கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு77

கொரோனா தொற்றுப் பரவல் குறித்து இப்போது நடவடிக்கைகள் எடுக்கும் அரசு... முன்பே நடவடிக்கை எடுத்து தொற்று பரவக் காரணமான தேர்தலை தள்ளி வைத் திருக்கலாம் அல்லவா?

தேர்தல் நடந்தது தமிழகம், கேரளம், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவ ஆரம்பித்தது மகா ராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங் களில். அதன் தாக்கம் இப்போது தமிழகத்திலும் இருக்கிறது. தேர்தலைத் தள்ளி வைத்திருந் தால், கூட்டம் கூடுவது குறைந் திருக்கும். கொரோனா பரவலும் குறைந்திருக்கும். தடுப் பூசி பயன்பாட்டுக்கு வராதபோதே, கொரோனா பரவலுக் கிடையே பீகாரில் தேர்தல் நடந்தது. தடுப்பூசி வந்துவிட்ட தால் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களையும் நடத்திவிடலாம் என முடிவெடுத்தது தேர்தல் ஆணையம். கூடிய கூட்டத்தால், அரசியல் தலைவர்களைவிட கொரோனாவுக்குத்தான் கொண்டாட்டம். தடுப்பூசி போதுமான அளவில் இல்லை என்பதால் மக்களுக்குத் திண்டாட்டம்.

m

Advertisment

வாசுதேவன், பெங்களூரு

இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் மரணம்?

Advertisment

எலிசபெத் மகாராணியாக இருந்தும் அவர் கணவர் பிலிப் கடைசிவரை ராஜா என்ற அந்தஸ்தை அடைய முடியவில்லை. கோமகன் என்ற அளவிலேயே அவரது அரண்மனை வாழ்க்கை முடிந்துவிட்டது.

நித்திலா, தேவதானப்பட்டி

அரசியல் சாசனத்தின் வாயிலாக 21 வயது நிரம்பிய அனைத்து பாலினத்தவருக்கும் வாக்குரிமை கிடைத்தது. அந்த அரசியல் சட்டத்தை வகுத்த டாக்டர் அம்பேத்கருக்கு மக்கள் வாக்களித்தார்களா?

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலான 1952ல் நடந்த தேர்தலில் மும்பை மத்திய வடக்குத் தொகுதியிலிருந்து பட்டியல் இனக் கூட்டமைப்பு கட்சி (பின்னாளில் இந்தியக் குடியரசு கட்சி) சார்பில் போட்டியிட்டார் டாக்டர் அம்பேத்கர். அந்தத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரசுக்கான அலை வீசியது. குறிப்பாக, நேருவின் தலைமைக்கு ஆதரவான அலை இருந்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் அம்பேத்கரின் உதவியாளராக இருந்த கஜ்ரோல்கர். அத்துடன், கம்யூனிஸ்ட் கட்சியும் அம்பேத்கரை கடுமையாக எதிர்த்து பரப்புரை செய்தது. இந்து மகா சபாவும் (பா.ஜ.க.வின் தாய் அமைப்பு) அம்பேத்கரை எதிர்த்து களம்கண்டது. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளரே வெற்றிபெற்றார். அதன்பின், 1954-ல் பந்தாரா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அம்பேத்கர் களம் கண்டார். அதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ராஜ்யசபா உறுப்பினராகத்தான் அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடிந்தது. ஜனநாயகத்தின் விநோத விபரீதங்களில் இதுவும் ஒன்று.

mm

ம.ராகவ்மணி குப்பம் ஆந்திரா மாநிலம்

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சியை பிடிப்பாரா?

அது நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் 8 கட்ட தேர்தல், மோடி-அமித்ஷாவின் கடும் பரப்புரை, வாக்குப்பதிவில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைகள், மம்தா பிரச்சாரத்திற்குத் தடை -என பல வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. மக்கள் தீர்ப்பை மே 2 சொல்லும்.

________________

தேர்தல் களம்

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பா.ஜ.க.வுக்கு பயந்து முன்பெல்லாம் எம்.எல்.ஏ.க் களை பாதுகாப்பாக தங்க வைப்பார்கள். இப்பொழுது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையே மாநிலம் விட்டு மாநிலம் ஷிப்ட் செய்து பாதுகாக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளதே?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இரவு-பகலாக காவல் காக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் அது மோடி அரசின் கைப்பாவையாகவே செயல்படுகிறது என்பதை எதிர்க்கட்சியினர் அறிவார்கள். இயந்திரங்களை காவல் காக்கலாம். வேட்பாளர்களை யார் காவல் காப்பது? தமிழ்நாட்டுடன் சேர்ந்து தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஒன்று, அசாம். பா.ஜ.க. ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில், வாக்கு இயந்திரத்தை மட்டுமல்ல, வேட்பாளர்களையும் பாதுகாக்கும் பணியில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. காங்கிரஸ், ஏ.ஐ.யு.டி.எஃப் ஆகியவற்றைச் சேர்ந்த 20 வேட்பாளர்கள், பாதுகாப்பாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மிச்ச சொச்ச மாநிலங்களில் ராஜஸ்தானும் இருப்பதால் அங்கே சென்றிருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் பா.ஜ.க. தன் வேலையைக் காட்டும் என்பதால், போடோலேண்டு மக்கள் முன்னணி தனது வேட்பாளர்களை இந்தியாவிலிருந்தே வெளியேற்றி, வேறு நாட்டில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. வாக்குப்பதிவுக்கு முன்பாகவே இந்த முன்னணியின் வேட்பாளர் ஒருவரை களவாடிச் சென்றுவிட்டது ஆளுங்கட்சியான பா.ஜ.க. அதனால்தான் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை, மிச்சமுள்ள வேட்பாளர்களை நாடு கடத்தி, காவல் காக்கிறது போடோலேண்டு மக்கள் முன்னணி. அநேகமாக, பூடான் நாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்றும், இந்தியாவில் யாரும் இல்லை என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். எங்கெல்லாம் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியவில்லையோ அங்கெல்லாம் எம்.எல்.ஏ.க்களை இழுப்பது என்பதைத் தாண்டி, தேர்தலுக்கு முன்பாகவே வேட்பாளர்களை இழுப்பது என்கிற அளவுக்கு முன்னேறியிருக்கிறது பா.ஜ.க.வின் சதித்திட்டம். இந்தியாவின் ஜனநாயகத்தை, நாடு கடந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது பா.ஜ.க.