெரியார், கார்ல்மார்க்ஸ், ஜோதிபா புலே, சாவித்திரி புலே உள்ளிட்டோரின் படங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏ.பி.வி.பி.யின் செயலுக்கு தமிழ்நாட்டு முதல்வர் வரை கண்டனக் குரல் எழுந்த நிலையில், தி.மு.க. எம்.பி. தர்மபுரி செந்தில்குமார் மீண்டும் அங்கே பெரியார் படத்தை மாட்டச் செய்திருக்கிறார். ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் பெரியார் பற்றிய கருத்தரங்கத்தை நடத்த தி.மு.க. இளைஞ ரணி-மாணவரணி திட்டமிட்டுள்ளது. நேரு என்ற பெயரே பா.ஜ.க தரப்புக்கு கசக்கும் போது, அந்த பெயரிலான பல்கலைக்கழகத் தில் இத்தனை தலைவர்கள் கொண்டாடப்படு வதை ஏற்றுக்கொள் வார்களா?

எம். செந்தில் குமார், சென்னை - 78

தி.மு.க. டாஸ்மாக் கில் வரும் பணத்தை ஈரோடு தேர் தலுக்கு செலவு செய்வ தாக அ.தி.மு.க. குற்றம்சாட்டுவது குறித்து?

தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி யில் இடைத்தேர்தல். அ.தி.மு.க ஆட்சியில் ஆர்.கே. நகர், ஸ்ரீரங்கம், சங்கரன்கோவில் எனப் பல தொகுதிகளில் இடைத்தேர்தல். எல்லா களங்களி லும் பணம் தண்ணீராகப் பாய்ந் தது. அதனால், பாம்பின் கால் பாம்பறியலாம்.