பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பீகார், உ.பி, மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் "தி.மு.க.' போட்டியிட உள்ளதாமே... உண்மையா?
ஒரு காலத்தில் பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் ஓரிரு தொகுதிகளில் தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளும் போட்டியிடும் வாய்ப்பும், அதில் ஒரு கட்சி வெற்றி பெறும் சூழலும் இருந்தது. இப்போது, தமிழ் நாட்டுக்குள்தான் போட்டி. என் உயரம் எனக்குத் தெரியும் என்றவர் கலைஞர். அவரது மகனுக்கும், தி.மு.க.வின் உயரம் தெரியும். அதே நேரத்தில், இந்திய அரசியலில் மாற்றங்களை உருவாக்குவதில் தி.மு.க. முக்கிய பங்காற்றியுள்ளது. பீகார், உ.பி, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி, பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் ஓரணிக்கு கிடைக்கும் வகையிலான அரசியல் கூட்டணியை உருவாக்கும் வ
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பீகார், உ.பி, மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் "தி.மு.க.' போட்டியிட உள்ளதாமே... உண்மையா?
ஒரு காலத்தில் பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் ஓரிரு தொகுதிகளில் தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளும் போட்டியிடும் வாய்ப்பும், அதில் ஒரு கட்சி வெற்றி பெறும் சூழலும் இருந்தது. இப்போது, தமிழ் நாட்டுக்குள்தான் போட்டி. என் உயரம் எனக்குத் தெரியும் என்றவர் கலைஞர். அவரது மகனுக்கும், தி.மு.க.வின் உயரம் தெரியும். அதே நேரத்தில், இந்திய அரசியலில் மாற்றங்களை உருவாக்குவதில் தி.மு.க. முக்கிய பங்காற்றியுள்ளது. பீகார், உ.பி, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி, பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் ஓரணிக்கு கிடைக்கும் வகையிலான அரசியல் கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பு தி.மு.க. தலைவருக்கு இருக்கிறது.
தே.அண்ணாதுரை, புதுப்பட்டி
படிக்காத இரண்டு முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆட்சி பற்றி?
அரசியலுக்கு படிப்பு ஓர் அளவுகோல் இல்லை. ஆட்சி நிர்வாகத்திற்கு பொதுநலனும் அனுபவமும் போதும். காமராஜரும், எம்.ஜி.ஆரும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாதவர்கள். கலைஞரும், ஜெயலலிதாவும் பட்டப் படிப்பு படிக்காதவர்கள். பேரறிஞர் அண்ணா இரட்டைப் பட்டங்கள் பெற்றவர். இவர்கள் எந்த அளவு படித்தார்கள் என்பது முக்கியமல்ல, இவர்களின் ஆட்சிக்காலங்களில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவை பரவலாகி, பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பட்டம் பெற்றவர்கள் அதிகம் என்ற நிலையை உருவாக்கினார்கள்.
பி.மணி, குப்பம் -ஆந்திரா
பா.ஜ.க. இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து ஆட்சி செய்வதாக தமிழக முதல்வர் குற்றம் சாட்டியிருப்பது?
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி நேரடியாக வெற்றிபெற முயற்சிப்பது, முடியாவிட்டால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பது, அதுவும் நடக்கவில்லையென்றால் ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநரைக் கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை முடக்க நினைப்பது... இதுதான் பா.ஜக.வின் பாணி. மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகியவை அதன் முக்கிய டார்கெட். அதை உணர்ந்துதான் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
ஆம் ஆத்மி கட்சி இரண்டு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது பற்றி காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கும்?
ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களாவது தங்களுக்கு மிஞ்சுமா என்று காங்கிரஸ் தலைமை யோசிக்கும். யோசிக்க வேண்டும்.
அ. யாழினிபர்வதம், சென்னை-78
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏராளமாக இருந்தும் மோடிக்கு சமமாக முடியவில்லையே, ஏன்?
மோடி என்றால் செருக்கு, ஆடம்பரம், பிணக்கு, வஞ்சகம் என்கிறது ஓர் அகராதி. அத்தனையும் கொண்ட தலைவர்கள் இல்லாதது காரணமாக இருக்கலாம்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
அரசியல் அமைப்பு இல்லாத மன்னர் ஆட்சிக் காலம் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும்?
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல இருக்கும். ஜி.எஸ்.டி.க்குப் பதில் வரி, வட்டி, திரை, கிஸ்தி எனப் பல வழிமுறைகள் இருக்கும். பெட்ரோல், டீசல் விலையேறி மக்கள் அவதிப்பட்டாலும் மன்னருக்கு குதிரைகள் பூட்டிய ரதம் இருக்கும். அரசியர்களுடன் கவலையில்லாமல் பயணிப்பார்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வந்துவிட்டதே... இனி அ.தி.மு.க.வில் பிரச்சனைகள் ஓயுமா?
சசிகலாவுக்கு இடம் இல்லாவிட்டாலும், ஓ.பி.எஸ். இருக்கிறாரே!
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
பாகிஸ்தான் அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா?
பக்கத்து வீட்டில் சண்டை என்றால் உங்கள் வீட்டு ஜன்னலை மூடுவீர்களா? திறந்து வைப்பீர்களா? அங்கே எது நடந்தாலும் இங்கும், இங்கே எது நடந்தாலும் அங்கும் எந்தளவு சாதகம் என்றே கவனிக்கப்படும்.
ரேகா, கன்னியாகுமரி
ஞானியாரடிகள் என்ற சாமியாருக்கும், நாத்திகம் பேசிய பெரியாருக்கும் உள்ள உறவு முறை என்ன?
சாதி ஏற்றத் தாழ்வற்ற சமூக நீதி. சமஸ்கிருத ஆதிக்கமற்ற ஆன்மிகம் -இதுதான் உறவு. பெரியாரின் "குடி அரசு' இதழைத் தொடங்கி வைத்த வர் ஞானியாரடிகள்.
அதிதன் சமரன், தரமணி -சென்னை
டீக்கடைகளில் தனித்தனி டம்ளர்கள் என்னும் தீண்டாமைக் கொடுமைகள் இன்றும் உள்ளதா மாவலி?
அதைக் கடந்த தீண்டாமைக் கொடுமைகளும் உண்டு. சட்டத்தை மீறிய சனாதன வழிமுறைகள் முற்றிலுமாக அழியவில்லை. வெவ்வேறு வடிவில் முளைத்தபடியே இருக்கும்.