எம்.தேஜா, ஞானம் நகர் -நாகர்கோயில்
கமலின் பழைய விக்ரம், புதிய விக்ரம் என்ன வேறுபாடு?
கமலின் பழைய "விக்ரம்' 1986-ம் ஆண்டு வெளி யானது. அப்பவே அதுக்கு ஒரு கோடி ரூபாய் கனவு என்று கமல் சொன்னார். ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் அது. படத்தின் இயக்குனர் ராஜசேகர். இசை இளையராஜா. கதை வசனம் எழுத்தாளர் சுஜாதா. மிகப் பெரிய அளவில் விளம்பரபடுத்தப்பட்டு பத்திரிகையில் தொடராக கூட அந்த "விக்ரம்' கதை வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அது வணிக ரீதியான வெற்றியை தரவில்லை. இப்போதைய படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இசை அனிருத். அப்போதைய கதை வசனகர்த்தா சுஜாதா இப்போது இல்லை. அப்போதைய இயக்குனர் ராஜசேகர் இப்போது உயிருடன் இல்லை. இன்றும் இசை யால் ரசிகர்களை மயக்கிக்கொண்டி ருப்பவர் இளையராஜா. ஆனால் காலத்தின் மாற்றம், இளைய ராஜா இல்லாமல் அனிருத் இசையில் படம் வெளி வருகிறது. பழைய "விக்ரம்' படத்தின் டைட்டில
எம்.தேஜா, ஞானம் நகர் -நாகர்கோயில்
கமலின் பழைய விக்ரம், புதிய விக்ரம் என்ன வேறுபாடு?
கமலின் பழைய "விக்ரம்' 1986-ம் ஆண்டு வெளி யானது. அப்பவே அதுக்கு ஒரு கோடி ரூபாய் கனவு என்று கமல் சொன்னார். ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் அது. படத்தின் இயக்குனர் ராஜசேகர். இசை இளையராஜா. கதை வசனம் எழுத்தாளர் சுஜாதா. மிகப் பெரிய அளவில் விளம்பரபடுத்தப்பட்டு பத்திரிகையில் தொடராக கூட அந்த "விக்ரம்' கதை வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அது வணிக ரீதியான வெற்றியை தரவில்லை. இப்போதைய படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இசை அனிருத். அப்போதைய கதை வசனகர்த்தா சுஜாதா இப்போது இல்லை. அப்போதைய இயக்குனர் ராஜசேகர் இப்போது உயிருடன் இல்லை. இன்றும் இசை யால் ரசிகர்களை மயக்கிக்கொண்டி ருப்பவர் இளையராஜா. ஆனால் காலத்தின் மாற்றம், இளைய ராஜா இல்லாமல் அனிருத் இசையில் படம் வெளி வருகிறது. பழைய "விக்ரம்' படத்தின் டைட்டில் ஸாங்கி லேயே அவர்கள் கமலுடைய நடனம் எல்லோரையும் கவர்ந் திழுக்கும். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் டிரை லரில் ஒரு நடனக் காட்சியை வைத்திருக்கிறார்கள் ஆனால் 36 ஆண்டுகளுக்கு முன்பு கமலின் கால்கள் எப்படி ஆடின, இப்பொழுது எப்படி ஆடுகின்றன என்பது அவருடைய அரசியல் தள்ளாட்டம் போலவே கண்களுக்கு தெரிகிறது.
க.ரோகித் பாண்டியா, சென்னை
எம்.ஜி.ஆர். -சிவாஜி ரசிகர்கள், ரஜினி -கமல் ரசிகர்கள், விஜய் -அஜித் ரசிகர்கள் என்ன வேறுபாடு?
எம்.ஜி.ஆர். -சிவாஜி ரசிகர்கள் மோதிக்கொண்ட போது ஒருவர் படத்தின் மீது இன்னொருவர் சாணி அடிப்பது வழக்கமாக இருந்தது. கமல் -ரஜினி ரசிகர்கள் மோதிக் கொண்ட பொழுது பேனரை கிழிப்பது வழக்கமாக இருந்தது. விஜய் -அஜித் ரசிகர்கள் மோதல் என்பது சமூக வலைத்தளங்களில் கண்டமேனிக்கு ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதாக இருக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நட்பாக இருந்தார்கள். ரஜினியும் கமலும் நட்பு பாராட்டினார்கள். விஜய்யும் அஜித்தும் அதேபோல் நட்பின் நெருக்கத்தை அடிக்கடி காட்டிக்கொள்கிறார்கள். கதாநாயகர்களுக்கும் ரசிகர்களுக்கும் மன வேறுபாடு காலம்தோறும் இப்படித்தான் இருக்கிறது.
