டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
டி.டி.வி.தினகரன் மகள் திருமணத்திற்கு ஓ.பி.எஸ். செல்லாது, அவர் தம்பி ராஜாவை அனுப்பி வைக்க காரணம்?
இரண்டு பழமொழிகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
1. எங்கப்பன் குதிருக்குள் இல்லை.
2. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே
பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்
அரசு கேட்டுக்கொண்டதால் தான் தங்களுடைய மருத்துவமனை யில் இருந்து சி.சி.டி.வி கேமராவை நீக்கினோம் என்று அப்போலோ அறிவித்திருப்பது விசித்திரமாக இருக்கிறதே?
காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டதால்தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என அவர் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து எத்தனையோ விசித்திரமான தகவல்களை மருத்துவத் துறை சொன்னது. ஒரு கட்டத்தில், ஜெயலலிதா நலமாகிவிட்டார் என்றும், அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவரே தீர்மானிப்பார் என்றும் அப்போலோ பிரதாப் ரெட்டி சொன்னதைவிட,
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
டி.டி.வி.தினகரன் மகள் திருமணத்திற்கு ஓ.பி.எஸ். செல்லாது, அவர் தம்பி ராஜாவை அனுப்பி வைக்க காரணம்?
இரண்டு பழமொழிகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
1. எங்கப்பன் குதிருக்குள் இல்லை.
2. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே
பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்
அரசு கேட்டுக்கொண்டதால் தான் தங்களுடைய மருத்துவமனை யில் இருந்து சி.சி.டி.வி கேமராவை நீக்கினோம் என்று அப்போலோ அறிவித்திருப்பது விசித்திரமாக இருக்கிறதே?
காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டதால்தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என அவர் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து எத்தனையோ விசித்திரமான தகவல்களை மருத்துவத் துறை சொன்னது. ஒரு கட்டத்தில், ஜெயலலிதா நலமாகிவிட்டார் என்றும், அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவரே தீர்மானிப்பார் என்றும் அப்போலோ பிரதாப் ரெட்டி சொன்னதைவிட, அப்போதைய அரசு கேட்டுக்கொண்டதால் சி.சி.டி.வி. கேமராவை அகற்றினோம் என்று சொன்னது பெரிய விசித்திரமல்ல. ஜெ.வின் அப்போலோ நாட்கள் எத்தனையோ விசித்திரங்களையும், விபரீதங்களையும் கொண்டது.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தமிழ்நாட்டுக்கு ஒரு தனிக் கொடி உருவாக்க வேண்டும் என்கிறாரே திருமாவளவன்?
பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் தனிக்கொடி இருக்கிறது. அது அவர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறது. அதுபோல தமிழ்நாட்டுக்கும் ஒரு கொடி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. கடந்த ஆண்டில், உணர்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு கொடியை உருவாக்கினார்கள். கலைஞர் ஆட்சியில் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் இந்திராகாந்தியை அவர் சந்தித்தபோது, தமிழ்நாட்டுக்கென உருவாக்கப்பட்ட கொடியைக் காட்டினார். இந்தியாவின் மூவண்ணக் கொடியுடன், தமிழ்நாடு அரசின் கோபுரம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி அது. கலைஞரின் வேகம், டெல்லியை மிரள வைத்தது. அதன்பிறகு, வேறு வேறு காரணங்களைத் தேடி, எமர்ஜென்சி காலத்தில் தி.மு.க ஆட்சியையே கலைத்து விட்டார்கள். இப்போது காலம் மாறியிருக்கிறது. ஆனாலும், கொடி உருவானால் அதனையொட்டி, தனி நாடு உருவாகும் என்ற மிரட்சி இப்போதும் டெல்லிக்கு இருக்கிறது.
.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழ் நாடு, கேரளா ஒற்றுமையை போல காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகா தமிழகத்துடன் இணக்கமாக இல்லையே?
முல்லை-பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும், அதன் நிர்வாகம் தமிழ்நாட்டின் வசம்தான் உள்ளது. காவிரிப் படுகை தமிழ்நாட்டில் இருந் தாலும், அதன் நீர் உற்பத்தி ஆதாரங்கள் கர்நாடகாவிடம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் ஆபத்து என கேரளத் தரப்பில் அடிக்கடி பரபரப்புகள் ஏற்படுத்தப்படுவது வழக்கம். ஆபத்து இல்லை என்பதைக் காட்டுவதற்காக, அணையை பராமரித்து-உரிய முறையில் தண்ணீர் திறந்துவிடுவது தமிழகத்தின் நிலையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள பயிர்கள் காய்ந்து கிடந்தாலும், தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளை திறந்து விடுவதில்லை என்பது கர்நாடத்தின் நிலை. வல்லுநர் குழு வலியுறுத்தியபடி முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாத்து, உரிய முறையில் தண்ணீர் தேக்கி, உரிய வழிகளில் திறந்து விடுகிறது தமிழகம். காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டாலும் தமிழ்நாட்டுக்கான உரிமைகளைத் தர முடியாது என்கிறது கர்நாடகம். முல்லைப் பெரியாறு அணையை கேரள மாநில நிர்வாகம்தான் பராமரிக்கிறது என செய்திகள் வெளியாகி, அதனை வன்மையாக மறுக்கின்ற நிலையில் உள்ளது தமிழ்நாடு அரசு. மத்திய அரசு அனுமதிக்கா விட்டாலும் காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையை கட்டியே தீருவோம் என தெனாவெட்டாக உள்ளது கர்நாடக அரசு.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் தேனி
"2025-ம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவில் உணவு உண்ணுமாறு வடகொரியா அதிபர் "கிம் ஜான் உன்' கட்டளை பிறப்பித்துள்ளது பற்றி?
பொதுவாக வடகொரிய அதிபர் பற்றி வரும் செய்திகள் உண்மையா, பொய்யா என உறுதி செய்வதற்கே சில நாட்கள் ஆகின்றன. ஆனாலும், அந்த நாடு பொருளாதார சிக்கலில் இருப்பது உண்மை. ரொட்டிக்கு வழி இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள் என்ற லூயி மன்னன் ஆட்சிக்கால அலட்சிய வார்த்தைதான் பிரெஞ்சு புரட்சிக்கு வழி வகுத்தது. காங்கிரஸ் ஆட்சிக்கால அரிசி பஞ்சத்தின்போது, எலிக்கறி சாப்பிடுங்கள் என கதர்ச்சட்டையினர் சிலர் ஏடாகூடமாகப் பேசியதன் விளைவு, அடுத்து வந்த 1967 தேர்தலில் தி.மு.க.விடம் தோற்ற காங்கிரஸ், இன்றுவரை தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதுதான் ஆட்சியாளர்களின் முதல் கடமை. மற்றவர்களைவிட இதனை முழுமையாக உணர வேண்டியவர்கள் கம்யூனிச ஆட்சியாளர்கள்.