தே.மாதவராஜ், கோயம்புத்தூர் 45
தமிழக மீனவர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் இலங்கைக் கடற்படையினரால் அவதிப்படுவது என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கானப் பதில்?
பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு விடை தெரியும். ஆனால், இந்த விவகாரத்தில் முழு உண்மைகளைப் பேச யாரும் முன்வருவதில்லை. ஆழ்கடல் போல அமைதி காக்கிறார்கள். அதனால்தான், தெரிந்த பதிலுக்கான கேள்வி திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது.
சுந்து ஞானதேசிகன், இமாச்சலப் பிரதேஷ்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஊர்வலத்துக்கும் பொருந்தும்தானே?
ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட் டம் ஆகியவை ஜனநாயக உரிமை. ஆனால், அது எந்த நோக்கத்தில் நடத்தப்படுகிறது, எந்த நாளில், எந்த இடத்தில் நடத்தப்படுகிறது என்பதெல்லாம் சட்டம்-ஒழுங்கு சார்ந்தது. காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் நாள் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி கோரியது. காந்தியின் கொள்கைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கும் தொலைதூரம். அதுமட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸில் பயிற்சி பெற்று பா.ஜ.க.விலும் மற்ற இந்து அமைப்புகளிலும் உள்ள பலர், காந்தியைக் கொன்ற கோட்சேவின் ஆதரவாளர்கள். வெளிப்படையாக கோட்சேவை மகாத்மா என்பவர்கள். அப்படிப்பட்ட அமைப்பின் சார்பில் காந்தி ஜெயந்தியில் தமிழ்நாடு முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டபோது, அமைதிப் பூங்காவாக உள்ள இந்த மாநிலத்தில் என்னென்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வு இயல் பாகவே எல்லாப் பக்கமும் உருவானது. அதனை எதிர் கொண்டு அமைதியான அரசியல் முறையை வலியுறுத்தும் வகையில்தான் அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி கோரப் பட்டது. தமிழ்நாட்டின் பல கட்சிகளும் இதனை ஆதரித்தன. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தபோது, சிறுத்தைகளின் ஊர் வலத்திற்கும் சேர்த்தே மறுப்பு தெரி விக்கப்பட்டது. தற்போது, ஆர்.எஸ். எஸ்.ஸுக்கு அக்டோபர் 2-க்குப் பதில் 6-ந் தேதி ஊர்வலம் நடத்த அனு மதிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள் ளது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கம் தடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தை களின் ஜனநாயக உரிமையையும் நீதி மன்றமும் காவல்துறையும் அனுமதிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
பிரபாசுந்தர், வடசேரி, நாகர்கோவில்
காந்தி ஜெயந்தி என்றால் மாவலி மனசில் என்ன தோன்றும்?
ராட்டையில் நூல் நூற்றால் காந்தியாகி விடலாம் என நினைத்து போஸ் கொடுக்கும் பிரபலங்களின் முகங்கள் மனதில் தோன்றும். காந்தி வலிந்து தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆடையை, இந்த நாட்டில் இன்னும் பல பேர் தங்கள் வறுமையின் காரண மாக உடுத்திக் கொண்டிருப்பது மனதில் தோன்றும். சென்னை கடற் கரையில் ராய் சவுத்ரி அவர்களால் உருவாக்கப்பட்டு, பெரிய பீடத்தில் நிற்கும் காந்தி சிலை மனசில் தோன் றும். அதனுடன் சேர்த்து, "உன் படங் கள் ஊர்வலமாகப் போகின்றன. நீ ஏன் தலை குனிந்தபடி நிற்கிறாய்' என பல ஆண்டுகளுக்கு முன் கண்ணீர்ப் பூக்கள் கவிதைத் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா எழுதிய வரிகள் மின்ன லாய்த் தோன்றும்.
மஞ்சுளா சிவலிங்கம், முகப்பேர்
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கே பல பழக்கவழக்கங்கள்-பண்பாடுகள்- மத நம்பிக்கைகள் உண்டு. அவற்றிற்கேற்ப அமைந்துள்ள சட்டங்கள்தான் சிவில் சட்டங்கள். எந்த மதத்தைச் சேர்ந்தவ ராக இருந்தாலும் கொலை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு ஒரே தண்டனைதான். ஆனால், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் அடிப்படையில் திருமணம், குடும்பச் சடங்கு போன்றவற்றில் மதத்திற்கேற்ற மாறுபாடுகள் இருக்கும். இதையும் ஒரே சட்டமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் பொது சிவில் சட்டம். கேட்பதற்கு, சரிதானே என்று தோன்றும். ஆனால், நடைமுறையில் பொதுமொழி என்று இந்தியைத் திணிக்க நினைப்பதுபோலவே ஆதிக்க சமுதாயத்தாரின் சட்டங் கள் பொது சிவில் சட்டங்களாக மாறக்கூடிய சூழலும் உள்ளது.
ஆல்டெக்ஸ் ஐஸ்வர்யா, வேளச்சேரி.
ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் வேகம் போதுமா?
நேரு குடும்ப வாரிசுகளிடமே காங்கிரசின் தலைமை சிக்கியிருக்கிறது என்று பா.ஜ.க. விமர்சனம் செய்கிறது. அதைத் தாண்டி ஒரு தலைமையை உருவாக்க நேரு குடும்பமே நினைத்தாலும் யாரும் தயாராக இல்லை. கட்சித் தலைவர் பதவியைவிட ராஜஸ் தான் முதல்வர் பதவியே தனக்குப் போதும் என அசோக் கெலாட் ஒதுங்கி விட்டார். திக்விஜய்சிங்கும் களத்திற்கு வர மறுத்துவிட்டார். தற்போது மல்லிகார்ஜூன கார்கே நிறுத்தப்பட்டிருக் கிறார். இந்த நிலையில்தான் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் நடைப்பயணம் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்று, கர்நாடகாவில் நுழைந் திருக்கிறது. எல்லா மாநிலங் களிலும் வரவேற்பு கிடைக்க வேகம் மட்டுமல்ல, வியூகமும் விவேகமும் நிறையத் தேவைப்படுகிறது.
ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில்
அரசு வழங்கும் இலவசங்களைக் கண்டு மக்கள் மயங்குவது ஏன்?
சரியான பயனாளிகளுக்கு கிடைக்கும் எந்த ஒரு பொருளும் அவர்களின் வாழ்க்கையை மேம் படுத்தும். கிடைக்கிறதே வாங்கிப் போடுவோம் என பயன்பெறுபவர் களின் மனது மயக்கத்தில் ஆழ்ந்துவிடும்.