மாவலி பதில்கள்

ss

சிவாஜிமூக்கையா, தர்காஸ்

தமிழகத்தில் கர்மவீரர் காமராஜருக்கு உண்மையான சீடராக இருந்தவர் யார்?

கர்மவீரர் காமராஜர் தன்னுடைய குருவான சத்தியமூர்த்தி அய்யருக்கு உண்மையான சீடராக இருந்தார். சத்தியமூர்த்திக்கும் ராஜாஜி என்கிற ராஜகோபாலாச் சாரியாருக்கும் அந்த காலத்திலேயே நடந்த உள்கட்சி அரசியல் மோதல் பின்னர் ராஜாஜி-காமராஜர் உள் அரசியல் மோதலாக காங்கிரசில் நீடித்தது. ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. காமராஜர் தமிழக முதல்வரானார். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சத்தியமூர்த்தி சாகரம் என்று பெயர் சூட்டி, குரு காணிக்கை செலுத்தினார். காமராஜருடன் அரசியலில் ஒன்றாக பயணித்த சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன் போன்றவர்கள் கட்சி அரசியலில் காமராஜருக்கு முரண்பாடாக பல நேரங்களில் இருந்தார்கள். காமராஜரால் பிரதமர் பதவி அடைந்த இந்திராகாந்தியும், காமராஜர் உள்ளிட்ட சீனியர் காங்கிரஸ் தலைவர்களுக்கு விசுவாசமாக இல்லை. இந்திராகாந்தி காலத்து நெருக்கடி நிலை (

சிவாஜிமூக்கையா, தர்காஸ்

தமிழகத்தில் கர்மவீரர் காமராஜருக்கு உண்மையான சீடராக இருந்தவர் யார்?

கர்மவீரர் காமராஜர் தன்னுடைய குருவான சத்தியமூர்த்தி அய்யருக்கு உண்மையான சீடராக இருந்தார். சத்தியமூர்த்திக்கும் ராஜாஜி என்கிற ராஜகோபாலாச் சாரியாருக்கும் அந்த காலத்திலேயே நடந்த உள்கட்சி அரசியல் மோதல் பின்னர் ராஜாஜி-காமராஜர் உள் அரசியல் மோதலாக காங்கிரசில் நீடித்தது. ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. காமராஜர் தமிழக முதல்வரானார். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சத்தியமூர்த்தி சாகரம் என்று பெயர் சூட்டி, குரு காணிக்கை செலுத்தினார். காமராஜருடன் அரசியலில் ஒன்றாக பயணித்த சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன் போன்றவர்கள் கட்சி அரசியலில் காமராஜருக்கு முரண்பாடாக பல நேரங்களில் இருந்தார்கள். காமராஜரால் பிரதமர் பதவி அடைந்த இந்திராகாந்தியும், காமராஜர் உள்ளிட்ட சீனியர் காங்கிரஸ் தலைவர்களுக்கு விசுவாசமாக இல்லை. இந்திராகாந்தி காலத்து நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காமராஜரை மிகவும் மனரீதியாக பாதித்தது. அவர் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் நாள், 1975ஆம் ஆண்டு காலமானார். காமராஜர் மறைந்த பிறகு அவருடைய சீடர்கள் என அறியப்பட்ட பலரும் இந்திரா காங்கிரசில் சேர்ந்துவிட்டார்கள். அங்கிருந்து அ.தி. மு.க.வுக்குப் போனவர்களும் உண்டு. காமராஜரின் தனித்தன்மையை அவரது சீடர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது.

ஈ.கே.கல்யாண்,புதுப் பெருங்களத்தூர்

ஆட்சியருக்கு அதிகாரம் அதிகமா? எம்.எல்.ஏ.வுக்கு அதிகாரம் அதிகமா?

