பி.மணி, வெள்ளக்கோவில்

மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்க ஒரு வழி சொல்லுங்களேன்?

பொதுக்குழுவைக் கூட்டுங்களேன்.

dd

Advertisment

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77

கிரிக்கெட் வாரிய தலைவர். பதவியில் இருந்து கங்குலி நீக்கம் பற்றி?

இந்தியாவில் கிரிக்கெட் என்பது பார்வையாளர்களுக் குத்தான் விளையாட்டு. அதனை நிர்வாகிப்பவர்களுக்கு மிகப்பெரும் அரசியல் அதிகாரம். விளையாடும் வாய்ப்பு கிடைத்தவர்கள்-கிடைப்பவர்களின் பின்னணியில் அந்த அரசியல் பலமாக இருக்கும். விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனவர்களுக்கு அந்த அரசியல் எப்படிப்பட்டது என்பது அனுபவப்பூர்வமாகத் தெரியும். இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள் தங்களின் பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் விளையாடியபோது, அவர்களுடன் ஆடுவதற்காக தங்களுக்குத் தெரிந்த இந்தியாவின் பெரிய மனிதர்களையும், தங்களிடம் வேலை செய்தவர்களில் உயர்வாகக் கருதிக் கொண்டவர்களையும் பயன்படுத்திக் கொண்டனர். வெள்ளைக்காரன் போன பிறகு, அந்த விளையாட்டு என்பது, தாங்கள்தான் உயர்பிறவிகள் எனத் தங்களைத் தாங்களே கருதிக்கொள்ளும் சமூகத்தினரின் கைகளில் வந்தது. கிரிக்கெட் வாரியத்தில் அவர்கள் வைத்ததே சட்டம் என்ற நிலை உருவானது. பிறகு, அதில் அரசியலும் கலந்தது. சாதி அதிகாரமும் அரசியல் அதிகாரமும் கைகோத்துக் கொண்டு, திறமையான எளிய வீரர்களைப் பின்னுக்குத் தள்ளியது. இந்திய அணிக்காக சாதித்த பல வீரர்கள் ஓரங்கட் டப்பட்டனர். இந்திய கிரிக் கெட்டுக்கு முதன்முதலில் உலகக் கோப்பை வென்று காட்டிய அணித்தலைவர் கபில்தேவ், வாரியத்திலும் அதற்கு வெளி யிலும் நிலவிய அதிகார அரசியலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கடைசியில் கண்ணீர் விட்டு ஒதுங்கிய காட்சி இப்போதும் மனதில் நிற்கிறது. சச்சின் டெண்டுல்கரின் நண்பர் வினோத் காம்ப்ளி நிலை என்னவானது என்பது மும்பை கிரிக்கெட்டர்களுக்குத் தெரியும். தோனி நிலைத்ததற்கும், நீங்கியதற்கும் பின்னணியிலும் அரசியல் உண்டு. கவாஸ்கர், ஸ்ரீகாந்த், ராகுல் டிராவிட் என ஒவ்வொருவர் சம்பந்தப்பட்ட அளவிலும் கிரிக்கெட் அரசியல் கோலோச்சுகிறது. கங்குலிக்கு வாரியத் தலைவர் பதவி கிடைத் ததும், நீட்டிப்பு கிடைக்காமல் போனதும் அரசியல் பின் னணியால்தான். இதுபோன்ற நேரங்களில் மனது திடமாக இருப்பதற்கு ஓம் ஷாந்தி என்பார்கள். கிரிக்கெட்டில் இன்றைய நிலையில், "ஜெய் ஷா'ந்தி என்பவர்களால்தான் தாக்குப்பிடிக்க முடியும்.

நடேஷ், கல்லிடைக்குறிச்சி

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என நிர்மலா சீதா ராமன் கூறி இருப்பது பற்றி

ஆமாம்.. முதலில் நிஜமான அல்வா கிண்ட வேண்டும். அது ஒரு சம்பிரதாயம். அதன்பின் பட்ஜெட் என்ற பெயரில் ஓர் அல்வா கிண்ட வேண்டும். இந்தியா போன்ற பல மாநிலங் களைக் கொண்ட 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் பட்ஜெட் தயாரிப்பு என்பது கடினமான பணிதான். உண்மை யான பொருளாதார அறிஞரான டாக்டர் மன்மோகன்சிங் பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருக்கிறார். மக்களின் மனநிலை உணர்ந்த அரசியல் வாதியான ப.சிதம்பரம் பல பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருக்கிறார். மன்னர் பரம்பரையில் பிறந்து மக்களுக்காக வாழ்ந்த வி.பி.சிங் நிதியமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய் திருக்கிறார். இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர். இப்படி நிறைய பெருமைகள் கொண்டது இந்திய பட்ஜெட். அதைத் தயாரிக்கும் கடுமையான பணியை இப்போது நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனும் அவரது தலைமையிலான நிதித்துறை அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். அதில் மக்கள் மீதான கவனம் எந்தளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம். "பூண்டு, வெங்காயம் சாப்பிடமாட்டேன் அதனால் அதன் விலையேற்றம் பற்றி எனக்குத் தெரியாது' என 3% மக்களின் குரலாக ஒலித்து, 97% மக்களின் பிரச்சினையை உதாசீனப்படுத்தும் ஒருவரின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் எத்தனை கடினமாக இருந்தாலும் அது யாருக்குப் பயன்படப் போகிறது என்பதுதான் கவனத்திற்குரியது.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

விடிந்து எழுந்தால் எந்த மந்திரியாவது வில்லங்கத்தை கொண்டு வந்துட்டாங்களா என்று கேட்கும் முதல்வர் ஸ்டாலின் ஏன் அப்படிப்பட்ட மந்திரிகளை நீக்கக்கூடாது?

முதல்வர் சொன்னதன் ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கேள்வி கேட்கிறீர்கள். அவர் சொல்லியிருப்பது, இன்றைய செல்போன் உலகில் பாத்ரூம், பெட்ரூம் தவிர எல்லா இடங்களிலும் மூன்றாவது கண் எனப்படும் கேமரா உலவுகிறது. நீங்கள் பேசுவதை வெட்டி, ஒட்டி, திரித்து, மோசடி செய்து அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கால் பதிப்பதற்காக பா.ஜ.க. எந்த மோசமான நிலைக்கும் போகக்கூடியது. இதையே வேலையாக செய்து கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டியபடிதான், விடிந்து எழுந்தால் எந்த மந்திரியாவது வில்லங்கத்தை கொண்டு வந்துட்டாங்களா என்று கேட்க வேண்டியுள் ளது என்றார். அமைச்சர்கள் ஊழல் செய்து நிரூபிக்கப் பட்டாலும், அரசின் திட்டங்களை சரியாக நடத்தா விட்டாலும், மக்களின் கோரிக்கைகளைப் புறக் கணித்தாலும் பதவி நீக்க நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும். அவர்கள் பேசுவதை வெட்டி, ஒட்டி திரித்து வெளியிடும்போது பொது வெளியில் வெளிப்படையாகக் கண்டித்ததே பெரிய நடவடிக்கைதான்.