லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
ரஜினியின் அரசியல் வருகையை பல ஆண்டுகளாக எதிர்பார்த்து பல லட்சங்களை செலவிட்டவர்களின் கதி?
ரசிகர்கள் தங்களின் காணிக்கையாக நினைத்துக் கொள்வார்கள். ரஜினியை வைத்து அரசியலில் முதலீடு செய்ய நினைத்தவர்கள், தொழில் தொடங்கு முன்பே நட்டமான வியாபாரிகள்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை?
அம்மா ஆட்சியில் பாடப்புத்தகத் தில் திருவள்ளுவர் படத்தை பச்சை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தார்கள். அம்மா வழியில் ஆட்சி எனச் சொல்கிறவர்கள் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி, எஜமானர் களுக்கு சேவை செய்திருக்கிறார்கள்.
சு.வெங்கடேஷ், கோட்டயம்
தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகளை எம்.ஜி.ஆர். ஆதரித்த போது, தி.மு.க.வும் கலைஞரும் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள்?
ஈழப்பிரச்சினையில் 1956 முதல் உரிமைக் குரல் கொடுத்த கட்சி தி.மு.க! அப்போது அதற்கான தீர்மானத் தை நிறைவேற்றியவர் கலைஞர். 1981க்குப் பிறகு இனப்பிரச்சினை கடும் சிக்கலை எதிர் கொண்ட நிலையில
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
ரஜினியின் அரசியல் வருகையை பல ஆண்டுகளாக எதிர்பார்த்து பல லட்சங்களை செலவிட்டவர்களின் கதி?
ரசிகர்கள் தங்களின் காணிக்கையாக நினைத்துக் கொள்வார்கள். ரஜினியை வைத்து அரசியலில் முதலீடு செய்ய நினைத்தவர்கள், தொழில் தொடங்கு முன்பே நட்டமான வியாபாரிகள்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை?
அம்மா ஆட்சியில் பாடப்புத்தகத் தில் திருவள்ளுவர் படத்தை பச்சை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தார்கள். அம்மா வழியில் ஆட்சி எனச் சொல்கிறவர்கள் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி, எஜமானர் களுக்கு சேவை செய்திருக்கிறார்கள்.
சு.வெங்கடேஷ், கோட்டயம்
தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகளை எம்.ஜி.ஆர். ஆதரித்த போது, தி.மு.க.வும் கலைஞரும் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள்?
ஈழப்பிரச்சினையில் 1956 முதல் உரிமைக் குரல் கொடுத்த கட்சி தி.மு.க! அப்போது அதற்கான தீர்மானத் தை நிறைவேற்றியவர் கலைஞர். 1981க்குப் பிறகு இனப்பிரச்சினை கடும் சிக்கலை எதிர் கொண்ட நிலையில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தமிழர்களின் உணர்வைப் புரிந்து ஈழப் போராட்டத்திற்கு ஆதரவுக் குரல் கொடுத்தார். இந்திரா காந்தி ஆட்சியில் போராளி இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி அளித்தது. அப் போது விடுதலைப்புலிகளுக்கு நிதி கொடுத்தார் எம்.ஜி.ஆர். ராஜீவ்காந்தி ஆட்சியில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிப்படை அனுப்பப்பட்டது. அதற்கான பாராட்டு விழாவிலும் எம்.ஜி.ஆர். பங்கேற்றார். மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கேற்ப செயல்பட்டவர் எம்.ஜி.ஆர். ஒப்பந்தத்தால் ஈழத்தமிழர்களுக்கு நன்மை ஏற்படாது என தி.மு.க எதிர்த்தது. பின்னர், விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே அமைதிப்படையின் ஆயுதங்கள் திரும்பியபோது, அந்தப் படையைத் திரும்பப்பெறுமாறு பிரதமர் வி.பி.சிங்கிடம் வலியுறுத்தியது தி.மு.க. சென்னை துறைமுகத் துக்கு அமைதிப்படை திரும்பியபோது, "என் தமிழ்ச்சாதியை கொன்று திரும்பும் படையை வரவேற்கமாட்டேன்'’என சொன்னவர் அப்போதைய முதல்வர் கலைஞர்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அதிருப்தி தலைவர்களை அழைத்துப் பேசியது பலன் தருமா?
