மாவலி பதில்கள்

mavalianswers

சி.சின்னசாமி, முகவூர், விருதுநகர் மாவட்டம்

சேது சமுத்திரத் திட்டத்தைக் கிடப்பில் போட்டவர்கள் 8 வழிச்சாலை அமைக்க வேகம் காட்டுவது ஏன்?

கடலுக்கடியில் கடவுள் கட்டிய பாலத்தை இடிக்க வேண்டும் என்பதால் சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட்டார்கள். கண்ணுக்குத் தெரியும் விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச்சாலை அமைப்பதில் வேகம் காட்டுகிறார்கள்.

kumarasamy

modi

கலைஞர்ப்ரியா, வேலூர்(நாமக்கல்)

"இனி பகுத்தறிவை பரப்பமாட்டேன்' என கமல் கூறுகிறாரே?

"நல்லா பார்த்துக்குங்க.. நானும் அரசியல்வாதியாயிட்டேன்.. அரசியல்வாதியாயிட்டேன்.. ஓட்டு வாங்க ரூட்டு போடும் அரசியல்வாதியாயிட்டேன்' என வடிவேலு ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் கமல்.

எம்.முகம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஒரே தேசம் -ஒரே தேர்தல் என்பது செலவை சிக்கனப்படுத்துவதற்கா?

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிக்கல் இல்லாமல் ஜெயிப்பதற்கு!

அன்பு, சாத்தூர்

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்கிறார

சி.சின்னசாமி, முகவூர், விருதுநகர் மாவட்டம்

சேது சமுத்திரத் திட்டத்தைக் கிடப்பில் போட்டவர்கள் 8 வழிச்சாலை அமைக்க வேகம் காட்டுவது ஏன்?

கடலுக்கடியில் கடவுள் கட்டிய பாலத்தை இடிக்க வேண்டும் என்பதால் சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட்டார்கள். கண்ணுக்குத் தெரியும் விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச்சாலை அமைப்பதில் வேகம் காட்டுகிறார்கள்.

kumarasamy

modi

கலைஞர்ப்ரியா, வேலூர்(நாமக்கல்)

"இனி பகுத்தறிவை பரப்பமாட்டேன்' என கமல் கூறுகிறாரே?

"நல்லா பார்த்துக்குங்க.. நானும் அரசியல்வாதியாயிட்டேன்.. அரசியல்வாதியாயிட்டேன்.. ஓட்டு வாங்க ரூட்டு போடும் அரசியல்வாதியாயிட்டேன்' என வடிவேலு ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் கமல்.

எம்.முகம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஒரே தேசம் -ஒரே தேர்தல் என்பது செலவை சிக்கனப்படுத்துவதற்கா?

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிக்கல் இல்லாமல் ஜெயிப்பதற்கு!

அன்பு, சாத்தூர்

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்கிறாரே எடப்பாடி?

அயனாவரத்தில் சிறுமி, திருவண்ணாமலையில் ரஷ்யப்பெண் ஆகியோருக்கு ஏற்பட்ட கொடூரத்திற்குப் பிறகும் எடப்பாடியால்தான் இப்படியெல்லாம் பேசமுடியும். உண்மையில், இந்தியாவே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. அதில் தமிழ்நாடும் அடக்கம். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூனியர் ஸ்குவாஷ் நம்பர்ஒன் வீராங்கனை ஆம்ப்ரி அலின்க்ஸ், சென்னையில் நடந்துகொண்டிருக்கும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் போட்டிக்கு தகுதிபெற்றும் கலந்துகொள்ளவில்லை. பெண்களுக்கு எதிராக இங்கு நடக்கும் வன்கொடுமைகளைச் செய்திகளாக அறிந்த ஆம்ப்ரியின் பெற்றோர்தான், ‘"இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு'’எனக்கூறி அவரை அனுப்பாமல் தடுத்திருக்கின்றனர். பெண்உரிமை -பெண்கள் நலத்தில் முன்னோடியான மாநிலம் தமிழ்நாடு. அதன் தலைநகரான சென்னை, சிறுமிகளுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்கிற புள்ளிவிவரம் மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. ரெய்டு கவலையில் இருப்போருக்கு இதுபற்றி கவலைப்பட ஏது நேரம்?

