பிரகாஷ், தேனி
"பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசும்போது வெளிநடப்பு செய்தது ஏன்..!? தமிழக எம்பிக்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி...!?
வாவ்...!
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"கலைஞருக்கு "பேனா' வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்ப்பவர் களின் "டி.என்.ஏ'-வை பரிசோதிக்க வேண்டும்'' என்று தமிழக காங். எம்.பி. கே.எஸ்.அழகிரி கூறியது குறித்து?
யாருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. ஒருவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்போது அவரது ஆதரவாளர்கள் அதனை வரவேற்பதும், எதிர்ப்பாளர் கள் கண்டனம் தெரிவிப்பதும் ஜனநாயகரீதியான ஒன்றுதான். கலைஞரைப் பொறுத்தவரை அவரைத் திட்டித் திட்டியே தங்களுக்கான அரசியல் முகவரி யைத் தேடிக்கொண்டவர்கள் தமிழ்நாட்டில் நிறைய பேர் உண்டு. கோமான்கள் முதல் சீமான்கள் வரை இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். கலைஞரை விமர்சித்து இவர்கள் தங்கள் எஜமானர்களின் தயவில் வயிறு வளர்
பிரகாஷ், தேனி
"பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசும்போது வெளிநடப்பு செய்தது ஏன்..!? தமிழக எம்பிக்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி...!?
வாவ்...!
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"கலைஞருக்கு "பேனா' வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்ப்பவர் களின் "டி.என்.ஏ'-வை பரிசோதிக்க வேண்டும்'' என்று தமிழக காங். எம்.பி. கே.எஸ்.அழகிரி கூறியது குறித்து?
யாருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. ஒருவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்போது அவரது ஆதரவாளர்கள் அதனை வரவேற்பதும், எதிர்ப்பாளர் கள் கண்டனம் தெரிவிப்பதும் ஜனநாயகரீதியான ஒன்றுதான். கலைஞரைப் பொறுத்தவரை அவரைத் திட்டித் திட்டியே தங்களுக்கான அரசியல் முகவரி யைத் தேடிக்கொண்டவர்கள் தமிழ்நாட்டில் நிறைய பேர் உண்டு. கோமான்கள் முதல் சீமான்கள் வரை இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். கலைஞரை விமர்சித்து இவர்கள் தங்கள் எஜமானர்களின் தயவில் வயிறு வளர்த்த வர்கள். கலைஞரை ஒழித்துவிடுவோம் என்ற பலரும் ஒழிந்து போனார்கள். அல்லது ஓய்ந்து போனார்கள். கலைஞரோ தனது கட்சியின் தேர்தல் தோல்விகளால் செங்கோலை இழந்தாலும் எழுதுகோல் என்கிற பேனாவை இழக்கவேயில்லை. அந்தப் பேனாவால் புதிய புதிய கருத்துகளை விதைத்து, அரசியல் நிலையை விளக்கி எழுதி, தன் உடன்பிறப்பு களுக்கு கடிதம் வாயிலாக நாட்டுநடப்பை எடுத்துரைத்து, அதன் வழியாக மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் கலைஞரின் பேனா கையெழுத்திட்ட திட்டங்களும் சட்டங்களும் தமிழ்நாட்டை உயர வைத்தன. குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு, பெண் களுக்கு சொத்துரிமை, முதல் தலைமுறை பட்டதாரிக்கு கட்டணமில்லா கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பஸ் பாஸ், சமத்துவபுரம் போன்ற முன்னோடியான பல திட்டங்களால் இந்தியாவே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்த் தது. பல மாநிலங்களும் இத்த கைய திட்டங்களைப் பின்பற்றத் தொடங்கின. என்னிடமிருந்து செங்கோலைப் பறித்துவிடலாம். எழுதுகோலை எவராலும் பறித்துவிட முடியாது என்று சொன்ன கலைஞருக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பது பொருத் தம்தான். அதற்காக சிலர் கதறுகிறார்கள் என்றால், கலைஞரின் பேனா இன்னமும் அவர்களை அந்தள வுக்குப் பயமுறுத்துகிறது என்று அர்த்தம்.
