மாவலி பதில்கள்

mavalianswers

நித்திலா, தேவதானப்பட்டி

ஆசாராம் பாபு......?

ashrambaba

பசுத்தோல் போர்த்திய ஓநாய். அதன் வேட்டை வெறிக்குச் சிறுமிகள் பாதிக்கப்பட்டனர். "ஆன்மிக கவசம் இருப்பதால், அநீதிகள்கூட நியாய மாகிவிடும்' நாட்டில், நீதி தேவதை அந்தக் கிழட்டுச் சாமியாரை தண்டித் திருக்கிறார். தன்னைப் போன்ற "பிரம்ம ஞானிகள்' பெண்களை பாலியல் வன்முறை செய்வது பாவமில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார் ஆசாராம் பாபு. அவரைப் போலவே நித்யானந்தா சாமியாரும், "ஆன்மிகப் பேரின்பம்' என பாலியல் கொடுமையை வர்ணித்திருக்கிறார். அப்பீலிலும் ஆசாராம் பாபுவை தப்பவிடாமல் தண்டித்தால்தான், இங்குள்ள காமுகச் சாமியார்களுக்கும் தொடை நடுங்கும்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

புர

நித்திலா, தேவதானப்பட்டி

ஆசாராம் பாபு......?

ashrambaba

பசுத்தோல் போர்த்திய ஓநாய். அதன் வேட்டை வெறிக்குச் சிறுமிகள் பாதிக்கப்பட்டனர். "ஆன்மிக கவசம் இருப்பதால், அநீதிகள்கூட நியாய மாகிவிடும்' நாட்டில், நீதி தேவதை அந்தக் கிழட்டுச் சாமியாரை தண்டித் திருக்கிறார். தன்னைப் போன்ற "பிரம்ம ஞானிகள்' பெண்களை பாலியல் வன்முறை செய்வது பாவமில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார் ஆசாராம் பாபு. அவரைப் போலவே நித்யானந்தா சாமியாரும், "ஆன்மிகப் பேரின்பம்' என பாலியல் கொடுமையை வர்ணித்திருக்கிறார். அப்பீலிலும் ஆசாராம் பாபுவை தப்பவிடாமல் தண்டித்தால்தான், இங்குள்ள காமுகச் சாமியார்களுக்கும் தொடை நடுங்கும்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

புரையோடிப் போன முதலாளித்துவ சமூகத்தை மொத்தமாக மாற்றி அமைக்க எந்தவிதமான போராட்டம் நடத்தப்படவேண்டும்?

உலகமயமான சந்தைப் பொருளாதாரத்தில், எல்லா நவீன வசதிகளையும் கேளிக்கைகளையும் இன்றே அனுபவித்துவிடவேண்டும் எனத் துடிக்கும் மக்களின் மனநிலையை மாற்றி அமைக்கும் வெற்றிகரமான சூழல் உருவானால், கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ சமூகம் தகர்ந்துவிடும். கம்யூனிஸ்ட் நாடுகளே சந்தைப் பொருளாதாரத்திற்கு ஆட்பட்டுள்ள நிலையில், மொத்த மாக மாற்றி அமைப்பது என்பது அத்தனை எளிதல்ல. "ஏடறிந்த வரலாறுகள் யாவுமே வர்க்கப் போராட்டம்தான்' என்கிற கார்ல் மார்க்ஸின் வார்த்தைகள், இப்போதும் பொருத்தமாகவே இருக்கின்றன.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

அணு ஆயுதச் சோதனையை நிறுத்துவதாகவும் சோதனை களத்தை மூடுவதாகவும் அறிவித் துள்ளதே வடகொரியா?

சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவு தான் நினைவுக்கு வருகிறது. "ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது' என அந்த நாட்டை அழித்தது அமெரிக்கா. ஆனால், அங்கே பேரழிவு ஆயுதங்கள் இல்லை. ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளிலும் பேரழிவு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் படையெடுத்து அழித்தது அமெரிக்கா. ஆனால், வடகொரியா மீது போர் தொடுக் காமல் இணக்கமான பேச்சுவார்த்தை முயற்சிகள் நடப்பது ஏன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பிடம் அதிகாரிகள் கேட்டார்களாம். "யோவ்.. வடகொரியாகாரன் நெஜமாவே அணு ஆயுதங் கள் வச்சிருக்கான்யா.. போர் வந்தா நமக்குத்தான் பேரழிவு'’என்றாராம் டிரம்ப். வல்லாதிக்க அமெரிக்காவை அதன் பாணியிலேயே ஆட்டி வைத்து, இணக்கமான நிலைக்குத் தயாராகியிருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் அன்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனைப்படுகிறார்கள். இதற்கு நம் தமிழக ஆட்சியாளர்களின் பதில் எப்படி இருக்கும்?

""ஜட்ஜய்யா எங்க முதலாளி மோடியோட கட்சி, ஆட்சி செய்கிற மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமா நடக்குதுன்னு புள்ளிவிவரங்கள் சொல்லுது. அதிகளவில் பாலியல் கொடுமைகளில் ஈடுபடு வதும் அவங்க கட்சியினர்தான்னு சொல்றாங்க. முதலாளி கட்சி போகிற போக்கில்தானே தொழிலாளிகளான நாங்களும் போய் ஆகணும்'' என்று பதில் தருவார்களோ!

ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்

விசாரணை முடிந்த ஒரு வழக்கில் தீர்ப்பு கூறாமல் பல மாதங்கள் இழுத்தடிப்பது பற்றி?

முதல் குற்றவாளி மரணமடையும்வரை காத்திருந்துவிட்டு, அதன்பின் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளெல்லாம் உண்டு. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை எல்லோரும் சொல்கிறார்கள்.. சொல்கிறார்கள்.. சொல்லிக் கொண்டே மட்டும் இருக்கிறார்கள்.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை 118

மதுவினால் இறந்து போனவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை டாஸ்மாக் கடை அருகே ஒட்டி வைக்கிறார்களே, யார் தெரிந்துகொள்ள?

"நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்' என நேற்றைய குடிமகனை இன்றைய குடிமகன் தெரிந்துகொள்ள!

mavali answers
இதையும் படியுங்கள்
Subscribe