வ.நடராஜன், கூடுவாஞ்சேரி
கைத்தட்டல் ஒலியும், விளக்கேற்றிய ஒளியும் இன்னும கொரோனாவை சுத்தமாக ஒழித்தபாடில்லையே?
கொரோனாவின் தாக்கம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் உலகமே பயந்து நடுங்கி, முடங்கிக் கிடந்த காலத்தில், அறிவியல் எப்படியும் இதனை எதிர்கொண்டு, மனித சமுதாயத்தை மீட்கும் என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் வெளிப்படுத்தினர். அதற்கேற்ப தடுப்பூசி, பூஸ்டர் ஆகியவை கண்டறியப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டன. அதன்பிறகுமே கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, ஒமிக்ரான் என்று அச்சுறுத்தி இப்போது மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும், முதல் அலை-இரண்டாம் அலை யின்போது இருந்த பயமோ பீதியோ இப்போது இல்லை. லாக்டவுன் போட வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆட்சியாளர்கள் தெரி விக்கிறார்கள். காலத் திற்கேற்ற தன்மை யுடன் அறிவியல் தனது ஆய்வுகளைத் தொடரும். சவால் களை வெல்லும். புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க முடி யும். கோமியமே எல்லாவற்றுக் கும்
வ.நடராஜன், கூடுவாஞ்சேரி
கைத்தட்டல் ஒலியும், விளக்கேற்றிய ஒளியும் இன்னும கொரோனாவை சுத்தமாக ஒழித்தபாடில்லையே?
கொரோனாவின் தாக்கம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் உலகமே பயந்து நடுங்கி, முடங்கிக் கிடந்த காலத்தில், அறிவியல் எப்படியும் இதனை எதிர்கொண்டு, மனித சமுதாயத்தை மீட்கும் என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் வெளிப்படுத்தினர். அதற்கேற்ப தடுப்பூசி, பூஸ்டர் ஆகியவை கண்டறியப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டன. அதன்பிறகுமே கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, ஒமிக்ரான் என்று அச்சுறுத்தி இப்போது மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும், முதல் அலை-இரண்டாம் அலை யின்போது இருந்த பயமோ பீதியோ இப்போது இல்லை. லாக்டவுன் போட வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆட்சியாளர்கள் தெரி விக்கிறார்கள். காலத் திற்கேற்ற தன்மை யுடன் அறிவியல் தனது ஆய்வுகளைத் தொடரும். சவால் களை வெல்லும். புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க முடி யும். கோமியமே எல்லாவற்றுக் கும் மருந்து எனப் பிடி வாதமாக இருப்பவர்கள், கைத்தட்டியும் விளக்கேற்றியும் கொரோனாவை விரட்டிவிடலாம் எனக் கற்பனை செய்து மக்களையும் பங்கேற்கவைத்து முட்டாளாக்குவார்கள்.
நித்திலா, தேவதானப்பட்டி
இன்றைய அரசு நிறைவேற்றும் திட்டங்கள் நாளைய தலைமுறைக்கும் பயன்படுமா?