மாவட்ட ஆட்சியரால் சுதந்திர நாளில் தேசியக் கொடியேற்ற முடிகிறது. அந்த உரிமை கூட எங்களுக்கு இல்லை என்கிறார் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஓர் எம்.எல்.ஏ. அவர் சொல்வது உண்மை தான். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனாலும் ஜன நாயகம் இன்னும் முழுமை யடையவில்லை.

dd

மாடசாமி,மயிலாடுதுறை

தி.மு.க. ஆட்சி அமைத்ததும் 6 மாதத்தில் அ.தி.மு.க.வில் உள்ள ஊழல் அமைச்சர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்ற வாக்குறுதி என்னவாயிற்று? ஒருவேளை ஊழலோடு சமரசம் செய்து விட்டார்களோ?

தி.மு.க.வும் த.மா.கா.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட 1996ஆம் ஆண்டு தேர்தலில், அதற்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மீதும் அவரிடம் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதும் வழக்குப் போடப்பட்டு, அவற்றை விரைந்து விசாரிப்பதற்காக தனி நீதிமன்றங்களும் அமைக்கப் பட்டன. கலர் டி.வி. ஊழல் வழக்கிற்காக ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் இறங்கி, கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் பயணித்த பேருந்தை தர்மபுரி அருகே தீவைத்துக் கொளுத்தி மூன்று மாணவிகளின் உயிரைப் பறித்தார்கள். ஆனால், எந்த வழக்கின் தீர்ப்பிலும் ஜெயலலிதா ஜெயிலுக்குப் போகவில்லை. மேலமுறையீடு செய்து எல்லாவற்றிலும் விடுதலை அடைந்தார். மாதம் 1 ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் ஜெ. 64 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில் மட்டும்தான், நீதிபதி குன்ஹா எனும் நீதிமான் அளித்த தீர்ப்பில் தண்டிக்கப்பட்டார். சட்டங்கள் வலுவானவையாக இருக்கலாம். அதில் ஓட்டைகள் எவை என்பது முன்னாள்-இந்நாள் ஆட்சியாளர்களுக்குத் தெரியும். சொத்துக் குவிப்பு வழக்கு போல ஊழல் திமிங்கிலம் தப்ப முடியாத வலை போல ஆதாரப்பூர்வமான வழக்கு தொடரப்பட்டால்தான் அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் குறித்து தி.மு.க அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"நான் மரணிக்கையில் சிறந்த ஜனநாயக நாடான இந்தியாவில் அன்பான, நேர்மையான இந்திய மக்கள் சூழ்ந்த நிலையில் மரணிக்கவே விரும்புகிறேன். செயற்கைத்தனமான சீன அதிகாரிகள் முன்னாள் இறக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை"...என்று தலாய் லாமா கூறியுள்ளது பற்றி..!?

தலாய் லாமாவின் மத ரீதியான செயல்பாடுகளை சீனா ஏற்பதில்லை. இது தொடர்பாக நேரு காலத்திலிருந்து மோடி காலம் வரை இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உரசல்கள் நீடித்து வருகின்றன. தலாய் லாமாவின் திபெத் தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என்கிறது சீனா. அந்த திபெத்திலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து வசதிகளை செய்து கொடுக்கிறது இந்தியா. தலாய் லாமா சொல்வது போல சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் ஜனநாயகக் காற்று நன்றாக வீசுகிறது. காரணம், இது பன்முகத்தன்மை வாய்ந்த ஒன்றியம். இதை ஒரே தேசம்-ஒரே மொழி-ஒரே மதம் என்ற ரீதியில் கொண்டு போக நினைக்கும் ஆட்சியாளர்களுக்கும் சேர்த்தே தலாய் லாமா சொல்லியிருக்கிறார்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

தமிழகத்தில் ஜாதிப் பாகுபாடும், ஜாதி கொலை களும் அதிகமாக இருப்பதாக அண்ணாமலை கூறியிருக் கிறாரே

எந்த அண்ணாமலை? மனு தர்ம சாஸ்திரம் சொல்லியிருப்பது போல அவரவர் சாதிக்குரிய தொழில்களைத் தான் செய்ய வேண்டும் என்று பேசி, அது சமூக வலைத் தளங்களில் வைரலாக சென்று கொண்டிருக்கிறதே, அந்த அண்ணாமலையா?

nkn280922
இதையும் படியுங்கள்
Subscribe