தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

ஓ.பி.எஸ். எந்த தைரியத்தில் அ.தி.மு.க.வுக்கு இன்னும் ஒருங்கிணைப்பாளர் என்கிறார்?

டெல்லி எஜமானர்கள் எப்படியாவது உதவி செய்வார்கள் என்ற நப்பாசையாக இருக்கலாம்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

மாதவனின் "ராக்கெட்ரி' படம்..!

இஸ்ரோவின் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டிய நேரத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும், அதனைப் பொய் என சட்டப்படியாக நிரூபித்து அவர் வெளியே வருவதற் கான கால இடைவெளியும் ஒரு மனித னின் வாழ்வில் எத்தகைய பாதிப்பு களை ஏற்படுத்துகின் றன என்ற உண்மைக் கதையின் சாராம்தான் மாதவனின் ராக்கெட்ரி படம். அதிகார மையங்களில் நிலவும் உள்ளடி அர சியலில் பாதிக்கப்பட்ட ஒரு நம்பி நாராயண் தனக்கான நியாயத்தைப் பெற முடிந்திருக்கிறது. ஆனால், இந்த மண்ணில் நீதியையும் நியாயத்தையும் நம்பிக் கொண்டிருக்கும் எத்தனையோ பேர் கடைசிவரை அதைப் பெற முடியாமல் அரசியலி லும், நிர்வாகத்திலும் தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். காரணம், ராக்கெட்ரியில் இடம்பெறும் பஞ்சாங்கத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையறாதான்.

ச.இராமதாசு சடையாண்டி, -விழுப்புரம்

Advertisment

"விரைவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி யமைக்கும்'’என்று அமித்ஷா கூறியிருப்பது பற்றி?

ஆசைப்படுவதற்கும் முயற்சி எடுப்பதற்கும் ஜனநாயகம் பல வாய்ப்புகளை அளிக்கிறது. ஆனால், பா.ஜ.க.வோ ஒன்றிய அரசில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஊடுருவும் வேலையை மட்டும் செய்துகொண்டி ருக்கிறது. அருகில் உள்ள புதுச்சேரியில் அப்படித் தான் ஊடுருவியிருக்கிறது. தென் மாநிலங்களில் ஆட்சி பற்றி அமித்ஷா பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணா மலை, "தி.மு.க.வில் ஒரு ஷிண்டே உருவாவார்' என ஜோசியம் சொல்கிறார். சட்டமன்ற பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரன், "தமிழ்நாட்டை மோடி இரண்டாக உடைத்துவிடுவார்' என்கிறார். பா.ஜ.க.வில் யாராவது ஒருவராவது, "எங்கள் கொள்கையை மக்களிடம் கொண்டு சென்று ஆட்சியைப் பிடிப்போம்' என்று சொல்லக்கூடிய யோக்கியவான்களாக இருக்கிறார்களா? அந்த யோக்கியத்தன்மை பா.ஜ.க.வுக்கு கிடையாது என்பதால்தான், இந்தியாவில் இரண்டு மோசமான அக்யூஸ்ட்டுகள் இருக்கிறார்கள். ஒருவர்.. அய்யா மோடி, இன்னொருவர் அமித்ஷா என்று போட்டு உடைத்துவிட்டார் பா.ஜ.க.வில் இப்போதைக்கு இருக்கும் நடிகர் ராதாரவி.

ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர் -செங்கல்பட்டு

வெங்கையா நாயுடுவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காதது ஏன்?

கட்சியில் சீனியரான அவருக்கு துணை ஜனாதிபதி பதவியுடனேயே ரிடையர்மெண்ட் கொடுத்துவிடலாம் என மோடி-அமித்ஷா டீம் நினைத்திருக்கலாம்.

mavalianswers

டாக்டர் இரா. அருண்குமார், வாணரப்பேட்டை -புதுச்சேரி

திரௌபதி முர்மு ஜார்கண்ட் ஆளுநராக இருந்தபோதுதான் பழங்குடி மக்கள் அதிகம் வஞ்சிக்கப்பட்டனர்”என்று சீமான் கூறியுள்ளாரே...

சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அவரைப் போல இன்னும் விளக்கமாக சொல்லியிருக்கிறார் இடதுசாரி சிந்தனையாளரும் எழுத்தாளருமான தோழர் அருணன். பா.ஜ.க. ஆட்சியில் அப்துல் கலாம் ஜனாதிபதியாக்கப்பட்டதால் சிறுபான்மை மக்களுக்கு எந்த சிறப்பான நன்மையாவது கிடைத்ததா? ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக்கப்பட்டதால் பட்டியல் இன மக்களுக்கு எந்த நன்மையாவது கிடைத்ததா? அதுபோலத்தான் திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக்குவதால் பழங்குடிகளுக்கு எதுவும் கிடைத்துவிடாது என்று தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க..வுக்கு அப்துல் கலாமும், ராம்நாத் கோவிந்த்தும், திரௌபதி முர்முவும் லேபிள்கள். உள்ளே இருக்கும் சரக்கு, ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு.

பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்

உள்ளாட்சியில் உள்ள பெண் உறுப்பினர்கள் அவர்களின் பொறுப்புகளை தங்கள் கணவரிடம் விட்டு விடாமலும், எந்த வித அச்சமும் இல்லாமலும் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாநாட்டில் பேசியிருப்பது குறித்து?

அந்த மாநாட்டில் முதலில் இதைச் சொன்னவர் பர்வீன் சுல்தானா. "ஆண்கள் தங்கள் அதிகாரத்தைப் பெற 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து அதிகாரம் கிடைத்துள்ளது. அதைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்' என்றார். நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரான கே.என்.நேருவும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் இதை இன்னும் அதிகமாக வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து முதல்வரும் பெண்கள் எத்தனை போராட்டங்கள், அவமானங்கள், நெருக்கடிகளைக் கடந்து இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அழுத்தமாக எடுத்துரைத்து, "இதையெல்லாம் கடந்து பொறுப் புக்கு வந்தது போலவே பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும், கணவரிடம் விட்டுவிடாதீர்கள்... உங்கள் கையெழுத்து வலிமையானது, அதனை மக்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துங் கள்'' என்றார். பெண் பிரதிநிதிகளுக்குச் சொன்ன அறிவுரையை அவர்களின் கணவர்களான கட்சி நிர்வாகிகளுக்கும் அழுத்தமாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

"குஜராத் கலவரத்தில் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக மோடி ஜென்டில்மேன் ஆக நடந்து கொண்டார்' என அமித்ஷா கூறியிருப்பது பற்றி?

ஜென்டில்மேன் என்றால் உள்ளே ஒரு தோற்றமும் வெளியே நேர்மாறான இன்னொரு தோற்றமும் கொண்ட கதாபாத்திரம் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ள சினிமா சித்திரம். அமித்ஷா சொல்லியிருப்பது அப்படிப்பட்டதாக இருக்குமோ!