அர்ப்பணிப்பு மிக்க அரசியலே காங்கிரசுக்கு இப்போது தேவை. அதிருப்தியாளர் களை அழைத்துப் பேசிய சோனியாவும், எல்லாரும் எதிர்பார்க்கும் ராகுலும் காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா அன்று கொடியேற்றக் கூட வராமல் நம்பிக்கையை சிதைத்து விட்டார்கள். பிரியங்காதான் பங்கேற்று ஆறுதல் தந்திருக்கிறார்.
அ.முரளிதரன், மதுரை-3
சினிமாவைப் போல தொலைக்காட்சியிலும் ஆபாசம் மிகுந்துவிட்டதைக் கவனித்தீரா?
ஓடிடி தளங்களின் வெப்சீரியல்கள் 16 அடி பாய்கின்றன. அவற்றிடமிருந்து தங்கள் ரசிகர்களைத் தக்கவைத்துக்கொள்ள தொலைக் காட்சிகள் 6 அடி, 8 அடியாகவும் பாய வேண்டும் என நினைக்கின்றன.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதில் பா.ஜ.க அரசுக்கு என்ன கஷ்டம்-நஷ்டம்?
கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தால், ஆட்சிக்கும் கட்சிக்கும் கஷ்டம்தானே
________
தேர்தல் களம்!
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
வாழ்நாளில் அதிக தேர்தல் களம் கண்டு பிரச்சாரம் செய்தவர் யார்?
தேர்தல் அரசியலை முற்றிலும் புறக்கணித்து சமூக சீர்திருத்த இயக்கமாக திராவிடர் கழகத்தை நடத்திய பெரியார் 1952 முதல் 1971 வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், தான் ஆதரித்த கட்சிக்காகப் பிரச்சாரம் செய்திருக்கிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் தாங்கள் போட்டியிடாவிட்டாலும் கட்சியின் சார்பில் களம் கண்ட வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். தேர்தலிலும் போட்டியிட்டு, கட்சிக்காவும் கூட்டணிக்காகவும் பிரச்சாரம் செய்த தலைவர்களில் கலைஞருக்குத்தான் முதலிடம். 1957ல் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது முதல், 2016ல் அவர் கடைசியாகப் போட்டியிட்ட தேர்தல் களம் வரை அயராமல் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் கலைஞர். 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 1967, 1971ல் சைதாப்பேட்டை, 1977, 1980ல் அண்ணாநகர்., 1984ல் சட்டமன்ற மேலவை உறுப்பினர், 1989, 1991ல் துறைமுகம், 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம், 2011, 2016ல் திருவாரூர் என இதுவரை தி.மு.க. களம் கண்ட 14 தேர்தல்களில் 13 முறை வேட்பாளராகப் போட்டியிட்டு, கட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு, தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வரலாற்றுச் சாதனை கலைஞருக்கு உண்டு. திராவிடக் கொள்கைகளை தனக்கு குருகுலப் பயிற்சி போல அளித்த பெரியாரின் எதிர்ப்பிலும் கலைஞர் பிரச்சாரம் செய்திருக்கிறார். பெரியாரின் ஆதரவைப் பெற்றும் பிரச்சாரம் செய்திருக்கிறார். ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தும் பிரச்சாரம் செய்திருக்கிறார். எதிர்க்கூட்டணியாகவும் பிரச்சாரம் செய்து வென்றிருக்கிறார். காமராஜருக்கு குடியாத்தம் இடைத் தேர்தலில் ஆதரவான நிலையையும் கலைஞர் எடுக்க வேண்டியிருந்தது. நாகர்கோவில் இடைத்தேர்தலில் காமராஜருக்கு எதிராகத் தொடர் பிரச்சாரமும் செய்திருக்கிறார். இந்திராகாந்தியுடன் கூட்டணியும் இருந்தது. கடும் எதிர்ப்பும் இருந்தது. எம்.ஜி.ஆரும் கலைஞரும் சேர்ந்து மேடையேறிய அனுபவமும் ஏராளம். எதிரெதிராகக் களம் கண்ட தேர்தல்களும் பல உண்டு. கம்யூனிஸ்ட் தலைவர்களுடனான கலைஞரின் தேர்தல் கள அனுபவங்களும் அப்படித்தான். அரை நூற்றாண்டுகால அரசியல் சூத்ரதாரி இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தலை தமிழகம் சந்திக்கவிருக்கிறது.