எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
கடனில் சிக்கியுள்ள நாடுகளை மீட்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியது குறித்து?
மோடிக்கு இப்படியொரு ஓப்பன் அட்வைஸ் தந்த நிதியமைச்சரைப் பாராட்ட லாமே!
மஞ்சுளா சிவலிங்கம், மொகப்பேர்
இந்தியாவில் நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமா?
நேரு காலத்திலிருந்து மோடி காலம் வரை நதிகள் இணைப்பு பற்றிப் பேசப்படுகிறது. கங்கை- காவிரி இணைப்பு என்பது நெடுங்கனவு. அதற்கு முன்பாக, அருகருகே உள்ள ஆறுகளை இணைப்பது முதன்மையானது. தமிழ்நாட்டில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அறிவிக்கப் பட்டு ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது. அரசியல் காரணங்களால் அது அப்படியே கிடக்கிறது. இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் களைத் தீர்க்கத் தீர்ப்பாயங்களும் ஆணையங்களும் தேவைப்படு கின்றன. உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருக்கிறது. நீர் மேலாண்மையில் தமிழ்நா
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
கடனில் சிக்கியுள்ள நாடுகளை மீட்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியது குறித்து?
மோடிக்கு இப்படியொரு ஓப்பன் அட்வைஸ் தந்த நிதியமைச்சரைப் பாராட்ட லாமே!
மஞ்சுளா சிவலிங்கம், மொகப்பேர்
இந்தியாவில் நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமா?
நேரு காலத்திலிருந்து மோடி காலம் வரை நதிகள் இணைப்பு பற்றிப் பேசப்படுகிறது. கங்கை- காவிரி இணைப்பு என்பது நெடுங்கனவு. அதற்கு முன்பாக, அருகருகே உள்ள ஆறுகளை இணைப்பது முதன்மையானது. தமிழ்நாட்டில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அறிவிக்கப் பட்டு ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது. அரசியல் காரணங்களால் அது அப்படியே கிடக்கிறது. இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் களைத் தீர்க்கத் தீர்ப்பாயங்களும் ஆணையங்களும் தேவைப்படு கின்றன. உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருக்கிறது. நீர் மேலாண்மையில் தமிழ்நாடு ஏறத் தாழ இரண்டாயிரம் ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ளது. மழை நீரையும், ஆற்று நீரையும் வீணடிக்காமலும், நீர் நிலைகளை ஆக்கிரமிக்காமலும் இருந்தாலே தண்ணீர்த் தேவையைப் பெருமளவு சமாளித்து விட முடியும் என்கிறார் கள் சூழலியல் ஆர்வலர்கள்.
கார்த்திகா, துவரிமான் -மதுரை
கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்ட நிகழ்வில் சிங்கள மக்கள் கலந்துகொண்டது பற்றி?
எந்த ராஜபக்சேக்களை கதாநாயகர்களாக சிங்கள மக்கள் பார்த்தார்களோ, தமிழீழத்துக்கானப் போர் முடிந்துவிட்டதால் தங்கள் வாழ்வு செழிக்கும் என நினைத்தார்களோ அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, உள்ளதும் போச்சு என்ற நிலையில், இலங்கையின் பொருளாதாரச் சீரழிவு அதே ராஜபக்சேக்களால் ஏற்பட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சிங்கள மக்கள் போராடுகிறார்கள். அவர்களுடன் தமிழர்களும் இணைந்து நிற்கிறார்கள். உணர்வு நிரந்தரமானது. உணவு நேரா நேரத்திற்குத் தேவைப்படுவது. சிங்களன் என்ற உணர்வில் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் இருந்த கொடூரக் காலத்தை மறக்க முடியாது என்றாலும், பசி என்று வரும்போது சிங்களர், தமிழர் எல்லாருக்கும் ஒரே மாதிரி வயிறுதானே! அதனால்தான் தங்களின் பழைய தவறுகளுக்குப் பிராயச் சித்தம் தேடுவதுபோல காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்று, புத்த பிக்குகள் உள்ளிட்ட சிங்களர்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஆளுநர் தனிப்பட்ட கண்ணோட்டத்தில் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றி?
அரசியல் சட்டப் பிரிவு 161ன்படி, தண்டனைக் குறைப்பு-விடுதலை ஆகியவை குறித்து மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும் என்பதுதான் நமது அரசியல் சாசனம். கேரளா இதில் முன்னுதாரணம் படைத்த மாநிலம். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் 161ன்படி, தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள், நளினி ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2014ல் 7 பேர் விடுதலைக்கான வாய்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியபோது, அந்த சட்டப்பிரிவைப் பயன்படுத்தாமல், வேறு வழிகளில் குழப்பத்தை உருவாக்கி, 7 பேரும் மேலும் 8 ஆண்டுகள் சிறையில் அடைபடக் காரணமாக இருந்தவர்தான் ஈழத்தாய் எனப் பட்டம் சூட்டப்பட்ட ஜெயலலிதா. பின்னர், நீதிமன்ற வழிகாட்டுதல்படி எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை 161வது பிரிவைப் பயன்படுத்தித் தீர்மானம் நிறைவேற்றியது. அதனை ஆளுநர்கள் பன்வாரிலால் புரோகித்தும், ஆர்.என்.ரவியும் கிடப்பில் போட்டு வைத்து, பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பினார்கள். இது மாநில அரசின் உரிமையை மீறிய செயல் என தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. வாதத்தின் நியாயத்தை ஏற்று, உச்சநீதிமன்றம், அரசியல் சாசனத்தின் 142வது பிரிவின்படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான தீர்ப்பளித்துள்ளது. ஆனால் எல்லா வழக்கிலும் 142வது பிரிவைப் பயன்படுத்துவது சாத்தியமல்ல என்றும், மாநில அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க கால அளவு நிர்ணயிக்க வேண்டிய காலம் இது என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
எஸ்.சிங்காரவேலன், சிதம்பரபுரம் -களக்காடு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் மோடியையும் ஒப்பிட்டு ஒற்றுமையையும் வேற்று மையையும் சொல்லுங்களேன்?
ஒருவர் குர்தா அணிந்த ஜெயலலிதா. மற்றொருவர் சேலை அணிந்த மோடி. இருவரிடமும் ஜனநாயகம் பட்டபாடு... ... ...
ஈ.திலகர், தேவூர் மேட்டுக்கடை
இலங்கையில் ரணில் விக்ரம சிங்கே சமாளித்து தாக்குப்பிடித்து விடுவாரா?
அவர் இப்போது சமாளிக்க வேண்டியது இலங்கையை அல்ல, ராஜபக்சே குடும்பத்தினரை.
பிரகதி சுருதி, நவி மும்பை -மகாராஷ்டிரா
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எப்போதுதான் நடக்கும்?
நடக்காவிட்டால் குடியா முழுகிவிடும். அவர்கள் நன்றாகத் தானே அன்புக் குடித்தனம் நடத்து கிறார்கள்.