பி.மணி -குப்பம், ஆந்திரா

இனி தமிழகத்தை திரையுலகத்தை சார்ந்தவர்கள் ஆட்சி செய்யும் காலம் வருமா?

இது காணொலி காலம். அரசியல் தலைவர்களும் ஆட்சியில் இருப்பவர்களுமே கேமராவுக்கே ஏற்றபடி கச்சிதமாக போஸ் தருகிறார்கள். அதனைக் கவனித்து, பரப்புவதற்கென்றே ஆலோசகர்களும் இருக்கிறார்கள். அப்புறம் எதற்கு தனியாக நடிகர்கள்?

mavali

Advertisment

பொன்வளவன் -சிவகங்கை

மாரடோனா -சேகுவேரா நட்பு பற்றி…?

Advertisment

அர்ஜென்டினா நாடு தந்த இரு பெரும் வீரர்கள் சேகுவேராவும், மாரடோனாவும். சே-வுக்கு கால்பந்து ஆட்டத்தில் ஈடுபாடு உண்டு. மார டோனாவுக்கு புரட்சிகர மாற்றங்களில் ஆர்வம் உண்டு. தன் கையில், சேகுவேராவின் படத்தைக் குத்தியிருந்தார் மாரடோனா. சே-வின் புரட்சிகர பங்களிப்புடன் விடுதலை பெற்ற இடதுசாரி நாடான கியூபாவின் அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோவுடன் நட்பு கொண்டிருந்தார் மாரடோனா. அமெரிக்க ஆதிக்க எதிர்ப்பை, தென்னமெரிக்க கால்பந்து அணிகளின் ஒருங்கிணைப்பு மூலம் உருவாக்கியவர்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

திராவிடக்கட்சி இல்லாத தமிழகம் என்ற பி.ஜே.பி., அ.தி.மு.க. உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளதே?

சொன்னபடி கேட்கும் அடிமைகள் கிடைத்து விட்டால், அவர்கள் முதுகில் ஏறி தங்கள் இலக்கை அடையலாம் என்கிற அரசியல் கணக்குதான்.

வாசுதேவன், பெங்களூரு

மீம் உலகில் அசத்தும் வடிவேலுவின் காமெடிகள் பற்றி?

வடிவேலுவின் அசத்தல் காமெடிகள் திரைக்கு வந்து 10 ஆண்டுகளாகிவிட்டன. அர சியல் காரணங்களால் அவருக்கான பட வாய்ப்பு கள் குறைந்தாலும் அரசியல்-சமூகம் என எந்த விதமான மீம்ஸாக இருந்தாலும் வடிவேலுதான் கை கொடுக்கிறார். பிரதமரின் பதவியேற்பு விழாவையே திசை திருப்பிய வடிவேலுவின் நேசமணி மீம்ஸ் ஒரு சோறு பதம்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஆசியாவிலேயே இலஞ்ச விகிதம் அதிகமாக உள்ள நாடாக இந்தியா திகழ்கிறதாமே?

கறுப்புப்பணம் ஒழிப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளையே கட்டுக்கட்டாக வைத்திருந்தவர்களும்கூட தண்டனையிலிருந்து தப்பித்துவிடும் பெருமை கொண்ட நாடாயிற்றே!

ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவதே எங்களின் நோக்கம் என்று கூறும் மோடி அதே விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை தாக்கல் செய்து அவர்களை போராட செய்து விட்டாரே?

இரட்டிப்பாக்குவது என்பது அம்பானி- அதானி போன்ற கார்ப்பரேட் விவசாயிகளின் லாபத்தை.

____________

தேர்தல் களம்

மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.

இப்போது இருக்கும் தேர்தல் முறை எப்போது நடைமுறைப் படுத்தப்பட்டது?

மன்னராட்சி காலத்திலேயே குடவோலை முறை போன்ற தேர்தல் களை சோழ அரசர்கள் நடத்தி யிருப்பதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. எனினும், ஜனநாயக முறையிலான தேர்தல் என்பது பிரிட்டிஷ் ஆட்சியைப் பின்பற்றி, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலேயே மாண்டேகு- செம்ஸ்போர்ட்டு சீர்திருத்தத்தின் படி, குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாண அரசுகளுக் கான தேர்தல் 1920ல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி தலைமையிலான அரசு அப்போது அமைந்தது. அப்போது வாக்குரிமை என்பது வரி கட்டுவோர், பட்டதாரிகள் போன்ற சிலருக்கே இருந்தது. பெண்களுக்கான வாக்குரிமையை நீதிக் கட்சி ஆட்சியில்தான் உறுதி செய்தனர். அதன்பிறகு, 1937ல் பிரிட்டி.ஷ் ஆட்சியில் சைமன் கமிஷன் பரிந்துரைகளின்படி கூடுதல் அதி காரத்துடன்-கூடுதல் வாக்குரிமை யுடன் தேர்தல் நடைபெற்றது. 1947ல் இந்தியா சுதந்திரமடைந்து, 1950ல் தனக்கான அரசியல் சட்டத்தை நிறைவேற்றி, முழுமையான குடியரசு நாடாக அமைந்த பிறகு, 1951-52ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல்தான் தற்போதைய தேர்தல் முறையில் நடைபெற்ற முதல் தேர்தலாகும். 21 வயது நிரம்பிய ஆண்-பெண் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்தது. அதேநேரத்தில், வாக்குச்சீட்டில் முத்திரையிட்டு மடித்துப் போடு வதில் பாமர வாக் காளர்களுக்கு குழப்பங்கள் இருந்த தால், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வண்ணத்திலான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன. பச்சைப் பெட்டி மஞ்சள் பெட்டி என வண்ணப் பெட்டிகளில் வாக்குச்சீட்டை மக்கள் செலுத்தினார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது, பெட்டிகளை மாற்றி மோசடி செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு, ஒரே பெட்டியில் வாக்குச் சீட்டுகளைப் போடுகின்ற முறை உருவானது. வேட்பாளர்களுக்கான சின்னம், வாக்காளர்களுக்கான அடையாள மை உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டன. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, வாக்காளர்களுக்கான வயது 21 என்பதிலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலான 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு ஆட்சியமைத்தது. இந்தியாவில் முதன்முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பரிசோதனை முறையில் மேற்கொள் ளப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன. 2004ஆம் ஆண்டிலிருந்து முழுமையான அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் நடைமுறைக்கு வந்தன. தொடக்கத்திலிருந்தே வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சந்தேகங்களை அரசியல் தலைவர்கள் எழுப்பி வந்த நிலையில், அண்மைக்காலமாக மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்ற கோரிக்கை பலமடைந்துள்ளது.