மாவலி பதில்கள்

dd

நித்திலா, தேவதானப்பட்டி

ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக வீடும், அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் சிங்கள மக்களாலேயே தீ வைத்து எரிக்கப்பட்ட தைப் பார்த்தபோது எப்படி இருந்தது?

"அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்' என்ற சிலப்பதிகார வரிகள்தான் நினைவுக்கு வந்தன. இனவெறியை எரிநெய் ஊற்றி வளர்த்தவர்கள் ராஜபக்சே சகோதரர் கள். தமிழர்களைக் கொன்றதை வெற்றியாக சிங்கள மக்களிடம் பறைசாற்றிய ராஜபக்சே சகோதரர்கள் ஒரு மாமாங்க காலத்திற்குள் அதே சிங்கள மக்களின் பெரும் கொந்தளிப் பினால் நாட்டை விட்டு ஓடக்கூடிய அளவிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஹிட்லர்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

வாசுதேவன், பெங்களூரு

இலங்கை பிரதமர் மகிந்த ராஜ பக்சே ராஜினாமா?

மகிந்தா ராஜினாமா செய்தாலும் கோத்தபய ஜனாதிபதியாக நீடிக்கிறார். ராஜபக்சே குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் இலங்கை யின் அரசு நிர்வாகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, இனவாத உணர்வு உள்ளிட்ட அனைத்திலும் பரவியுள்ளது. மகிந்த ராஜபக்சே பதவி விலக

நித்திலா, தேவதானப்பட்டி

ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக வீடும், அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் சிங்கள மக்களாலேயே தீ வைத்து எரிக்கப்பட்ட தைப் பார்த்தபோது எப்படி இருந்தது?

"அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்' என்ற சிலப்பதிகார வரிகள்தான் நினைவுக்கு வந்தன. இனவெறியை எரிநெய் ஊற்றி வளர்த்தவர்கள் ராஜபக்சே சகோதரர் கள். தமிழர்களைக் கொன்றதை வெற்றியாக சிங்கள மக்களிடம் பறைசாற்றிய ராஜபக்சே சகோதரர்கள் ஒரு மாமாங்க காலத்திற்குள் அதே சிங்கள மக்களின் பெரும் கொந்தளிப் பினால் நாட்டை விட்டு ஓடக்கூடிய அளவிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஹிட்லர்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

வாசுதேவன், பெங்களூரு

இலங்கை பிரதமர் மகிந்த ராஜ பக்சே ராஜினாமா?

மகிந்தா ராஜினாமா செய்தாலும் கோத்தபய ஜனாதிபதியாக நீடிக்கிறார். ராஜபக்சே குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் இலங்கை யின் அரசு நிர்வாகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, இனவாத உணர்வு உள்ளிட்ட அனைத்திலும் பரவியுள்ளது. மகிந்த ராஜபக்சே பதவி விலகி, பயந்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும், அடுத்து அமையும் ஆட்சியைப் பொறுத்தே இலங்கையின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என தமிழ் -சிங்கள அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இந்தியாவைப் போல பிரிட்டிஷார் ஆட்சியின்கீழ் இலங்கை இருந்தது. இந்தியாவை இந்தியா -பாகிஸ்தான் என இரண்டாகப் பிரித்த பிரிட்டிஷார், இலங்கையை இலங்கை -ஈழம் என பிரித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. 1972-ல் இலங்கையின் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டார நாயகா ஆட்சியில் சிங்களம் மட்டுமே இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழி என்றும், பௌத்தம் மட்டுமே அதிகாரப் பூர்வ மதம் என்றும் நிலைநாட்டப்பட்டது. இதனை எதிர்த்து, தமிழர்கள் வாழும் வடக்கு -கிழக்கு மாகாணத்தில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடந்த மாநாட்டில், சுதந்திரத் தமிழீழத்தை வலியுறுத்தி தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இலங்கையில் முன்புபோல சம உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி "தமிழர் தந்தை' எனப் போற்றப்பட்ட செல்வா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டு, தமிழர் வாழும் பகுதிகளில் பெரும் வெற்றிபெற்று, இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தமிழர்கள் அமர்ந்தனர். இந்த ஒற்றுமையும், உரிமைக் குரலும் சிங்களப் பேரினவாதத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததன் விளைவுதான் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதல். அது ஜெயவர்த்தனா ஆட்சியில் வெளிப்படையாக நடந்தது. பிரேமதாசா, சந்திரிகா, ரணில் விக்ரமசிங்கே காலங்களில் வெவ்வேறு வகையில் தொடர்ந்தது. ராஜபக்சே எனும் கொடுங்கோலன் ஆட்சியில் சர்வதேச சதியுடனும் துணையுடனும் இனப்படுகொலை மிகக்கொடூரமாக அரங்கேறியது. ஆள்பவர்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாத நிலை யில், அடுத்து அமையும் ஆட்சிகளால் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

தூயா, நெய்வேலி

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலை மைக்குக் காரணம் பொருளாதாரச் சீர்கேடுதானே? அப்படியென்றால் அது சிங்களர்களுக்கு மட்டுமா பாதிப்பு, அங்கு வாழும் தமிழர்களும்தானே பாதிக்கப்படுவார்கள்?

