மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

யாரும் பார்க்காத விதத்தில் அவமானப்படுத்தினால் அது வன்கொடுமை ஆகாது என்கின்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து?

மநு நீதி எங்கே இருக்கிறது எனக் கேட்டவர்களுக்கு அனுப்ப வேண்டிய கேள்வியை மாவலிக்கு அனுப்பியிருக்கிறீர்களே!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

Advertisment

20 ஆண்டு திமுக ஆட்சி... 32 ஆண்டு அதிமுக ஆட்சி... ஒற்றுமை, வேற்றுமை என்னங்க சார்?

தமிழ்நாட்டு அரசியல் என்பது சமூக நீதிச் சட்டம் -சமூக நலத் திட்டம் எனும் தண்டவாளங்களின்மீது தடம் புரளாமல் நீதிக் கட்சி ஆட்சிக் காலத்திலிருந்து பயணிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்கூட இதிலிருந்து புது ட்ராக்குக்குப் போக முடியவில்லை. 20 ஆண்டுகால தி.மு.க ஆட்சியிலும் 32 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியிலும் அதேதான் தொடர்ந்தது. 1967ல் அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சி என்பது இந்திய ஜனநாயகத்தின் மகத்தான புரட்சி. ஒரு மாநில கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியை அமைக்க முடியும் என்பதை முதன் முதலாக நிரூபித்தது. அந்த வெற்றியை 1971 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான முறையில் தக்க வைத்தவர் கலைஞர். 1972ல் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.கவின் ஒற்றைக் குறிக்கோள், கருணாநிதி எதிர்ப்பு என்பதே. தி.மு.க.மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர். வைத்தார். அன்றைய அரசியல் சூழலும் அவருக்கு சாதகமாகவே அமைந்தது. 1977, 1980, 1984 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல்வ ரான எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி ஒரு முறைகூட 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யவில்லை. கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியும் 1976, 1991 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. ஜெயலலிதாதான் திராவிடக் கட்சிகளில் முதன் முறையாக 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய் தவர். ஆனால், தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து தொடங்கப் பட்ட அ.தி.மு.க.வின் முதல்வர் ஜெயலலிதா இருமுறை ஊழல் குற்றச்சாட்டால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டார் என்பது வரலாறு. சாதனைகள், வேதனைகள் இரண்டையும் கடந்து, இருபெரும் கட்சி களும் வீட்டுக்கு வீடு வாக்காளர்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. தெருவுக்குத் தெரு அமைப்புகளைக் கட்டியிருக் கின்றன. கோவில் இல்லாத ஊரும், கழகங்களின் கொடி இல்லாத ஊரும் தமிழகத்தில் இல்லை என்பதே அவற்றின் பலம்.

mavali answers

Advertisment

பி.மணி, வெள்ளக்கோவில்

மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு உதயமான நாள் நவம்பர் 1ஆம் தேதி குறித்து?

தமிழ்நாடு அப்போது உதயமாகவில்லை. சென்னை மாகாணம் என்ற பெயரில் அண்டை மாநிலப் பகுதிகள் பலவும் நம்முடன் இணைந்திருந் தன. முதலில் ஆந்திராவைத் தனிமாநிலமாக்கக் கோரி தெலுங்கு பேசும் மக்கள் போராடினார்கள். பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் இதற்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அதன் விளைவாக, ஆந்திரா தனி மாநிலமானது. அந்த அடிப்படையில் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்க பிரதமர் நேருவின் அரசு முடிவெடுத்து குழு அமைத் தது. 1956 நவம்பர் 1 அன்று சென்னை மாகா ணத்திலிருந்து கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் பிரிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம் உரு வானது. அதுபோலவே மலையாளம் பேசும் மக்க ளுக்கான கேரளா உருவானது. தமிழ் பேசும் மக்க ளைப் பொறுத்தரை, கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட் டம் நம்முடன் இணைந்தது. ஆனால், தமிழர்கள் வாழும் கேரளாவின் இடுக்கி மாவட்டம், ஆந்திரா வின் சித்தூர் மாவட்டம், கர்நாடகாவின் கோலார் பகுதிகள் ஆகியவற்றை நாம் இழந்துவிட்டோம். மொழிவாரி மாநிலங்கள் பிரிப்புக்குப் பிறகான சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தார் சங்கரலிங்கனார். 1969 ஜனவரி 14 அன்று அன்றைய முதல்வர் அண்ணா நடத்திய பெயர் சூட்டு விழாவில்தான் தமிழ்நாடு உதயமானது.

ம.தமிழ்மணி, குப்பம் - ஆந்திரா

மாவலியார் மிகவும் விரும்பி கொண்டாடும் பண்டிகை எது?

புராண மாவலிக்கான பண்டிகை, வருணா சிரம ஒடுக்குமுறை எதிர்ப்பை நினைவூட்டும் ஓணம். இந்த மாவலியின் திருநாள், உழைப்பின் விளைச்சலையும் அதற்கு உதவியாக இருந்த அனைத்திற்கும் நன்றி செலுத்தி சிறப்பிப்பதுமான பொங்கல் விழா.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

ஓ.பி.எஸ்., டிடிவி. போன்றோர்கள் தங்கள் நம்பகத்தன்மைகளை தக்க வைப்பதில் எங்கு சறுக்குகிறார்கள்?

அரசியல் என்பது ஆன்லைன் சூதாட்டத்தை விட விறுவிறுப்பான- ஏமாற்றுகிற சூதாட்டம். அதில் ஒருவரை நம்பி வருபவர்கள் தாங்கள் ஏமாறுவது தெரியாத வகையில் ஏமாற்றினால் ராஜ தந்திரி. ஏமாற்றுவதும் ஏமாறுவதும் வெளிப்படை யாகத் தெரிந்துவிட்டால் நம்பகத்தன்மை போய் விடும். தமிழக அரசியலில் எடப்பாடிகள் ராஜ தந்திரிகளாகவும், ஓ.பி.எஸ்.-டி.டி.வி. போன்றவர்கள் நம்பகத்தன்மை அற்றவர்களாகவும் வெளிப்படுகிறார்கள்.

ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்

ஏமாற்ற அரசியல் கட்சிகளும், ஏமாற மக்களும் இருக்கிற வரைக்கும் இந்தியநாடு முன்னேற முடியுமா?

அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. வேற்றுக் கிரகத்திலிருந்தும் வருவதில்லை. மக்களில் ஒருவனே தலைவனாகிறான். நிலத்திற்கேற்ற விளைச்சல்.