நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை விசாரணை கமிஷன் வெறும் கண் துடைப்பு ஆக உள்ளதே?
கிணற்றில் கல்லைத் தூக்கிப் போடுவதும், ஒரு புகார் பற்றி விசாரிக்க கமிஷன் அமைப்பதும் ஒன்று தான் என்பார்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அதுதான் தொடர்கிறது. விசாரணை கமிஷன் என்பது பரிந்துரை செய்யக்கூடிய அமைப்பாக மட்டுமே உள்ளது. அதனை நடைமுறைப் படுத்தும் பணியை உறுதியான முறையில் மேற்கொள்ளாத வரை அக்காலம், இக்காலம், எக்காலமும் விசாரணை கமிஷன்கள் இப்படித்தான் இருக்கும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"வைகோ' மேடைப்பேச்சு -"சீமான்' மேடைப்பேச்சு... -ஒப்பிட முடியுமா?
பேச்சு என்பது தனிக் கலை. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு. ஒருவரை இன் னொருவருடன் ஒப்பிட வேண்டியதில்லை. ஒருவரின் மேடைப் பேச்சு அதைக் கேட்ப வர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்து கி
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை விசாரணை கமிஷன் வெறும் கண் துடைப்பு ஆக உள்ளதே?
கிணற்றில் கல்லைத் தூக்கிப் போடுவதும், ஒரு புகார் பற்றி விசாரிக்க கமிஷன் அமைப்பதும் ஒன்று தான் என்பார்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அதுதான் தொடர்கிறது. விசாரணை கமிஷன் என்பது பரிந்துரை செய்யக்கூடிய அமைப்பாக மட்டுமே உள்ளது. அதனை நடைமுறைப் படுத்தும் பணியை உறுதியான முறையில் மேற்கொள்ளாத வரை அக்காலம், இக்காலம், எக்காலமும் விசாரணை கமிஷன்கள் இப்படித்தான் இருக்கும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"வைகோ' மேடைப்பேச்சு -"சீமான்' மேடைப்பேச்சு... -ஒப்பிட முடியுமா?
பேச்சு என்பது தனிக் கலை. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு. ஒருவரை இன் னொருவருடன் ஒப்பிட வேண்டியதில்லை. ஒருவரின் மேடைப் பேச்சு அதைக் கேட்ப வர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்து கிறது என் பதே கவனத்திற் குரியது. பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சு பெரியாரின் இயக்கத்திற்குப் பெரும் பலம் சேர்த்தது. பகுத் தறிவுச் சிந்தனைகளை இயல்பான நடையில் பேசியவர் பெரியார். இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை ஓயாமல் பயணித்துப் பேசிய பெரியாரின் பேச்சுகள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் தான், அவர் இறந்து அரை நூற் றாண்டுகளாகியும் எதிரிகளை அலற வைக்கிறது. பெரியாரின் கருத்துகளை அரசியல் வடிவமாக்கி அழகுத் தமிழில் அறிவார்ந்த முறையில் சொற் பொழிவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. அவரது பேச்சு, ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது. அண்ணாவின் தம்பிகள் பெரும் பட்டாளமாக உருவாகினர். நாவலர் நெடுஞ்செழி யன், பேராசிரியர் அன்பழகன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பேசினர். இயக்கம் வளர்ந்தது. மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. அது தேர்தல் களத்திலும் எதிரொலித்தது. அண்ணாவின் தம்பி களில் தனித்துவமாகவும் தலைமைப் பண்புடனும் பேச்சாற்றலை வெளிப்படுத் தியவர் கலைஞர். இலக்கிய மேடைகள், கவியரங்குகள், திருமண மண்டபங்கள் என அரசியலைக் கடந்தும் அவரது பேச்சாற்றல் மக்கள் மனதில் நிலைத்தது. கலைஞர் காலத்தில் ஒரு புதிய பேச்சாளர் பட்டாளம் உருவானது. துரைமுருகன், காளிமுத்து, க.சுப்பு, ரகுமான் கான், திருச்சி செல்வேந்திரன் என ஒவ்வொருவரும் திராவிடக் கொள்கைகளை அவரவர் வழியில் முழங்கினர். அதில் வைகோவின் பாணி, உலக வரலாற்றுடன் திராவிடத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற வர். அரசியலில் கலைஞரின் போர்வாளாகவும் இருந்திருக் கிறார். கலைஞருக்கு எதிராகவும் வாள் சுழற்றியிருக்கிறார். சீமான் பெரியாரைப் புகழ்ந்த காலம் உண்டு. பெரியாருக்கு எதிராகத் தனது கட்சித் தம்பிகளைத் தூண்டிவிடுவதும் உண்டு. வைகோவுக் கும் சீமானுக்கும் ஒற்றுமையான இடம், விடுதலைப் புலிகள் ஆதரவு. பிரபாகரனை சந்தித்தது பற்றி வைகோவின் புகைப்படங்கள் பேசும். சீமான் அவரே அது பற்றிப் பேசுவார். வைகோவின் பேச்சு திராவிட இயக்கத்தின் அரசியல் வளர்ச்சியில் துணை நின்றது. சீமான் பேசுவது யாருடைய வளர்ச்சிக்குப் பயன்படும் என்பது இனிமேல்தான் தெரியும்.
எஸ். இராமதாஸ், வாணரப்பேட்டை -புதுச்சேரி
கேரளாவுக்கு எதிர்காலம் ஒன்று இருக்குமானால் அது பா.ஜ.க.தான்” என்று அமித்ஷா கூறியிருப்பது பற்றி?
வடமாநிலங்களில் ராமனையும் கிருஷ்ண னையும் வைத்து அரசியல் செய்வது பா.ஜ.க வழக்கம். தென்னிந்தியாவில் அது அத்தனை பலன் தராது என்பதால் தமிழ்நாட்டில் கடந்த தேர்தலின்போது முருகனை கையில் எடுத்து வெற்றிவேல்.. வீரவேல் என்றார்கள் மோடியும் அமித்ஷாவும். தமிழ்நாட்டு மக்களோ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டார்கள். அதுபோலவே கேரளாவில், சபரிமலை அய்யப்பன் விவகாரத்தை கையில் எடுத்தார்கள். ஆனால் கேரள மக்கள் எங்கள் சாமியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்க ஏரியாவுக்குள் நீங்கள் வரவேண்டாம் என கம்யூ னிஸ்ட் கூட்டணிக்கே மறுபடியும் வெற்றி வாய்ப்பை வழங்கினார்கள். தமிழ்நாடு, கேரளாவில் நிகழ்காலம் நன்றாகவே இருக்கிறது. எதிர்காலமும் அப்படியே தொடரட்டும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
தென் மண்டல மாநாடு கேரளாவில் நடந்தபோது ஏன் புதுச்சேரி முதல்வர் கலந்து கொள்ளாமல் தமிழிசை கலந்துகொண் டார்?
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும், அது யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநரின் அதிகாரம் ஓங்கியிருக்கிறது. மத்திய -மாநில உறவுகள் குறித்து பேசவேண்டிய அம்சங்களில் இதுவும் ஒன்று.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
பி.டி.ஆருடன் தற்போது தொடர்ந்து மோதுகிறாரே அண்ணாமலை?
கோபுரத்திற்குப் பக்கத்தில் நின்று கூவினால்தானே கூட்டம் கவனிக்கும். வியாபாரம் நடக்கும்.