நேற்றைய ஆட்சியாளர்களின் திட்டங்களின் விளைவுகளிலிருந்து இதனை உணர்ந்து கொள்ளாலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் சிலை திறப்பு விழா, அண்ணா நுழை வாயில் திறப்பு விழா, அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக் காக முதல்வர் சென்ற போது, வழியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறு வாழ்வு இல்லத்தில் வாழும் தொழுநோயாளர்கள் அவரை வரவேற்று கைக்கூப்பியும் கரம் அசைத்தும் அன்பை வெளிப்படுத்தினர். கலைஞர் ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் உள்பட தமிழ்நாட்டில் 10 இடங்களில் பிச்சைக் காரர்கள் மற்றும் தொழுநோயாளர் களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டு, சமூகத்தால் புறக் கணிக்கப்பட்டிருந்த அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கேற்ற வகையில் தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றித் தரப்பட்டன. தொழு நோயாளிகள் என்றால் பேருந்துகள், கடைகள் ஆகியவற்றில் கூட அனு மதிக்காத காலம் அது. நடைபாதையில் படுத்திருந்தாலும் விரட்டி அடிப்பார்கள். பக்கத்தில் வந்தால் ஒட்டிக்கொள்ளுமோ என்று பொதுமக்கள் அச்சத்துடனும் அருவருப்புடனும் விலகி நின்றனர். தொழுநோய் அப்படி பரவக்கூடிய நோய் அல்ல. அதற்கு சிகிச்சை உண்டு என்பதைத் தீவிரமாகப் பரப்புரை செய்து, மருத்துவச் சிகிச்சை முறைகளையும் வழங்கியது கலைஞர் அரசு. மறுவாழ்வு இல்லங்களை அமைத்து தொழுநோயாளர் களும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததில் ஆண் அன்னை தெரசாவாக விளங்கியவர் கலைஞர். அதற்கான நன்றியையும் அன்பையும்தான் கலைஞரின் கொள்கை வாரிசிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் மறுவாழ்வு இல்லத்தில் புதுவாழ்வு பெற்ற தலைமுறையினர்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
ராஜஸ்தான், சத்தீஸ்கர் இரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி என்பது எதைக் காட்டுகிறது?
மாற்று சக்தியாக மக்கள் நம்புகிற ஒரு கட்சி, தனது கட்டமைப்பில் எத்தனை பலவீனமாக இருக்கிறது என்பதையும், மாநில அரசியலில் அது போதிய கவனம் செலுத்தத் தவறியதன் விளைவாக, உள்கலகங்கள் விளைந்து, தேசிய அளவிலேயே உறுதியான தலைமை இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதை யும் காட்டுகிறது. வடக்கே மதவெறி அரசியல் சக்திகளின் கை ஓங்கும் போதெல்லாம், தெற்கே கை சின்னத்தின் வலிமையால் இந்தியாவுக்கு நம்பிக்கை பிறக்கும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாறி மாறி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம் உண்டு. ஒரே நேரத்தில் இந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்ததும் உண்டு. இப்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்கூட காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த நிலையை உணர்ந்து, புதிய மாற்றங்களைச் செய்து, கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
தினமும் நாளிதழ்களை வாசிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுரை கூறியிருப்பது எதைக் காட்டுகிறது?
உத்தரபிரதேச முதல்வர் மட்டுமல்ல, இந்தியாவின் பல முதல்வர்களும் இதை வலியுறுத்தியுள்ளனர். கல்வியாளர்கள் தொடர்ந்து இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர். படிக்கின்ற தலைமுறைக்குப் பதில் பார்க்கின்ற தலைமுறை உருவாகிவிட்டது. எதையும் காட்சி வழியாகவோ, குரல் பதிவாகவோ தெரிந்துகொள்ள முடியும் என்கிற வகையில் தொழில்நுட்பமும் உருவாகிவிட்டது. ஆனா லும், படிக்கும்போது ஏற்படும் உணர்வும் அது தரும் அறிவாற்றலும் மனிதர்களை மேம்பாடு அடையச் செய்யும். அச்சு இதழாகவோ ஆன்லைன் மூலமோ நாளிதழ்களை, பத்திரிகைகளை, புத்தகங்களைப் படிக்கின்ற பழக்கம் கட்டாயம் தேவை. நாளொன்றுக்கு அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரமாவது படித்தாக வேண்டும் என்ற பழக்கத்தை உருவாக் கும் முயற்சிகளை ஆட்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர் எல்லாரும் சேர்ந்து உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஐஸ்வர்யா, வேளச்சேரி.
ஐஸ்வர்யாராய், திரிஷா போன்றவர்களின் நடிப்பில் உருவாகி யுள்ள "பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாவலின் சிறப்புத் தன்மையைப் பாதுகாக்குமா?
கல்கியின் நாவல் எழுத்தாற்றலின் வலிமை. மணிரத்னத்தின் படம் காட்சியமைப்பின் சிறப்பு. படிக்கின்ற அனுபவமும் ரசிக்கின்ற அனுபவமும் வேறு வேறு.