மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தமிழகத்தில் இன்று குடும்ப அரசியல் நடத்துவதில் முதலிடம் பிடிக்கும் கட்சி எது?

எல்லாக் கட்சியிலும் போட்டா போட்டி உண்டு. அப்பட்டமாக வெளிப்படுவது தி.மு.க.வில்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

Advertisment

தமிழகத்திற்கான நலத்திட்டங்களை பெறுவதற்காகவே மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறாரே ஓ.பி.எஸ்.?

எது விவசாயிகள் எதிர்க்கும் எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார் பன் திட்டம் இவையா அந்த நலத்திட்டங்கள். அல்லது அடிக்கல் நாட்டப் பட்டு அப்படியே கிடக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையா? தமிழகத்தின் நிதியமைச்சரான ஓ.பி.எஸ்.ஸே மத்திய அரசிடமிருந்து மாநிலத் திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நிதி கிடைக்கவில்லை எனப் புலம்பியிருக்கிறார்.

செந்தில்குமார். எம், சென்னை - 78.

Advertisment

தி.மு.க. கிராம சபை கூட்டம் நடத்துவது பலன் அளிக்குமா? கிராம சபை கூட்டம் நடத்துவதின் வழிமுறைகள் என்ன?

கிராம சபை கூட்டம் என்பது உள்ளாட்சி அமைப்புகளின் உயிர்நாடி. வாக்களித்த மக்கள் தங்கள் பிரநிதிகளுடன் கூடி கிராமத்திற்கான தேவை களைத் தீர்மானமாக நிறை வேற்றி, மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பி அவற்றை நிறைவேற்றுவதற்கான களம். ஆண்டுக்கு மூன்றுமுறை கூட்ட வேண்டும். முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தி.மு.க. கூட்டியிருப்பது மாதிரி கிராம சபைதான். ஆனால், ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகம் உண்மையான கிராமசபையை கூட்டத் தயங்கியதால், தி.மு.க.வின் கூட்டத்திற்கு மக்கள் வரவேற்பு உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.க நடத்திய கூட்டங்கள் பலன் தந்துள்ளன.

தா.விநாயகம். ராணிப்பேட்டை.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு முடிவு?

மத்திய அரசு, தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தாலும், நாடாளுமன்றப் பெரும்பான்மையையும் தாண்டிய வலிமை கொண்டது மக்களின் எழுச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கே. ஆர். ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77

"வேட்பாளரை பா.ஜ.க.தான் அறிவிக்கும்' என அ.தி.மு.க.. அமைச்சரே கூறுவது பற்றி?

"எதுவா இருந்தாலும் எசமான்தான் சொல்லணும்' என்று பதவிக் கூலி பெறுபவர்கள் சொல்வது வழக்கம்தானே!

பொன்னியம்மன்மேடு வண்ணை கணேசன், சென்னை-110

தமிழகத்திற்கு எம்.ஜி.ஆர். என்ன சிறப்பாக செய்தார் என்கிறாரே சீமான்?

எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருண்ட பக்கங்கள் நிறைய உண்டு. ஆனாலும் சத்துணவுத் திட்டம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற்சாலை, பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு, குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கத் தைத் தகர்த்த வி.ஏ.ஓ. பணிகள், எளிய மக்களின் வாகனமான சைக்கிளில் கணவன்-மனைவியாக டபுள்ஸ் போக அனுமதி, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்த நடைமுறை என எம்.ஜி.ஆர். ஆட்சியில் நிறைவேறியவற்றை மறக்க -மறைக்க முடியாது.

mavali answers

சி. கார்த்திகேயன், சாத்தூர்

தனது பட ரிலீசிற்காக தமிழக முதல்வரை சந்தித்துள்ளாரே "மாஸ்டர்'?

"அரசியலும் ஆட்சியும்தான் எல்லாவற்றுக்கும் மாஸ்டர்' என்பது சினிமா பஞ்ச் டயலாக் மாஸ்டர்களுக்குத் தெரியும்.

வாசுதேவன், பெங்களூரு

கடந்த தேர்தல்களில் இல்லாத அளவிற்கு பெரும்பாலான கட்சிகள் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்களே?

ஜெயலலிதா இல்லாததால்.

_____________

தேர்தல் களம்!

அயன்புரம் த.சத்தியநாராயணன்

இந்தியாவில் முதன் முதலில் இடைத் தேர்தல் எங்கு நடந்தது?

முதல் பொதுத்தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட யார் யாரெல்லாம் வெற்றி பெற்றார்களோ, அவர்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. பொதுவாக, பதவியை ராஜினாமா செய்வது, உறுப்பினர் இறந்துபோவது -பதவி பறிபோவது இவற்றால் ஏற்படும் காலி இடங்களின் அடிப்படையில் இடைத்தேர்தல் நடைபெறுவது வழக்கம். பொதுத்தேர்தலின்போது வாக்குப்பதிவுக்கு முன்பே வேட்பாளர் மரணம் அல்லது வேறு காரணங்களால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு சில வாரங்கள் இடைவெளியில் நடைபெறும் தேர்தல்களும் உண்டு. தமிழ்நாட்டில் 1984 டிசம்பரில் நடந்த நாடாளுமன்ற -சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்காவில் சிகிச்சை யில் இருந்த எம்.ஜி.ஆர். திரும்பி வந்து பதவி யேற்பதற்காக அரசு நிர்வாகம் காத்திருந்தது. இதனிடையே, எழும்பூர் -பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியிலம் வேட்புமனு செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்கு முன்பாக கொல்லப்பட்டதால் பொதுத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவில்லை. பின்னர் 1985 தொடக்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைச்சர்கள் புடைசூழ பிரச்சாரம் செய்தும் மூன்று தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெற்று ஆளுந்தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஜா-ஜெ என இரண்டாகப் பிரிந்திருந்த அ.தி.மு.க. அதன்பிறகு ஒன்றாக இணைந்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டிருந்தது. இந்நிலையில், பொதுத்தேர்தலின்போது தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை கிழக்கு -மருங்காபுரி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. அமைச்சர்கள் வரிந்துகட்டியும், ஜானகி -ஜெயலலிதா ஆகியோர் பிரச்சாரத்துக்குப் போகாமலேயே இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று, தி.மு.க.வுக்கு ஷாக் தந்தது.