பொருளாதார நெருக்கடிகளையும் ராணுவத்தின் சித்திரவதைகளையும் 40 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் கள் எதிர்கொண்டு வருகிறார்கள். ஏறத்தாழ 30 ஆண்டு காலம் துப்பாக்கித் தோட்டாக்களும், கண்ணி வெடிகளும், கொத்துக் குண்டுகளுமாக அவர்களின் காதுகளைத் துளைத் தன. உடலைத் துளைத்து உயிரை உருவின. அரிசிக்கும் மண்ணெண்ணைக்கும் அலைந்தனர். இன்று படுத்தால், நாளை எழுந்திருப்பது நிச்சயமா என்பது தெரியாமல் வாழ்ந்தனர். சிங்கள மக்களுக்கு அந்த பாதிப்பு அப்போது இல்லை. தமிழர் பகுதிகள் மீது இலங்கை ராணுவம் நடத் திய தாக்குதலை தேசப்பற்றின் அடையாளமாகக் கருதினர். தற்போதுதான் இலங்கை ஆட்சியாளர்களின் உண்மை முகத்தையும், இலங்கைப் பொருளாதாரத்தின் யதார்த்த நிலையையும் சிங்கள மக்கள் உணர்ந்துள்ளனர். அதுதான் அவர்களுடைய போராட்டத்தின் எழுச்சி. ராணுவ அடக்குமுறைகளைக் கடந்து, தெருக்களில் போராடும் சிங்கள மக்கள், ஆட்சியாளர்களுடைய குடும்பத்தாரின் சொத்துகளை குறி வைத்து சேதப்படுத்துகிறார் கள். தமிழீழப் பகுதியில் வாழும் தமிழர்கள் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பு உணர்வுட னும் கொழும்பில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ff

சு.வெங்கடேஷ், கோட்டயம்

சிங்களன், தமிழன் என்ற உணர்வு இருந்தாலும், வயிற்றுப் பசி என்று வருகிறபோது எல்லா மக்களும் ஒன்று தான். அதை உணர்ந்தாவது இலங்கையின் பெரும்பான்மையினரான பௌத்த சிங்களர்கள் இனி தமிழர்களுடன் இணக்கமாக இருப்பார்களா?

எல்லா நாட்டிலும் இன -மத வெறியைத் தூண்டும் சக்திகளும் இருக் கும். இணக்கத்தை வலியுறுத்தும் சக்திகளும் இருக்கும். இனவெறிப் படு கொலைகள் நடந்தபோதே நல்லிணக் கத்தை வலியுறுத்தி உயிரையே இழந்த பத்திரிகையாளர் லசந்தா போன்ற சிங்களர்களும் உண்டு. தற்போது பொருளாதார நெருக்கடியும் நிர்வாகச் சீர்கேடும் இலங்கையை சின்னாபின்ன மாக்கியுள்ள நிலையில் அங்கே ஒரு பாடல் வைரலாகியுள்ளது. ‘"போராட் டம் வெல்லும் தோழா.. அரகலயட்ட ஜெயவேவா.. ஏர் ஏர்ற்ஹ.. ஏர் ஐர்ம்ங்'’ என்று தமிழ் -சிங்களம் -ஆங்கிலம் கலந்த பாடல் மூலம் கோத்தபயாவை வெளி யேறச் சொல்லும் பாடல் வீதிகளில் ஒலிக்கிறது. இந்த இணைப்புக் குரல் நீடிப் பதில் இருக்கிறது இன நல்லிணக்கம்.

சங்கரசுப்பிரமணியன், பாளை, நெல்லை

இலங்கை நிலை குறித்து இந்தியப் பிரதமர் என்ன நினைப் பார்?

அடுத்து நம்ம பக்கம்தானே திரும்புவாங்க என்ற வடிவேலுவின் வசனத்தை நினைக்கக்கூடும்.

nkn140522
இதையும் படியுங்கள்
Subscribe