மாவலி பதில்கள்

ff

வாசுதேவன், பெங்களூரு

"இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேகத்தைக் காண்பீர்கள்' என்று செங்கோட் டையன் கூறியுள்ளாரே!

அ.தி.மு.க.வின் முதல் வேகமே திண்டுக்கல் இடைத்தேர்தலில்தான் வெளிப் பட்டது. புதுக் கட்சியான அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி, கோவை இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றிபெற்றது. பின்னர், புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்றது. அதன் பிறகே, 1977ல் தமிழ்நாட்டில் முதன்முறையாக எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. செங்கோட்டையன் பழைய கட்சிக்காரர். அவருக்கு அந்த வேகம் தெரியும். அவரால் கட்சிக்கு கொண்டுவரப் பட்டவர் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் இல்லை யென்றால், பழனிசாமியின் வாழ்க்கை திசை மாறியிருக் கக்கூடிய சூழல்கள் உண்டு. பழனிசாமியைக் காப்பாற்றிய செங்கோட்டையன், இடைத்தேர்தல் மூல

வாசுதேவன், பெங்களூரு

"இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேகத்தைக் காண்பீர்கள்' என்று செங்கோட் டையன் கூறியுள்ளாரே!

அ.தி.மு.க.வின் முதல் வேகமே திண்டுக்கல் இடைத்தேர்தலில்தான் வெளிப் பட்டது. புதுக் கட்சியான அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி, கோவை இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றிபெற்றது. பின்னர், புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்றது. அதன் பிறகே, 1977ல் தமிழ்நாட்டில் முதன்முறையாக எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. செங்கோட்டையன் பழைய கட்சிக்காரர். அவருக்கு அந்த வேகம் தெரியும். அவரால் கட்சிக்கு கொண்டுவரப் பட்டவர் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் இல்லை யென்றால், பழனிசாமியின் வாழ்க்கை திசை மாறியிருக் கக்கூடிய சூழல்கள் உண்டு. பழனிசாமியைக் காப்பாற்றிய செங்கோட்டையன், இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க.வையும் காப்பாற்ற நினைக்கிறார். இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் ஆளுக்கொரு பக்கமாக இழுக் கிறார்கள்.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

இ.பி.எஸ். மீது பல வழக்குகள் என்று பேசப்பட் டாலும், அவர் ஆளும் கட்சி தி.மு.க. மற்றும் மத்திய ஆட்சி யிலுள்ள பா.ஜ.க. பற்றி கவலைப் படாமல் தேர்தல் களம் சந்திப்பது பற்றி?

போர்க்களத்தில் விழுப் புண் என்பார்கள். அரசியல் களத்தில் வழக்குகள். அதை வைத்தே தன் தலைமையைத் தக்கவைத்துக்கொள்ளும் கலையை அறிந்திருக்கிறார் இ.பி.எஸ். அரசிய லுக்கு வருவதற்கு முன்பிருந்தே கொலை வழக்கு உள்ளிட்டவற்றைக் கண்ட அனுபவசாலி அவர். கேஸ்-கேஷ் இரண்டும் ஒன்றை யொன்று சமாளித்துக்கொள்ளும் என்பதை அறிந்திருக்கிறார் இ.பி.எஸ்.

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

இன்றைய தலைமுறை ரசிகர் கள் தடம் மாறுகிறார்களா?

ரசிகர்கள் என்றால் ஆண்களை மட்டும் குறிக்கிறதா? பெண்களையும் சேர்த்துக் குறிக்கிறதா? இருதரப்புக்குமே ரசனை உண்டு. முன்பு, அதை வெளிப்படுத்தும் வாய்ப்பு ஆண் ரசிகர்களுக்கு மட்டுமே அதிகமாக இருந்தது. அதனால் அவர்கள் தங்கள் அபிமான நடிகர்-நடிகையின் படம் ஓடும் தியேட்டர் வாசலில் அதனை வெளிப்படுத்தினார்கள். பொது நிகழ்ச்சிகளை நடத்தி வெளிப்படுத்திக்கொண்டார்கள். இப்போது நாம் வாழ்வது, மெய்நிகர் (ஸ்ண்ழ்ற்ன்ஹப்) உலகம். எந்த உணர்வையும் உடனுக்குடன் வெளிப்படுத்திக் காட்டக்கூடிய தளங்கள் அதிகம் உள்ளன. ரஜினியின் தர்மதுரை படம் வெளியானபோது, அதில் அவர் ஒரு காட்சியில் வருவது போலவே, விலைப்பட்டியல் தொங்கும் சட்டை, பேண்ட், தொப்பி, கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொண்டு தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். தளபதி படத்தின்போது, ஜப்பானிய சாமுராய் பாணியில் தலையில் கொண்டை போட்டுக்கொண்டு ரசிகர்கள் வந்தார்கள். அண்ணாமலை படத்திற்கு சைக்கிளில் பால் கேன் கட்டிக்கொண்டு வந்தார்கள். அன்றைக்கு ஆண்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருந்தது. இன்று, பெண்களும் தங்கள் உணர்வை வெளிப்படுத்த டிக்-டாக், ரீல்ஸ் போன்ற தளங்கள் இருப்பதால், நயன்தாராவாக, சமந்தாவாக வெளிப்படுத்தி வீடியோ வெளியிடுகிறார்கள். ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, ராதா, குஷ்பு ரசிகைகளாக இருந்த பெண்களும்கூட பழைய நினைவுகளோடு வீடியோ வெளியிட்டு அதிர வைக்கிறார்கள். அதனால், ரசிகர்கள் தடம் மாறவில்லை. அவர்களுக்கான தளம் மாறியிருக்கிறது.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

மொகல் தோட்டத்தை அமிர்த தோட்டம் என பெயர் மாற்றம் செய்வதால் இந்தியா வல்லரசு ஆகிவிடுமா?

வரலாற்றை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் வரலாற்றைத் திரிப்பது பா.ஜ.க. அரசின் வேலை. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலிருந்தே இதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு, மோடி ஆட்சியில் அது வேகம் எடுத்துள்ளது. டெல்லியில் ஔரங்கசீப் பெயரிலான இடத்திற்குப் பெயர் மாற்றினார்கள். டெல்லி அருகே உள்ள பிற பகுதிகளின் பெயர்களையும் மாற்றினார்கள். அதுபோல ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் உள்ள மொகல் தோட்டத்தை அமிர்த தோட்டமாக்கியிருக்கிறார்கள். மொகல் தோட்டம் என்றதும் அது ஏதோ மொகலாயர்கள் அமைத்த தோட்டம் என்கிற அளவுக்கு வரலாற்று அறிவு கொண்டவர்களாக பா.ஜ.க. ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில், அது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட தோட்டம். வெள்ளைக்காரன் போட்ட தண்டவாளத்தில் ஓடும் ரயிலில்தான் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் வாழும் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தே மாதவராஜ், கோயமுத்தூர்-45

எது தர்மம்? எது அதர்மம்?

எனக்கு வந்தால் ரத்தம். உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. அதுபோல நமக்கு விருப்பமானது நடந்தால் தர்மம். இல்லையென்றால், அதர்மம்.

nkn040223
இதையும் படியுங்கள்
Subscribe