சமந்தா, ஆஸ்திரேலியா
ரஜினியும் கமலும் மீண்டும் சேர்ந்து நடிப்பார்கள் என்று நீண்டகாலமாக செய்தி கள் வருகிறதே?
கமல் கதாநாயகனாக பரிமாணம் எடுக்கத் தொடங்கிய அந்த காலகட்டத்தில், ரஜினி திரைப்படத்தில் நடிக்க வந்தார். இருவருக்கும் திரைப்படங்களில் குருநாதரான கே பாலச்சந்தர் முயற்சியால், அவருடைய இயக்கத்தில் பல படங்களில் இணைந்து நடித்தார்கள். பாரதிராஜாவின் "16 வயதினிலே' படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். ஒரு சில படங்களில் கமலுக்கு முக்கியத்துவமும் ஒரு சில படங்களில் ரஜினிக்கு முக்கியத்துவமும் அமையக் கூடிய வகையில் இருந்தது. அப்படிப்பட்ட படங்கள் வெளியான திரையரங்குகளில் இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வது என்ற அளவுக்கு சூழல் ஏற்பட்டதும் உண்டு. பின்னர் தனித்தனி படங்களில் நடிக்க ஆரம்பித்து, ரஜினி சூப்பர் ஸ்டாராகவும் கமலஹாசனும் உலகநாயகன் என்ற பெயர் பெறும் அளவுக்கும் சென் றார்கள். இருவர் பாதையும் தனித்துவிட்டது. ரசிகர்களும் அவரவர்கள் பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கால மும் மாறிவிட்டது இப்போது இருவரும் மீண்டும் சேர்ந்து நடித்தால், வெற்று ஹீரோயிஸம் இல்லாத, பொருத்தமான கதைக்கு ஏற்ற வகையில் இரு வரும் நடித்தால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அப்படி யான ஒரு படம் எப்போது வரும் என்று இருவருக்குமே தெரியுமா என்று தெரியவில்லை.
பாலு, திருநெல்வேலி
சினிமா தியேட்டரில் படம் பார்ப்பது போல ஓ.டி.டி.யில் படம் பார்ப்பது சுகமாக இருக்கிறதா?
ரசனைகள் காலம் தோறும் மாறக்கூடியவை. ஒரு காலத்தில் தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றை ரசிகர்கள் பார்த்தார்கள். சினிமா வந்த போது, என்னதான் நாடகத்தில் நேரடியாக நடிகர்களை பார்ப்பதுபோல சினிமாவில் பார்க்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. அப்பொழுது பேசும் படங்கள் இல்லை. எனவே பேசும் படங்கள் பவந்த பொழுது, என்ன இருந்தாலும் மௌனப் படத்தில் இருக்கக்கூடிய உணர்ச்சிப் பூர்வம், பேசும் படத்தில் இல்லை என்றனர். அப்புறம், கருப்பு வெள்ளை படத்தை தாண்டி கட் வண்ணப்படங்கள் வந்தபோதும் அப்படித்தான் மனநிலையும் விமர்சனங்களும் இருந்தது. டென்ட் கொட்டாயில் மணலை குவித்து படம் பார்க்கின்ற சொர்க்கம் ஏ.சி. தியேட்டரில் இல்லை என்கின்ற எண்ணமும் கூட இருந்தது. இப்படி ஒவ் வொரு முறையும் காலத்திற்கேற்ப எண்ணங்கள் மாறும் தியேட்டரிலிருந்து படங்கள் இப்பொழுது ஓ.டி.டி. வழியாக வீட்டிலேயே பார்க்கக்கூடிய அளவிற்கு காலம் வளர்ந் திருக்கிறது. ஓ.டி.டி. தளத்தில் படங்களை பார்க்கின்ற வகை யில் வீட்டிலேயே ஹோம் தியேட்டரை அமைக்கும் தலைமுறை உருவாகியிருக்கிறது. ரசனைகள் காலம்தோறும் மாறும், அதற்கேற்ப கலைப் படைப்புகள் வந்துகொண்டே யிருக்கும்.