சிவக்குமார், செய்துங்கநல்லூர் -தூத்துக்குடி
2800000000000000...!?!?!?!?!??!?
நீ பற்ற வைத்த நெருப்பொன்று உன்னைப் பற்ற வைக்கும் என்ற சினிமா பஞ்ச் வசனம்தான் நினைவுக்கு வரு கிறது. 1760000000000000 என்று எந்தக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது வரிந்து கட்டி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றதோ, அதே கட்சி, 2ஜி, 3ஜி, 4ஜி தாண்டி மோடிஜி ஆட்சியில் 5ஜி என்று வரும்போது, நிர்ணயித்த இலக்கைவிட குறைவான ஏலத்தொகைக்கு அம்பானி, அதானி, ஏர்டெல் பாரதி மிட்டல் ஆகி யோருக்கு ஒதுக்கீடு செய்ததால் 2 லட்சத்து 80ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி யுள்ளது. துறையின் அமைச்சரோ "இன் னும் முழுமையாக ஏலம் விடவில்லை. அலைக்கற்றை பாக்கி இருக்கிறது' என்கிறார். கம்பி கட்டுகிற கதைகளை மக்கள் நிறைய கேட்டுவிட்டார்கள்.
வாத்திராஜி, திருச்சி
பெரியார் சிலை அகற்றுவது குறித்து ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சரியா..?!
நான் சொல்கிறேன் என்பதற்காக அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய தில்லை. நான் சொல்வது பற்றி நீ சிந்தித்து, உன் அறிவுக்கு சரியெனப் பட்டதை மட்டும் ஏற்றுக்கொள் என்று சொன்ன சிந்தனையாளர் தந்தை பெரியார். எந்தக் கருத்தையும் சொல்லக்கூடாது என்று நினைப்பவர் கள் பாசிஸ்ட்டுகள். சினிமாவில் மார்க்கெட் போன கனல் கண்ணன், தன் பிழைப்புக்காக ஏதோ ஒரு பக்கம் ஒதுங்கி, அங்கே சொல்லிக் கொடுத் ததை மேடையில் பேசியிருக்கிறார். திருவரங்கம் கோயில் தெற்கு ராஜகோபுரம் உள்ள தெருவில் பெரியாருக்கு உரிய அரசு அனுமதியுடன் அன்றைய முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட சிலை இருக்கிறது. கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை அங்கே இருப்பதால் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்துகிறதாம், அந்த சிலை அகற்றப்படும் போதுதான் இந்துக்களிடம் எழுச்சி ஏற்படுமாம். இதுதான் மார்க்கெட் போன மாஜி ஸ்டன்ட் மாஸ்டரின் பேச்சு. அவர் உள்பட பெரும்பான்மையான இந்துக்களை சூத்திரன் என்றும் பஞ்சமன் என் றும் இழிவுபடுத்தி, காலம்கால மாக மனதைப் புண்படுத்திக் கொண்டிருப்பதைப் பெரியார் கேள்வி கேட்டார். இந்துத்வா சக்திகளின் ஆட்சியில், மாட்டுக் கறி சாப்பிட்டதாகக் கூறி அதே இந்துக்கள் உடல்ரீதியாகவும் புண்படுத்தப்பட்டு, துன்புறுத்தப் படுகிறார்கள். இந்துக்கள் மீது அக்கறை இருந்தால் கனல் கண்ணன் இது பற்றி பேசியிருப் பார். ஆனால், கடவுள் இல்லை என்ற பெரியார்தான் இதைப் பேசினார். திருவரங்கம் கோவிலுக்குள் அல்ல, கோவில் கருவறைக்குள்ளும் கனல் கண்ணன் போன்றவர்கள் நுழையும் உரிமை வேண்டும் என்று போராடி, இன்று அது சட்டமானதற்குக் காரணமும் அதே பெரியார்தான்.
சிமிட்டிகுமார், அம்பத்தூர் -சென்னை
அமெரிக்காவை அதிர வைத்த குஜராத் IELTS தேர்வு முறைகேடு குறித்து...?
குஜராத் மாடல் என்பது எப்போதும் fakeதான்.