மல்லிகா கணேசன், பரவை -மதுரை

மேகதாது அல்லது மேகேதாட் அணை கட்டுவதால் அப்படி என்னதான் பிரச்சினைகள் வந்துவிடப் போகிறது?

மேகம் மாதம் மும்மாரி பொழிகின்ற பருவ நிலை மாறிவிட்ட உலகில், தண்ணீருக்கான யுத்தம் தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஒரே நாடு -ஒரே தேர்தல் என்கிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அண்டை மாநிலத்திற்கு ஓடக்கூடிய ஓர் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவது என்பது, இரு தரப்பின் சுமூக முடிவின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். என்னுடைய மாநிலத்திலிருந்துதான் உனக்குத் தண்ணீர் வருகிறது என்ற நினைப்பில், அடுத்த மாநிலத்தின் எதிர்ப்பை மீறி செயல்பட நினைப்பது, ஆற்றுக்கு மட்டுமல்ல... நாட்டுக்கும் நல்ல தல்ல.

மஞ்சுளா சிவலிங்கம், முகப்பேர்

Advertisment

சுதேசிக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் சிறைக்குப் பிந்தைய வாழ்க்கை என்ன ஆனது?

mm

Advertisment

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ், தன் வாழ்க்கையை ஓட்டுவதற்கான போராட்டமாக ஆகிவிட்டது. அவர் சிறையிலிருந்து வெளிவந்தபோது, காங்கிரஸ் கட்சியின் நிலைமை மாறிவிட்டது. இந்திய அளவில் பாலகங்காதர திலகரின் முக்கியத் துவம் குறைந்து, மகாத்மா காந்தியின் பின்னால் அணி திரண்டிருந்தார்கள். தேசத்துரோக குற்றச் சாட்டில் வ.உ.சி. தண்டிக்கப்பட்டதால் அவரது வழக்கறிஞர் உரிமம் பறிக்கப் பட்டிருந்தது. அதை மீட்டுத் தருமாறு, சிறையிலிருந்து விடுதலையான வ.உ.சி., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாப்பூர், மாம்பலம் பகுதி வழக்கறிஞர்களிடம் கோரிக்கை வைத்தார். ஒருவரும் உதவி செய்யவில்லை. தனது குடும்பச் செலவுக்கான வருமானத்திற் காக புத்தகங்கள் எழுதினார். அரிசிக்கடை வைத்தார். மண் ணெண்ணெய் வியாபாரம் செய்தார். ஒவ்வொரு நாளும் போராட்டம்தான். நீதிக் கட்சித் தலைவர்கள், பெரியார் போன்ற சுயமரியாதை இயக் கத் தலைவர்கள், தமிழறிஞர் களுடன் இணைந்து செயல் பட்டார். தொழிற்சங்கப் பணிகளை மேற்கொண்டார். வெள்ளைக்கார அரசாங்கம் அவரை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. அதன் மூலம், அவர் நிலையை அறிந்த வெள்ளைக்கார நீதிபதி வாலேஸ் என்பவர், வ.உ.சி.யின் போராட்ட குணத்தையும் தியாக உணர்வையும் உணர்ந் திருந்ததால், அவருக்கு அந்த வழக்கறிஞர் உரிமம் மீண்டும் கிடைத்திடச் செய்தார். சுதந்திரத்திற்காகப் போராடிய கட்சியினர் பெற்றுத் தராத உரிமத்தை, அடக்கியாளும் ஆட்சியாளர்கள் தரப்பைச் சேர்ந்த ஒருவர் மூலமாகத்தான் பெற முடிந்தது. அதனால்தான், சிறை வாழ்க்கைக்குப் பிறகு தனக்குப் பிறந்த மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் வைத்தார்.

டான்ஜோதி சஞ்சுகிருஷ்ணா, ராயப்பேட்டை

அக்னிபாதை என்ற காண்ட்ராக்ட் பேசிக் இராணுவத்தில் ஒன்றிய மக்கள் பாதுகாப்பு என்பது சாத்தியமாகுமா?

மக்களின் பாதுகாப்பு இருக்கட்டும். ராணுவத்தில் சேர்பவர்களுக்கே இந்த காண்ட்ராக்ட் பாலிசியால் பாதுகாப்பு கிடையாது. 4 வருடத்தில் காண்ட்ராக்ட் முடியறதுக்குள்ளே முடிவெட்டவும், துணி துவைக்கவும் பயிற்சி கொடுத்து சர்டிபிகேட் தருவோம் என்கிறார் அமைச்சர். கட்சியின் தலைவர் ஒருவரோ, எங்கள் அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை தருவோம் என்கிறார். இளைஞர்கள் எதிர்பார்ப்பது job securityRôu, Security job அல்ல.

mm

நடேஷ் கண்ணா, கல்லிடைக்குறிச்சி

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிசீலனை குறித்து?

2019-ல் அமேதியில் தோல்வியடைந்த ராகுல்காந்தி, வயநாடு வெற்றி மூலம்தான் நாடாளுமன்றத்திற்குள் நுழைந் திருக்கிறார். இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தால் ஒரு தொகுதியைக் கட்டாயம் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதற்கான செலவை தேர்தல் ஆணையம் ஏற்றிருக்க வேண்டும். 2014-ல் மோடி அப்படித்தான் வதேதரா, வாரணாசி என இரண்டு தொகுதிகளில் வென்று, ஒன்றை ராஜினாமா செய்து, ஆணையத்திற்கு செலவு வைத்தார். இதைக் கட்டுப்படுத்த ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி என்றோ, இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் செலவை ஏற்க வேண்டும் என்றோ திருத்தம் செய்வது காலத்தின் தேவை.

பிரகதிசுருதி லக்ஷ்மிவைரவன், நவிமும்பை -மகாராஷ்டிரா

காக்காமுட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிப்புத் திறமை மிக்க நடிகையின் படங்கள் அடிக்கடி வராதது ஏன் மாவலி?

காக்கா முட்டை என்றாலும் பொன் முட்டையாக அல்லவா அந்தப் படைப்பு இருந்தது. பொன்முட்டை இடும் திறமை கொண்டவரை, லகான் முட்டை இடும் கோழியாக்கிவிட வேண்டாம் எனத் திரையுலகினர் நினைத்து விட்டார்களோ என்னவோ!