பா.ஜெயப்பிரகாஷ், தேனி

உலகின் மகிழ்ச்சியான நாடு களின் பட்டியலில் 'பின்லாந்து' உள்ள தாமே... உண்மையா?

மகிழ்ச்சி என் பது வசதியில் இல்லை. வாழ்வதில் இருக்கிறது. அந்த வகையில் பின்லாந்து மக்களின் மனநிலைக் கேற்ற அரசுத் திட் டங்கள் கல்வி முதல் தொழில் வளர்ச்சி வரை இடம்பெற் றுள்ளது. அது அவர்களின் மனச் சிக்கல்களைக் குறைத்து, மகிழ்ச்சி யான சூழலைத் தக்க வைக்கிறது. இந்திய மாநிலங்களில், இந்த அளவுகோல்படி தமிழ்நாடு மற்ற பல மாநிலங்களைவிட முன்னேற்றகரமான நிலையில் உள்ளது என்கின்றன ஆய்வு கள். அப்படித்தான் இருக்கிறோமா என்பதை நாம்தான் சொல்ல வேண்டும்!

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

மத்திய, மாநில பட்ஜெட்டுகளை ஒப்பிடுக.

அமெரிக்காவின் பட் ஜெட் அரண்மனை பட்ஜெட் என்றால், இந்தியா பட்ஜெட் மாளிகைவாசியின் பட்ஜெட். தமிழ்நாடு பட்ஜெட், அடுக்கு மாடியில் குடியிருக்கும் குடும் பத்தின் பட்ஜெட். ஒவ்வொரு பட்ஜெட்டும் விரலுக்கேத்த வீக்கம். அந்த வீக்கத்தை எப்படி சரி செய்கிறார்கள், எவ்வளவு சரி செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தமிழ் நாடு உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களும் தங்களின் முக்கிய வரி வருவாய் உள்பட அனைத் தையும் மத்திய அரசிட மிருந்து எதிர்பார்க்க வேண் டிய நிலையில் உள்ளது. அப்படிக் கிடைக்கும் நிதி யின் அடிப்படையிலான பட்ஜெட் அறிவிப்புகள், கடைக்கோடி கிராமம் வரை சரியான முறையில் செல விடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசின் நிர்வாகத்தினு டையது. அதைச் செய்தாலே கடன் சுமை குறைந்து, நிதி நிலை ஓரளவு சீராகும். மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு, தனக்கு வேண்டிய மாநிலம்-வேண்டாத மாநிலம் எனப் பாகுபாடு காட்டுவதை நிறுத்தி, சீரான வளர்ச்சிக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கிடையே, அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கும் இலங்கை போன்ற நாடுகளின் பிச்சைப் பாத்திரத்தில் அள்ளிப் போட்டு வள்ளல் தன்மையையும் காட்ட வேண்டியிருக்கிறது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கல்வியைக் காவி மயமாக்குவதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறாரே வெங்கையா நாயுடு?

காவி மட்டும்தான் வரலாறு என்று வெங்கையா நாயுடுவும் அவரது கட்சியும் அந்தக் கட்சியை இயக்கும் அமைப்பும் நினைப்ப தால் அதைத் திட்டமிட்டு செயல்படுத்து கிறார்கள். அவர்கள் பார்வையில், இந்து மதம் என்பது இந்த மண்ணின் மதம். இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவை வெளிநாட்டிலிருந்து வந்த மதங்கள். ஆனால், இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர் களும் இந்த மண்ணில் பிறந்த மக்கள்தான் என்பதையும், இந்து மதம் என்ற பெயரில் உள்நாட்டு மதங்கள் பலவும் சனாதன- வருணாசிரம ஆதிக்கத் திற்குட்பட்டு தீண்டாமை உள்ளிட்ட மனிதக் கொடுமை களைக் கடைப்பிடித்த காரணத் தாலும், அதிகாரச் சூழல்களாலும் இந்த மண்ணின் மக்கள்தான் மற்ற மதங்களுக்கு மாறினர் என்பதே வரலாற்று உண்மை. இப்போது குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு, பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அமைச்ச ராக இருந்தவர். அப்போது சக அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி கல்வியை காவிமயமாக்கும் வேலையை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்தார். சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகமாக்க முனைந்தனர். மதச்சார்பற்ற நாட்டில் சரஸ்வதி வந்தனத்தைக் கட்டாயமாக்க முயன்றனர். அப்போது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, வாஜ்பாய் அரசில் இருந்த கூட்டணிக் கட்சிகளான தி.மு.க போன்றவையும் எதிர்ப்புக்குரல் எழுப்பியதால் அடக்கி வாசித்தனர். இப்போது இரண்டாவது முறையாக தனி மெஜாரிட்டியுடன் மோடி அரசு அமைந்ததால், வெளிப்படையாகவே காவி வண்ணம் அடிக்கிறார்கள்.

Advertisment

நடேஷ் கன்னா, நெல்லை மாவட்டம்

பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி தப்புமா?

mavalianswers

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருந்து அந்த நாட்டின் பிரதமராகியுள்ள இம்ரான்கான், எதிரணியின் சாதக அம்சங்களையும் நன்றாக உணர்ந்து, அதற்கேற்ப தனது அணியின் ஆட்டத்தை வடிவமைத்து 1992-ல் உலகக் கோப்பையை வென்றவர். தனது ஆட்சிக்கு எதிரான சதி நடைபெறும் இந்த நிலையிலும்கூட, பாகிஸ்தானின் கட்டமைப்பையும் இந்தியாவின் கட்டமைப்பையும் ஒப்பிட்டு, வளர்ச்சிப் பாதையில் செயல்படவேண்டும் என வலியுறுத்தி யிருக்கிறார் இம்ரான். பாகிஸ்தானில் பூட்டோ முதல் நவாஸ்ஷெரீப் வரை ஜனநாயக ஆட்சியாளர்களை மதவாத-ராணுவ நிர்வாகம் முழுமையாக ஆள விட்டதில்லை. இம்ரான்கான் எப்படி சமாளிக்கிறார் எனப் பார்க்கலாம்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

ஓ.பி.எஸ். இப்போது காப்பாத்த நினைப்பது யாரை?

தர்மயுத்தம் முதல் விசாரணை கமிஷன் வாக்குமூலம் வரை ஓ.பி.எஸ்., தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் போராடி வருகிறார். விசாரணை கமிஷனில் பல கேள்விகளுக்குத் தெரியாது, தெரியாது என அவர் பதிலளித்திருப்பதுடன், இது பற்றி விஜய பாஸ்கருக்குத் தெரியும். அதுபற்றி ராம்மோகன் ராவுக்குத் தெரியும். இது அப்போதைய அதிகாரிகளுக்குத் தெரியும் எனவும் சொல்லியிருக்கிறார். தெரியாது என்று ஓ.பி.எஸ். சொன்னதிலிருந்தே ஜெ. மரணத்தில் பல மர்மங்கள் புதைந்திருப்பது உறுதியாகத் தெரிய வருகிறது.