மாவலி பதில்கள்

mm

த.சத்தியநாராயணன், அயன்புரம்

ரயில், பஸ் இரண்டில் எதில் ஜன்னலோர சீட்டு சுகமானது?

ஜன்னல்கள் என்பவை அன்றைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்ட்ராய்டு செல்போன்கள். உள்ளே இருந்தபடியே ஊரின் நடப்புகளை ஓரளவு தெரிந்துகொள்ள ஜன்னல்களே உதவியாக இருந்தன. குறிப்பாக, பெண்களின் வெளியுலகம் என்பது ஜன்னல் வழியே காண்பதாக மட்டுமே இருந்தது. ரயில், பஸ், வீடு எதுவாக இருந்தாலும் ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கும்போது, மனது பறவையாகி உலகையே ஒரு சுற்று சுற்றி வந்து மீண்டும் நம்மிடமே வந்து உட்கார்ந்துகொள்ளும்.

ஜெ.கிருஷ்ணதேவு, எல்.ஆர்.பாளையம் -புதுச்சேரி

"தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்' என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி யின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாடு என்பதால் தனி நாடு போல தொனிக் கிறது என்பதுதான் தேசபக்தர் ஆளுநர் ரவியின் அதீத கவலை. நமது அரசியல் சாசனத்தின் முதல் அம்சமே, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதைத் தெளிவாக வலியுறுத்தியுள்

த.சத்தியநாராயணன், அயன்புரம்

ரயில், பஸ் இரண்டில் எதில் ஜன்னலோர சீட்டு சுகமானது?

ஜன்னல்கள் என்பவை அன்றைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்ட்ராய்டு செல்போன்கள். உள்ளே இருந்தபடியே ஊரின் நடப்புகளை ஓரளவு தெரிந்துகொள்ள ஜன்னல்களே உதவியாக இருந்தன. குறிப்பாக, பெண்களின் வெளியுலகம் என்பது ஜன்னல் வழியே காண்பதாக மட்டுமே இருந்தது. ரயில், பஸ், வீடு எதுவாக இருந்தாலும் ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கும்போது, மனது பறவையாகி உலகையே ஒரு சுற்று சுற்றி வந்து மீண்டும் நம்மிடமே வந்து உட்கார்ந்துகொள்ளும்.

ஜெ.கிருஷ்ணதேவு, எல்.ஆர்.பாளையம் -புதுச்சேரி

"தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்' என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி யின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாடு என்பதால் தனி நாடு போல தொனிக் கிறது என்பதுதான் தேசபக்தர் ஆளுநர் ரவியின் அதீத கவலை. நமது அரசியல் சாசனத்தின் முதல் அம்சமே, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதைத் தெளிவாக வலியுறுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாடும் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பண்பாடும் வரலாறும் உண்டு. அதில் தனித்துவமான பண்பாடும் வரலாறும் கொண்டது தமிழ்நாடு. அதனால்தான் சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்தார் தியாகி சங்கர லிங்கனார். தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்குத் தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். கம்யூனிஸ்ட் இயக்கத் தினர் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இதனை வலியுறுத்தினர். அலுவலக நடைமுறை அளவில் தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தியது காமராஜர் காலத்து காங்கிரஸ் அரசு. ஆனால், சென்னை மாகாணம் என்ற பெயரே அதிகாரப்பூர்வமாக நீடித்தது. 1967ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேறியது. தமிழ்நாடு என்று 3 முறை அண்ணா முழங்க, அத்தனை உறுப்பினர்களும் வாழ்க வாழ்க என்று முழங்கினர். பின்னர், அந்தத் தீர்மானத் திற்கு இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டு, தமிழ்நாடு என்ற பெயர் இந்த மாநிலத்திற்கு அதிகாரப்பூர்வமாக அமைந்தது. இந்தப் பெயர்தான் தனி நாடு என்பது போல ஆளுநருக்கு உறுத்துகிறது. ராஷ்ட்ரபதி பவன் என்றால் நாட்டை ஆளும் ஜனாதிபதியின் மாளிகை என்று பெயர். அப்படியென்றால், மகாராஷ்ட்ரா என்ற மாநிலத்தை, நாட்டைவிட பெரிய நாடு என்று நினைத்துக்கொள்ள முடியுமா? அப்படித்தான் தமிழ்நாடும்.

தே.மாதவன், கோயமுத்தூர்-45

மதவாதத்திற்குத்தான் எதிரியே தவிர மதத்திற்கு அல்ல என்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?

பிறப்பின் அடிப்படையில் சாதி அடையாளத்தை உருவாக்கி ஏற்றத்தாழ்வான சமுதாயத்தை உருவாக்கிய ஆரியத்திற்கு எதிரானதே திராவிட இயக்கம். சாதிப் பிரிவினையைக் காப்பாற்றும் வருணாசிரமம், மனுதர்மம், அதனைப் புனிதமாகக் கருதும் புரோகிதம் இவற்றுக்கு எதிராக பல நூறாண்டுகளாக பண்பாட்டுப் போர் நடத்திவரும் மண் தமிழ்நாடு. அதன் அரசியல் வடிவம்தான் திராவிட இயக்க சித்தாந்தம். மதத்தின் பெயரால் இத்தகைய பிரிவுகளை ஏற்படுத்தும் மதவாதிகளுக்கு எப்போதும் அது எதிராகவே இருக்கும். அதனால் பாதிக்கப்படும் மதவாதிகளும் மதவாதத்தால் அரசியல் நடத்துபவர்களும், தி.மு.க.வை இந்து விரோதி என் கிறார்கள். அனைத்து இந்துக்களுக்குமான மதவழிபாட்டு உரிமைகளை மதவாதிகள் பெற்றுத் தரவில்லை. திராவிட இயக்கத்தின் போராட்டமும் சட்டங்களும்தான் பெற்றுத் தந்தன.

mm

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ராகுல் தமிழகத்திலிருந்து போட்டியிடப்போவ தாக அறிவித்திருப்பது குறித்து?

ராகுலின் பாட்டி இந்திராகாந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த நேரம். அதன்பின் 1979ல் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்திரா காந்தி தஞ்சையில் போட்டி யிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. காரணம், வடஇந்தியா முழு வதும் காங்கிரஸ் தோல்வியடைந் திருந்தாலும் தென்னிந்தியா வில், குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருந்தது. அதனால், இடைத்தேர்தலில் தஞ்சையில் இந்திரா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அரசியல் நெருக்கடிகளால் தயங்கினார். அதனால், தஞ்சைக்குப் பதில் கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் இந்திராகாந்தி. பாட்டிக்கு கிடைக்காமல் போன வாய்ப்பு, பேரனுக்கு கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

எட்டுவழிச் சாலை திட்டத்தில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டது என்கிறாரே, ஓ.பன்னீர்செல்வம்?

உருப்படியாக ஒரு கேள்வி கேட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்றுதான் அன்று நாங்கள் எதிர்ப்பு தெரிவித் தோம் என்கிறார் இன்றைய அமைச்சர் எ.வ.வேலு. விவசாயிகளுக்குப் பாதிப்பில்லாமல் இப்போது எப்படி திட்டத்தை நிறைவேற்றப்போகிறார்கள் என்பதை விளக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை.

nkn110123
இதையும் படியுங்கள்
Subscribe