நடேஷ் கன்னா, நெல்லை மாவட்டம்
உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என மோடி கூறியுள்ளாரே?
உலகின் பழமையான மொழி தமிழ் என்பது மோடி சொல்லித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. இந்தியாவின் பணக்கார மொழி சமஸ்கிருதம் என்பதுபோல அதற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவது ஏன் என மோடி அரசை நோக்கி நாம் கேள்வி கேட்க வேண்டும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
ரஷியா மீதான ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்திற்கு எதிராக, அல்லது ஆதரவாக ஓட்டளிக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது சரியா?
சோவியத் யூனியனின் முதன்மை நாடாக விளங்கிய ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவு, நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நாட்டின் வளர்ச்சிக்காக நடைமுறைப்படுத்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் என்பவை சோவியத் யூனியனின் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் அங்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்
நடேஷ் கன்னா, நெல்லை மாவட்டம்
உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என மோடி கூறியுள்ளாரே?
உலகின் பழமையான மொழி தமிழ் என்பது மோடி சொல்லித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. இந்தியாவின் பணக்கார மொழி சமஸ்கிருதம் என்பதுபோல அதற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவது ஏன் என மோடி அரசை நோக்கி நாம் கேள்வி கேட்க வேண்டும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
ரஷியா மீதான ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்திற்கு எதிராக, அல்லது ஆதரவாக ஓட்டளிக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது சரியா?
சோவியத் யூனியனின் முதன்மை நாடாக விளங்கிய ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவு, நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நாட்டின் வளர்ச்சிக்காக நடைமுறைப்படுத்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் என்பவை சோவியத் யூனியனின் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் அங்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய ஐந்தாண்டுத் திட்டத்தின் தாக்கம்தான். பொருளாதார உதவி, தொழில்நுட்ப உதவி, ராணுவ உதவி போன்றவையும் சோவியத் யூனியனிடமிருந்து இந்தியாவுக்குத் தொடர்ந்து கிடைத்தன. வளரும் நாடான இந்தியாவுக்கு மற்ற நாடுகளின் உதவியும் தேவைப்பட்டன. எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை. வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் நடைபெற்ற காலத்தில், உலக நாடுகள் பலவும் ஏதேனும் ஒரு வல்லரசின் பக்கம் அணிவகுத்து நின்றன. அப்போது நேரு தலைமையிலான இந்தியா, ‘அணி சேரா நாடுகள்’ என்ற அமைப்பை முன்னெடுத்தது. இரு வல்லரசுகளுக்கும் பொதுவான நாடுகளாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டன. எனினும், சோவியத் யூனியன் பக்கம் கூடுதல் நட்புறவு இந்தியாவுக்கு எப்போதும் உண்டு. நேரு, இந்திரா, ராஜீவ் ஆட்சிக்காலம் வரை இது தொடர்ந்தது. சோவியத் யூனியன் அதிபர்கள் பிரஷ்னேவ், ஆன்ட்ரபோவ், செர்னன்கோ போன்றவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மரணமடைந்தபோது அவர்கள் நாட்டில் சில மணி நேரம் துக்கம் தெரிவித்துவிட்டு பணிகளை மேற்கொண்டனர். இந்தியாவோ அந்நாட்டு அதிபர்களுக்காக ஒரு நாள் விடுமுறை விட்டு துக்கம் கடைப்பிடித்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதைவடைந்த பிறகு, அமெரிக்கா மட்டுமே ஒரே வல்லரசு என்ற நிலை உருவானபோது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. விட்டகுறை -தொட்ட குறையாக இப்போதும் ரஷ்யாவுடனான உறவும் ஆதரவு மனப்போக்கும் நீடிக்கிறது. உக்ரைனும் சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த நாடுதான். அப்போது, அணி சேரா நாடுகள் என நேரு முடிவெடுத்தார். நேருவைத் திட்டுவதையே அரசியலாகக் கொண்டிருக்கும் மோடி அரசு அதையே ‘நடுநிலை’ என்ற பெயரில் ஐ.நா. சபையில் கடைப்பிடித்துள்ளது. இந்தியாவின் நிலை சரியா, தவறா என்பது உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்கு ரஷ்யா கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் மூலம் தெரிந்துவிடும்.
கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு
பெரியார் மண்ணில் சாதி ஒழிய வில்லையே! பெரியார் வேடமிட்டு நடித்த மாணவனைத் தாக்க வேண்டும் என்று நபர் கூறியிருக்கிறாரே?
சாதிக் கட்டமைப்பிலான சமுதாயம் என்பது பெரியார் பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கெட்டி தட்டிப் போய் இருக்கிறது. அந்தக் கருங்கல்பாறையை பெரியார் எனும் கடப்பாரை இயன்ற அளவு தகர்த்து, சமப்படுத்த முயன்றது. அதுதான் இடஒதுக்கீடு-சமூக நீதி எனும் பெயரில் அனைத்து சாதியினருக்குமான கல்வி-வேலைவாய்ப்பு சமத்துவத்தை உருவாக்கி யுள்ளது. குடும்பம், திருமணம், சடங்குகள் என ரத்தத்துடன் ஊறியிருக்கும் சாதிக் கட்டமைப்பை மீறிய சமுதாயம் உருவாக இன்னும் காலம் தேவை. அதுவரை விழிப்புணர்வு தேவை. பெரியார் வேடமிட்ட மாணவனைத் தாக்க வேண்டும் என்று ஒருவன் பேசுவதிலிருந்தே பெரியார் இன்னும் இந்த மண்ணுக்குத் தேவைப்படுகிறார் என்பது தெளிவாகிறது.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பா.ஜ.க.வின் 'இ' டீம் என்று காங்கிரஸ் சொல்வது சரியா?
பா.ஜக.வின் கட்டமைப்பு, செல்வாக்கு, அதிகாரம் இவற்றை மீறி புதிய ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகளின் வலிமையான ஒற்றுமை தேவை. சொந்த விருப்பு வெறுப்புகளால் அந்த ஒற்றுமைக்கு எந்தவொரு கட்சியோ அதன் தலைவர்களோ தனி டிராக்கில் பயணித்தால் இன்றைய நிலையில் அவர்கள் பா.ஜ.க.வின் 'இ' டீம்தான். அது சந்திரசேகர்ராவ், மம்தா, ராகுல் என யாராக இருந்தாலும்!
சி. கார்த்திகேயன், சாத்தூர்
அ.தி.மு.க. தோல்வி தற்காலிகமானதா?
தேர்தல் தோல்வி தற்காலிகமானது. ஆனால், அதன் பெயரில் உள்ள அண்ணா, திராவிடம் ஆகியவற்றைத் தொலைத்துவிட்டு இதேபோல அரசியல் நடத்தினால் நிரந்தரத் தோல்வியாக அமையும்.