பி.மணி, வெள்ளக்கோவில்

இந்தியாவில் அதிவிரைவாக செல்கிற "வந்தே பாரத்' ரயில் அடிக்கடி பஞ்சர் ஆகிப் போகிறதே?

ரயில்வே டிராக்கில் மாடு குறுக்கே வந்ததால் வந்தே பாரத் ரயில் நொந்தே போய்விட்டதாம். அதனால், மாடு வளர்ப்பவர்கள் மீது கேஸ் போடப்போகிறார்களாம். இந்த விபத்துகள் பற்றி நீங்கள் கேள்வி கேட்டால், உங்கள் மீதும் வழக்கு போடலாம். பதில் சொன்னால் என்மீதும் வழக்கு போடலாம். ரயிலுக்கு பஞ்சர் போடுவதாகத் தெரியவில்லை.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

Advertisment

"புதிய போக்குவரத்துத்துறை விதிமுறை சட்டத்திருத்தத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா?' நீங்கள்...?

எந்த சட்டமாக இருந்தாலும் அது நாட்டுக்கு நலன் தருவதாகவும் மக்க ளுக்கு நன்மை செய்வ தாகவும் இருக்க வேண் டும். சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் அதிகள வில் நடக்கின்ற காரணத் தால், அதைத் தடுப்பதற் காக புதிய சட்டவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, அப்படி ஓட்டுபவரின் பின்னால் உட்கார்ந்து செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்பட பலவற்றுக்கும் அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் விலையைவிட அபராதம் அதிகம் என்கிறார்கள் சிக்கிக்கொண்டவர் கள். சட்டத்தின் நோக்கம் சரியாக இருந்தாலும் செயல்படுத்தும் முறையும் மிக முக்கியமானது. நடுத்தர மக்களின் வாகனம் டூவீலர். அதுபோல, இப் போது காரும் நடுத்தர குடும்பத்திற்குத் தேவையான வாகனமாகியுள்ளது. நடுத்தர வர்க்கத்தை நெருக்கடிக் குள்ளாக்கும் வகையில் சட்டங்களின் கடுமை இருக்குமானால் அது மக்களுக்கும் அரசுக்கும் நல்ல விளைவை ஏற்படுத்தாது. புதிய விதிமுறைகளில் போதிய திருத்தம் அவசியம். இல்லையென்றால், போக்குவரத்து விதிமீறல் என்ற பெயரில் காவல் துறை தரும் நெருக்கடி, ஆட்சியாளர்களுக்கான தேர்தல் நேர நெருக்கடியாகிவிடும்.

செந்தில்குமார் எம்., சென்னை-78

Advertisment

"வேலையின்மையே மோடி அரசின் எட்டாண்டு கால சாதனை' என ப.சிதம்பரம் சாடுவது குறித்து?

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்பது மோடி அளித்த வாக்குறுதி. 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்காவது வேலை கொடுத்திருக்க வேண்டும். அதற்கான பட்டியல் கேட்டால் கிடைக்காது. அநேகமாக, அவர் வழிகாட்டுதலில் பஜ்ஜி சுடும் வேலைக்குச் சென்றவர்கள் அந்தப் பட்டியல் தாளில் பஜ்ஜி, வடை, போண்டாவை மடித்துக் கொடுத்திருக்கலாம். இப்போது திடீரென மத்தியஅரசுப் பணியில் வேலை என்று தீபாவளி வாணவேடிக்கை விடுகிறார். இதைத்தான் ப.சிதம்பரம் நேரடியாக சாடுகிறார்.

dd

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"ஆர்.எஸ்.எஸ். காபியை போன்றது. அதன்மீது மிதக்கும் நுரைதான் பா.ஜ.க.'என்ற பிரசாந்த் கிஷோரின் ஒப்பீடு சரியா சார்?

வாசனை தூக்கலாகத் தெரியும் நுரையை நம்பி, காபியை உறிஞ்சினால் அதன் விளைவுகளை நுரையீரல் வரைக்கும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்கிறாரோ பிரசாந்த் கிஷோர். இவர் தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்று பல கட்சியினருக்கும் தேர்தல் வியூகப் பணி செய்தவர். மோடியின் பா.ஜ.க.வுக்கும் செய் திருக்கிறார். அனுபவ வார்த்தைகளாக இருக்கலாம்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

தெலுங்கானா எம்.எல்.ஏ.க் களை பா.ஜ.க. இழுக்கும் முயற்சிக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது பற்றி?

பா.ஜ.க. இதுபோல மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் என்பது எல்லா அரசியல்வாதி களுக்கும் தெரிந்ததுதான். ஒருவேளை, சி.பி.ஐ. இதை எப்படி விசாரிக்கும் என்ற உண்மை தெரிந்துதான் அனுமதி மறுத்திருக்கிறாரோ தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவ்!

மஞ்சுவாசுதேவன், பெங்களூரு

குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலத்தில் ஏற்பட்ட 160 பேரை பலிவாங்கிய விபத்து.! தென் கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் நெரிசலில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்து விட்ட சோகம் குறித்து..!

ஒன்று, பழைய பாலத்தைப் புதுப்பித்ததுவிட்டதாக நம்பிச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கொடூர முடிவு. மற்றொன்று, பாரம்பரிய திருவிழாவில் கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியின் மோசமான விளைவு. ஹாலோவீன் சாவுகளுக்கு தென்கொரிய அதிபர் பொறுப்பேற்று, நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் பிரதமராக உள்ள நிலையிலும், விபத்து நடந்த மறுநாள், அதே மாநிலத்தில் உள்ள பட்டேல் சிலை முன்பு நடந்த விமானப்படை சாகசங்களைக் கண்டு ரசித்தார். உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனைக்கு வெள்ளை அடித்துவிட்டார்களா என்பதை உறுதி செய்துகொண்டு போய் பார்த்தார்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

தமிழ்நாடு சார்ந்த இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் என்று இருவரும் பொறுப்பு கவர்னர்களாகவும் இருக்கிறார்களே?

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளில் தேர்தலில் ஜெயித்தாலும் பதவி கிடைக்குமா என்ற ஏக்கம் இருக்கும். பா.ஜ.க.வில் தேர்தலில் தோற்றாலும் டபுள் பதவி கிடைக்கும்.