வாசுதேவன், பெங்களூரு
ஈரோடு இடைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு..?
காங்கிரஸ் ஆட்சி செய்த 1963ஆம் ஆண்டில் திருவண்ணா மலை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. முதலமைச்சர் காமராஜர் தொடங்கி அமைச்சர்கள் பலரும் முகாமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். கடும் போட்டி நிலவிய அந்தத் தேர்தல் களத்தில், தி.மு.க. வேட்பாள ரான ப.உ.சண்முகம் வெற்றி பெற்றார். 1967ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தபோது, காங்கிரசில் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தோல்வியடைந்தனர். ஆனால், 1968ல் நடந்த நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கிய காமராஜர் வெற்றி பெற்றார். 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் அப்போதைய புதிய கட்சியான அ.தி.மு.க. போட்டியிட் டது. இரட்டை இலை சின்னத்தில் நின்ற அக்கட்சியின் வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். இரண்டாவது இடம், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் வேட் பாளருக்கு கிடைத்தது. மாநில ஆளுங்கட்சி யான தி.மு.க 3வது இடத்
வாசுதேவன், பெங்களூரு
ஈரோடு இடைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு..?
காங்கிரஸ் ஆட்சி செய்த 1963ஆம் ஆண்டில் திருவண்ணா மலை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. முதலமைச்சர் காமராஜர் தொடங்கி அமைச்சர்கள் பலரும் முகாமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். கடும் போட்டி நிலவிய அந்தத் தேர்தல் களத்தில், தி.மு.க. வேட்பாள ரான ப.உ.சண்முகம் வெற்றி பெற்றார். 1967ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தபோது, காங்கிரசில் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தோல்வியடைந்தனர். ஆனால், 1968ல் நடந்த நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கிய காமராஜர் வெற்றி பெற்றார். 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் அப்போதைய புதிய கட்சியான அ.தி.மு.க. போட்டியிட் டது. இரட்டை இலை சின்னத்தில் நின்ற அக்கட்சியின் வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். இரண்டாவது இடம், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் வேட் பாளருக்கு கிடைத்தது. மாநில ஆளுங்கட்சி யான தி.மு.க 3வது இடத்திற்கு சென்றது. மத்திய ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. எம்.ஜி.ஆர். தலைமையி லான அ.தி.மு.க ஆட்சியின்போது அண்ணாநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, உப்பிலியாபுரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. உப்பிலியாபுரம் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வென்றது. தஞ்சாவூரில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வென்றது. அண்ணாநகர், மயிலாடுதுறை ஆகிய 2 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான தி.மு.க. வெற்றி பெற்றது. 1989 தி.மு.க. ஆட்சியில் மதுரை கிழக்கு, மருங் காபுரி ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. "ஜா-ஜெ' என பிளவு பட்டிருந்த அ.தி.மு.க. மீண்டும் ஒன்று சேர்ந்தது. இரட்டை இலையை மீட்டது. 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது. இப்படியெல்லாம் பரபரப்பாக இருந்த இடைத்தேர்தல் களம் 1991க்கு பிறகு மாறியது. 1993ஆம் ஆண்டில் லட்டுக்குள் மூக்குத்தி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கிய மயிலாப்பூர் இடைத்தேர்தலில் தொடங்கி, 2005ல் நடந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்கள் வரை அ.தி.மு.க.வின் கவனிப்புகள், ஆளுங்கட்சிக்கே இடைத்தேர்தல் களம் என்ற நிலைமையை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ஃபார்முலா எனப் பெயர்பெற்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்பின் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எந்தத் தேர்தல் களமாக இருந்தாலும் சிறப்பு கவனிப்புகளில் அரசியல் கட்சிகள் இறங்க, அதனை எதிர்பார்க்கும் மனநிலையும் மக்களிடம் வந்துவிட்டது. ஒரு தொகுதியில் எதிர்க்கட்சி ஜெயிப்பதால், ஆட்சியா மாறப்போகுது? ஆளுங்கட்சி ஜெயித்தால் தொகுதியின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறும் என்ற எண்ணத்திற்கு மக்களும் ஆளாகிவிட்டார்கள்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
சமீபகாலமாக பொதுயிடங்களில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து?
அமைச்சர் ஆவடி நாசர், கல்லெறிவது போன்ற வீடியோவும், அமைச்சர் கே.என்.நேரு ஒரு மேடையில் ஆட்களை நெட்டித் தள்ளுகின்ற வீடியோவும் பரவலாகி, என்ன இப்படியெல்லாம் அமைச்சர்கள் நடந்துகொள்கிறார்களே என்ற விமர்சனத்திற்கு காரணமாகியிருக்கின்றன. செல்போன் கேமராக்கள் பற்றிய கவனம் வேண்டும் என்று கட்சித் தலைவரான முதலமைச்சர் பொதுக் குழு கூட்டத்தில் ஓப்பனாகப் பேசியும் இப்படியா என்ற எண்ணமும் ஏற்பட்டது. அந்த இது இரு நிகழ்ச்சிகளும் பொதுநிகழ்ச்சிகள் அல்ல. இரண்டுமே கட்சி நிகழ்ச்சிதான். நாற்காலிகளை எடுத்துப் போடச்சொல்லி, நிர்வாகி ஒருவரிடம் கோபம் காட்டும் வகையில் கல்லை வீசுகிறார் அமைச்சர் நாசர். அவருடைய பதவிக்கு அது அழகல்ல. ஆனால், தன் தலைவர் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சி சரியான முறையில் அமைய வேண்டும் எனக் கருதுகிற மாவட்டச் செயலாளராக அவர் காட்டிய வேகத்தின் வெளிப்பாடு அது. அவர் யாரையும் குறி வைத்தும் கல் வீசவில்லை, யாருக்கும் காயமும் படவில்லை. ஒரு கட்சி நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணி, கட்சி நிகழ்ச்சியில் குவியும் தொண்டர்களைக் கட்டுப் படுத்தும் பணி, அமைச்சர் உதயநிதியைக் காண மேடையேறிய கூட்டத்தின் வரிசையைக் கட்டுப்படுத்த, சீனியர் அமைச்சர் கே.என்.நேரு, தொண்டர் களை வேகமாக அப்புறப்படுத்துகிறார். இங்கும் ஒரு கட்சி நிர்வாகிக்குரிய பணியைத்தான் அமைச்சர் செய்திருக்கிறார். 2 அணுகுமுறைகளையும் தவிர்த்திருக்கலாம் என்று கருதுவதற்கும், விமர்சிப்பதற்கும் இடம் உண்டு. சமூக வலைத்தளங்களில் வெளியான இவை படுபாதக செயல் அல்ல. எது படுபாதகம் என்றால், குஜராத் கொடூர வன்முறையும், அதை அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என தடுக்கும் அதிகார மமதைதான் படுபாதகமானது.
கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு
நடிகர்களின் மாயவலையிலிருந்து இன்றைய கால இளைஞர் களை மீட்பது எப்படி?
1940களில் இதே கேள்வி எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா ரசிகர்களை நோக்கி வைக்கப்பட்டது. 1960களில் இதே கேள்வி எம்.ஜி.ஆர்-சிவாஜி ரசி கர்கள் முன் வைக்கப்பட்டது. 1980களில் ரஜினி-கமல் ரசிகர் களிடம் கேட்கப்பட்டது. இப்போது விஜய்-அஜீத் ரசிகர்களும் இதே கேள்வியை எதிர்கொள்கிறார்கள். காலமே மாயவலைதானோ!