பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்-தேனி

"அரசியலுக்கு வந்தபின் இருமல் வந்தால் கூட பெரிய செய்தியாக்கிவிடுகின்றனர்".. என்று கமல் கூறியது பற்றி...?

இருமல் வரப்போகிறதாம் என்பதுகூட அரசியலில் செய்திதான். சினிமாவில் ஷூட்டிங் முடித்ததும் மேக்கப்பை கலைக்க வேண்டியிருக்கும். அரசியலில் தானாகவே மேக்கப் கலைந்துவிடும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

இலவசங்கள் அறிவிப்பு தவறு என்று முன்பு கூறிய பா.ஜ.க. தற்போது குஜராத் தேர்தலில் இலவசங்களை அள்ளிவிடுகிறதே?

மண்டல் கமிஷனை வி.பி.சிங் நடைமுறைப்படுத்திய போது, இடஒதுக்கீடு என்றால் பிச்சை என்றும் அதனால் தகுதி -திறமை போய்விடும் என்றும் சொல்லிவிட்டு, முன்னேறிய வகுப்பினரில் பொருளா தாரத்தில் நலிந்தவர்களுக்கு 10% இடஒதுக்கீட் டுப் பிச்சை போட்டு, தகுதி-திறமை போனாலும் பரவாயில்லை என சட்டம் கொண்டுவரவில்லையா? அது போலத்தான்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

Advertisment

இந்திய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்களே மோடியும், அமித்ஷாவும்?

ஆமாம்! மாற்றி அமைக்கத்தான் வேண்டும். ஆனால், மோடியும் அமித்ஷாவும் எதிர்பார்ப்பது போல அல்ல. இமயத்தி லிருந்து எழுதப்படும் வரலாற்றை குமரி முனையி லிருந்து தொடங்க வேண் டும். கங்கையிலிருந்து எழுதப் படும் வரலாற்றை காவிரியி லிருந்து தொடங்க வேண்டும். வடக்கி லிருந்து எழுதப்படும் வரலாற்றை தெற்கிலிருந்து எழுதத் தொடங்க வேண்டும். அறிவியல்பூர்வமாகவும், ஆய்வுகள் பூர்வமாகவும் இந்தியாவின் பூர்வகுடிகள் தெற்குப் பகுதியைச் சார்ந்தவர் களே என மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியர்கள் திராவிடர்களாக, நாகர்களாக இந்தியா முழுவதும் நிறைந் திருந்ததை அம்பேத்கர் உள் ளிட்டவர்கள் ஆதாரங்களு டன் வெளிப்படுத்தி இருக்கி றார்கள். அவர்களின் வாழ் வியல் முறை என்ன, அது எங்கே முடிவுக்கு வந்தது, அதன் மீது தாக்கம் ஏற் படுத்திய ஆதிக்கம் எது என்கிற வரலாறு அழுத்தமாக எழுதப்பட்டு, உரக்கப் படிக்கப்பட வேண்டும்.

தே.மாதவன், கோயமுத்தூர்

வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வேலைக்கு படையெடுக்க காரணம்?

50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டைக் குட்டிச்சுவ ராக்கி விட்டார்கள் என்று திரும்பத் திரும்ப உருட்டுகிற வர்களின் உச்சந்தலையில் ஓங்கிக் குட்டுவது போல வெளிமாநிலத்தவர்கள், குறிப்பாக வடமாநிலத்தவர் கள் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்து கொண்டிருக் கிறார்கள். இந்தி படித்தால் பிற மாநிலங்களுக்கு வேலைக் குப் போகலாம் என்றும், அப்படிப்பட்ட இந்தியைப் படிக்க விடாமல் தடுத்துப் பாழாக்கிவிட்டார்கள் என் றும், கீறல் விழுந்த ரிகார்டு போல சொல்லிக்கொண்டிருக் கும் கூட்டத்திற்குப் பதிலடி கொடுப்பது போல இந்தி பேசும் மாநிலங்களைச் சோர்ந் தவர்கள் அங்கே வேலை கிடைக்காமல் இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதி கள் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக இருக்கின்றன. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறி யாகி இருக்கின்றன. கூலி வேலை பார்த்த தாத்தாவும் அப்பாவும் போல இல்லாமல் அடுத்த தலைமுறை இளைஞர்கள் உயர்கல்வி வரை படித்திருப்பதால், அவர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலையைத் தேடுகிறார்கள். அதனால், கூலி வேலைக்கு வெளிமாநிலங்களிலிருந்து ஆட்களைக் கொண்டு வருகிறார்கள் முதலாளிகள். அந்த வேலையை இங்குள்ள இளைஞர்கள் செய்தால் 500 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். வடமாநிலத் தொழிலாளர்கள் என்றால் 300 ரூபாய்க்கும் குறைவாக இருந்தாலும் போதும். வேலை செய்யும் இடத்திலேயே தங்கி, நேரம் பார்க்காமல் வேலை செய்து, சீக்கிரம் முடித்துத் தந்துவிடுவார்கள் என்கிற வணிகப் பார்வை இதில் முக்கியமானது. அதுவே உழைப்புச் சுரண்டலாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் டாஸ்மாக்கில் கிடக்கிறார்கள் என எளிதாகப் பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, வடமாநிலத் தொழிலாளர்களை குறைந்த கூலியில் வேலை வாங்கும் போக்கு அதிகரிக்கிறது. இந்தக் கூலியே அவர்களுக்கு அதிகமாகத் தெரிவதாலும், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, 20 கிலோ விலை யில்லா அரிசி அல்லது கோதுமை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி போன்றவை கிடைப்பதால் தங்கள் சொந்த மாநிலத்தைவிட, வந்த மாநிலமான தமிழ்நாட்டை விரும்பு கிறார்கள். சொந்தக்காரர்களையும் இங்கே அழைத்து வந்துவிடுகிறார் கள். இது எதிர்காலச் சிக்கலை ஏற்படுத்தக்கூடியது. வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டுக்கு இது ஒரு சவால். இதில் சமமான -சமத்துவமான அணுகுமுறையை அரசு உடனடியாக மேற்கொண்டாக வேண்டும்.

dd

பி.மணி, குப்பம் -ஆந்திரா

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை?

தொலைவில் இருந்து கண்களால் பார்த்து திரும்பியவர்கள் நெருங்கி வந்து அலையில் நனைகிறார்கள். மானுடம் போற்றும் கடலோரக் கவிதை.