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"கர்நாடக முதல்வர் குமாரசாமி நன்றாக அழுது சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்' என்கிறதே பா.ஜ.க.?

குஜராத் தேர்தலின்போது பிரதமர் மோடி அழுதார். அந்த நடிப்பை குமாரசாமி மிஞ்சிவிட்டதால் ஏற்பட்ட வருத்தமாக இருக்கலாம்.

பிரதிபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

முறைகேடாக சம்பாதிக்கும் சொத்துகளும் நிலைக்கத்தானே செய்கின்றன?

"சிவன் சொத்து குல நாசம்' என்று சொன்ன முன்னோர்தான், "நாய் விற்ற காசு குரைக்காது' என்றும் சொல்லியிருக்கிறார்கள். சட்டங்களின் ஓட்டை வழியே ஊழல் பெருச்சாளிகள் தப்பிக்கின்ற நாட்டில்... நிலைக்கின்ற சொத்து, நாய் விற்ற காசு... நிலைக்காத சொத்து, சிவன் சொத்து என ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டியதுதான்.

--------------------------------------

ஆன்மிக அரசியல்

தூயா, நெய்வேலி

ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தடையாக இருப்பது ஆன்மிகம்தானா?

ஆண்-பெண் பாலுறவுக்கு மாறுபட்டது ஓரினச் சேர்க்கை என்றாலும், அந்தப் பழக்கமும் பழங்காலத்திலேயே இருந்துள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்கள் "ஹோமோ' எனப்பட்டனர். கிரேக்க மொழியில், ஹோமோ என்றால் "ஒரே மாதிரியானவர்கள்' என்று பொருள். அதாவது, நீண்டகாலம் போர்க்களத்தில் இருக்கக்கூடிய வீரர்கள், தங்கள் சக வீரருடன் உறவில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல சிறைக்கைதிகளும் ஓரினச் சேர்க்கையாளர்களாக (ஹோமோ) இருந்துள்ளனர். லெஸ்போஸ் என்னும் தீவில் பெண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்ததை அறிந்து, அதற்கு "லெஸ்பியன்' எனப் பெயரிடப்பட்டது. கிரேக்க-ரோம இலக்கியங்களில் ஓரினச் சேர்க்கை குறித்த பதிவுகள் உள்ளன. இந்திய மண்ணில் உலவும் புராணங்களிலும் அவை குறிப்பிடப்பட்டுள்ளன. சற்று கூடுதலாக, ஆண் கடவுள் பெண் வடிவமெடுத்து சக ஆண் கடவுளுடன் உறவாடிய புராணங்கள் புகழ்பெற்றவை.

இதன்பின் ஒரு கட்டத்தில், மதங்களே இத்தகைய ஓரின உறவுகளுக்கு தடை விதிக்கத் தொடங்கின. கிறிஸ்து பிறப்பதற்கு முன், யூத மதத்தினர் இத்தகைய உறவுகளைப் "பாவம்' என்றனர். இனப்பெருக்கம் தடைபடாமல் இருக்கவும், சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கவும் ஓரினச் சேர்க்கைக்குப் பல நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டை நெப்போலியன் ஆட்சி செய்தபோது, ஓரினச் சேர்க்கையை சட்டரீதியாக அனுமதித்தார். இன்று பல நாடுகளிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளவும் சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் ஆட்சியிலேயே உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு "ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது' என்கிறது. பாலியல் வன்முறைக்குரிய தண்டனையை சட்டப் பிரிவு 376 வலியுறுத்துகிறது. மனிதர்களின் உறவுமுறை காலந்தோறும் மாற்றம் பெற்றுள்ள நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு 377-வது பிரிவு விதிக்கும் தடையை நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடைபெறுகிறது. ஆன்மிகத்தைவிட அறிவியல் அடிப்படையில் இதனை நோக்குவதே சரியானதாக இருக்கும்.

nkn27-07-2018
இதையும் படியுங்கள்
Subscribe