மாவலி பதில்கள்

gg

தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45

காஷ்மீரில் ஒரு பக்கம் மோடி நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். மறுபுறம் பாதுகாப்பு படையால் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

2019-ல் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்ததும் காஷ்மீருக்கான உரிமைகளைப் பறித்தது. ஜம்மு-காஷ்மீர் என்கிற மாநிலத்தின் அந்தஸ்தையும் பறித்தது. இணையதள சேவைகளை முடக்கியது. தற்போது பண்டிட்டுகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பேதங்களை வளர்க்கும் வகையில் வியூகங்களை வகுக்கிறது. இன்னொரு பக்கம், இதனையே சாதகமாக்கிக் கொண்டு தீவிரவாத அமைப்புகளை ஊக்கப்படுத்தி வருகிறது பாகிஸ்தான். ஜனநாயகத்தன்மை இல்லாமல் இரு நாடுகளும் சர்வாதிகாரமாகச் செயல்படுகின்றன.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஜூன் 3 கலைஞர் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்கின்ற அறிவிப்பு குறித்து?

நவீன தமிழ்நாட்டை வடிவமைத்ததில்

தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45

காஷ்மீரில் ஒரு பக்கம் மோடி நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். மறுபுறம் பாதுகாப்பு படையால் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

2019-ல் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்ததும் காஷ்மீருக்கான உரிமைகளைப் பறித்தது. ஜம்மு-காஷ்மீர் என்கிற மாநிலத்தின் அந்தஸ்தையும் பறித்தது. இணையதள சேவைகளை முடக்கியது. தற்போது பண்டிட்டுகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பேதங்களை வளர்க்கும் வகையில் வியூகங்களை வகுக்கிறது. இன்னொரு பக்கம், இதனையே சாதகமாக்கிக் கொண்டு தீவிரவாத அமைப்புகளை ஊக்கப்படுத்தி வருகிறது பாகிஸ்தான். ஜனநாயகத்தன்மை இல்லாமல் இரு நாடுகளும் சர்வாதிகாரமாகச் செயல்படுகின்றன.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஜூன் 3 கலைஞர் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்கின்ற அறிவிப்பு குறித்து?

நவீன தமிழ்நாட்டை வடிவமைத்ததில் கலைஞருக்குப் பெரும் பங்கு உண்டு. கிராமங் களுக்கு மின்வசதி, போக்குவரத்து, சிமெண்ட் சாலை, கான்க்ரீட் வீடுகள் போன்ற நவீனக் கட்டமைப்பை உருவாக்கி, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விளைந்த பொருட்களை விற்பதற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் -உழவர் சந்தை போன்றவற்றை ஏற்படுத்தியவர் கலைஞர். நகரங்களில் பட்டர்ஃப்ளை மேம்பாலங்கள், டைடல் பார்க்குகள் போன்றவையும் உண்டு. வள்ளுவர் கோட்டம் போன்ற கட்டடங்கள் -சங்கமம் போன்ற கலை நிகழ்ச்சிகள் எனப் பழந்தமிழர் பெருமை பேசும் அடையாளங்களும் உண்டு. இப்படி கிராமத்திற்கும் நகரத்திற்கும் சீரான வளர்ச்சியை உருவாக்கியவர். காலத்திற்கேற்ற வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்தியவர். பெண்களுக்கு சொத்துரிமை, திருநங்கையர் எனப் பெயர்சூட்டி அவர்களுக்கான வாரியம், மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் வைத்து அந்தத் துறையை தன் பொறுப்பில் கவனித்தது என சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுவர்களை சமூக நீதித் தத்துவத்தால் மீட்டவர் கலைஞர். நின்ற தேர்தல்கள் அனைத்தி லும் வென்றவர். 13 முறை சட்டமன்ற உறுப்பின ரான சாதனையாளர். ஓமந்தூரார் அரசினர் தோட் டத்தில் அவர் ஆட்சியில் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை அரசியல் காழ்ப்புணர்வால் மருத்துவ மனையாக மாற்றினார் ஜெயலலிதா. அந்த வளாகத் தின் முன்பே கலைஞருக்கு அரசு சார்பில் முழு உருவச் சிலை வைத்து, அவரது பிறந்தநாளான ஜூன் 3 அன்று அரசு விழாவாகக் கொண்டாடப் படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மகன் தந்தைக்காற்றும் உதவி இது.

mm

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

தமிழகத்திற்கு தர வேண்டிய வரி பங்குப் பணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டுப் பற்றி?

தமிழ்நாட்டுக்கு மட்டுமா? மகாராஷ்ட்ரா வுக்கு வரவில்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சொல்கிறார். மேற்கு வங்கத்திற்கு வர வில்லை என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சொல்கிறார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவோ வசூல் வரிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே இருக்க வேண்டும் என்கிறார். மாநில உரிமைகளைப் புறக்கணித்துவிட்டு, பெட்ரோல்- டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி வரும் ஒன் றிய அரசின் பிரதமர் மோடியோ, பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்காததால்தான் விலையேற்றம் என்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மீது பழியைப் போடுகிறார். இத்தனை மோசமாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைப் பாகுபாடு கொண்ட கண்களுடன் பார்த்த பிரதமர் இந்தியா வில் இதுவரை இருந்ததில்லை. 5 மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் முடியும் வரை பெட்ரோல்- டீசல் விலையைக் கட்டுப்பாடாக வைத்திருந்து விட்டு, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தாறுமாறாக உயர்த்தியது யார் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கேள்வியில் நியாயம் உள்ளது. மற்ற மாநிலங்களும் நியாயம் கேட்கின்றன.

பிரியன் மார்க்ஸ், தரமணி

திருக்கோயில்களில் ஆகம முறைப்படிதான் அனைத்தும் நடைபெறு கின்றனவா?

கோவில் சிலைகளைத் திருடிய வழக்கில் கைதாகும் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகளையும், காஞ்சிபுரம் கோயில் கருவறையில் சிறப்பு பூசை நடத்திய தேவநாதன் போன்ற குருக்களிடமும் கேட்க வேண்டிய கேள்வி.

ஜோதிடான் சஞ்சுகிருஷ்ணா, ராயப்பேட்டை

தமிழக அரசை ஏன் பா.ஜ.க.வினர் சீண்டிக்கொண்டேயிருக்கிறார்கள்?

வெற்றிவேல் -வீரவேல் என்று சொல்லி தமிழ்நாட்டு அரசியலில் குழப்பம் விளை விக்கலாம் என நினைத்தவர் களை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லி பதவிப்பிரமாணம் ஏற்று அதிர வைத்தவரை சும்மா இருக்க விடுவார்களா? ஆட்சியின் ஓராண்டு நிறைவடைவதற்குள் ஓராயிரம் பிரச்சினைகளைக் கிளப்பி, சீண்டிக்கொண்டே யிருக்கிறார்கள். அரசியலில் கால் ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும். அ.தி.மு.க. விழித்திருந்தும் அசையாமல் இருக்கிறது. பா.ஜ.க. எழுந்திருக்காவிட்டாலும் கால் ஆட்டிக் கொண்டேயிருக்கிறது.

nkn040522
இதையும் படியுங்கள்
Subscribe