மஞ்சுவாசுதேவன், பெங்களூரு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபேயின் மரணம்?

dd

இருபதாம் நூற்றாண்டில் மன்னராட்சியிலிருந்து மக்க ளாட்சிக்கு மாறிய நாடு, ஜப்பான். உலகப் போரில் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுக்குள்ளாகி பேரிழப்பை எதிர்கொண்டு, மக்களின் உழைப்பினால், அறிவியல் துறையிலும் பொருளாதாரத் துறை யிலும் வளர்ந்த நாடு. அதில் பிரதமர் அபேயின் பங்களிப்பும் உண்டு. அர சியல் பின்னணி கொண்ட குடும்பத்தி லிருந்து வந்தவர். பிரதமர் பொறுப்பை ஏற்றவர். ஒரு கட்டத்தில், அதிலிருந்து விலகி அடுத்தவர்களுக்கு வழிவிட்டவர். பரப்புரைக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்த போதுதான் அவரைப் பின்னாலே இருந்து சுட்டுக் கொன்றிருக்கிறார் கொலையாளி. ஆபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என உலகளா விய ஜனாதிபதிகள், பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள் கொல்லப்பட்ட பட்டியலில் அபேவும் இடம் பெற்றி ருப்பது கொடுமையும் வேதனையும் நிறைந்தது. அரசியல் கருத்து மாறுபாடுகள், ஆட்சியாளர்களின் செயல்களால் ஏற்படும் அதிருப்திகள் உயிரைப் பறிக்கும் அளவிற்கு இன்றும் தொடர்வது, ஜனநாயகம் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஜெ. கிருஷ்ணதேவு, எல்.ஆர்.பாளையம் -புதுச்சேரி

"தி.மு.க. ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல'’என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி?

திருவண்ணாமலைக் கோவிலை, தொல்லியல்துறை தனது கட்டுப் பாட்டில் எடுக்க முயன்றபோது, பொதுமக்கள்-பக்தர்களின் விருப் பப்படி பழைய நிலையே நீடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு, குடமுழுக்கும் நடத்திக் காட்டியவர் அன்றைய முதல்வர் கலைஞர். திருவாரூர் ஆழித்தேரை நவீன முறையில் ஓடச் செய்தவர். மயிலாப்பூர் கோவில் குளத்தைத் தூர் வாரியதும் அவரது ஆட்சிதான். பக்தர்கள் விரும்பும் வசதிகளைச் செய்து கொடுக் கும் வகையில் இந்து அறநிலையத்துறை மூலமாக ஆவன செய்வது தி.மு.க. அரசின் வழிமுறை. தமிழ் நாட்டின் பல கோயில்களும் தி.மு.க. ஆட்சியில் புனரமைக்கப்பட்டுள்ளன. கடவுளால் படைக்கப் பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் எனும் நிலையில், "அனைத்து சாதியினரும் கருவறைக்குள் சென்று அர்ச்சகராகலாம்' என்ற கலைஞர் காலத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அத்துடன், முந்தைய அர்ச்சகர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட நலத் திட்டங்களையும் செயல்படுத்தி யுள்ளார். ஆட்சி நிர்வாகம் என்ன செய்யவேண்டு மோ அதனைக் கச்சிதமாகச் செய்திருப்பதால் தான், ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரானவர் கள் அல்ல என்று மு.க.ஸ்டாலின் கூறி யிருப்பதுடன், ஆன்மிகத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நினைப்பவர்களை ஆன்மிக வியாதி கள் என்றும் திருவண்ணாமலையில் நடந்த விழாவில் விமர்சித்திருக்கிறார்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"இன்று இலங்கை... நாளை இந்தியா? இன்று பக்சே சகோக்கள்... நாளை மோடி சகாக்கள்?'' என்று வி.சி.க. காட்டமாக கூறியுள்ளது குறித்து?

அங்கே மதம் சார்ந்த இனவெறி. இங்கே வருணாசிரமம் சார்ந்த மதவெறி. அங்கேயும் சிறுபான்மையினர் சமுதாயத்தினர் மீது தாக்குதல். இங்கேயும் சிறுபான்மையினர் மீது தாக்குதல். அங்கே ரூபாய் மதிப்பு இழப்பு. இங்கே அதே வேகத்தில் ரூபாய் மதிப்பிழப்பு. கூடுதல் போனசாக பண மதிப்பிழப்பு என்ற பெயரில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு. அங்கே கடன் சுமை. இங்கே ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ஏறத்தாழ 1 லட்சம் ரூபாய் கடன் சுமை. அங்கே அரசின் செயல் பாடுகளைக் குறைத்து பன்னாட்டு -கார்ப்பரேட் முதலாளிகளிடம் திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதேபோல, இங்கும் அரசு நிறுவனங்கள் விற்கப் பட்டு, அதானி -அம்பானி என்ற முதலாளிகளிடம் நாட்டின் செல்வங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. என்ன அநியாயம் வேண்டுமானாலும் செய்துவிட்டு, தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுவிட்டால் போதும், எதையும் சாதிக்கலாம் எனத் திமிர்த்தனத்துடன் திரிந்தவர்கள் இலங்கை ஆட்சியாளர்கள். அதையும் இங்குள்ள நிலவரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளவும்.

ம.நிர்மலா மகாதேவன், -புதுச்சேரி

அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாரே?

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கியது தி.மு.க. அரசு. அண்ணா ஆட்சியில் தொடங்கி கலைஞரால் தொடரப்பட்ட திட்டத்தில் மாற்றம் என்ற செய்தி குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கவேண்டியது தி.மு.க. அரசின் கடமை. ஆனால் ஏர்-இந்தியாவை, எல்.ஐ.சி. யை, ரயில்வேயைத் தனியா ருக்குத் தாரை வார்க்கும் மோடி அரசின் நடவடிக் கைகள் பற்றி அண்ணா மலைகள் எப்போது வாய் திறக்கப் போகிறார்கள்?

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை வாழ்நாள் தலைவராக தேர்வு செய்து கொண்டது?

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சிக்கு எடப்பாடியை நிரந்தரத் தலைவராக்கும்போது. ஜெகன்மோகன் ரெட்டி, தான் தொடங்கிய கட்சிக்கு தானே வாழ்நாள் தலைவர் என்று அறிவித்திருக்கிறார்.

கி.சோழராஜன், எல்.ஆர்.பாளையம் -புதுச்சேரி

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டதாக சசிகலா கூறியிருக்கிறாரே?

அவருடன் மீண்டும் சேர்ந்திருக்கும் அவரது தம்பி திவாகரன் கட்சியில் அம்புட்டு கூட்டமா இருக்கு?