மாவலி பதில்கள்!

mm

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஓட்டு வங்கி இல்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆன சில கட்சிகளை தூக்கிச் சுமப்பது ஏன்?

தேர்தல் முடிவுகள் கொள்கைகளால் தீர் மானிக்கப்படுவதில்லை. வாக்கு எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகின்றன. தனக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜாக இருந்தாலும், எதிரிக்கு அது ஜாக்பாட்டாக மாறிவிடக்கூடாது என்பதாலேயே தூக்கிச் சுமக்கும் அரசியல் தொடர்கிறது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர் -.613 006.

வரும் பண்டிகைக் காலமாவது சரிந்த பொருளாதாரத்தை மீட்க கொஞ்சம் உதவுமா?

ஒவ்வொரு பண்டிகையும் பலவித தொழில் களில் உள்ளவர்களின் வாழ்வில் விளக்கேற்றும் வணிகத் தன்மை கொண்டவை. அரசு ஊழியருக் கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் கிடைத்தால் அது கடைவீதிக்கு வருகிறது. துணிக்கடை, நகைக்கடை, பாத்திரக் கடை, நடைபாதைக் கடை, பட்டாசுக் கடை எனப் பல தொழில் செய்வோர் கைகளுக்கும் செல்கிறது. அவர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களில் அதனைப் புரளச் செய் கிறார்

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஓட்டு வங்கி இல்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆன சில கட்சிகளை தூக்கிச் சுமப்பது ஏன்?

தேர்தல் முடிவுகள் கொள்கைகளால் தீர் மானிக்கப்படுவதில்லை. வாக்கு எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகின்றன. தனக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜாக இருந்தாலும், எதிரிக்கு அது ஜாக்பாட்டாக மாறிவிடக்கூடாது என்பதாலேயே தூக்கிச் சுமக்கும் அரசியல் தொடர்கிறது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர் -.613 006.

வரும் பண்டிகைக் காலமாவது சரிந்த பொருளாதாரத்தை மீட்க கொஞ்சம் உதவுமா?

ஒவ்வொரு பண்டிகையும் பலவித தொழில் களில் உள்ளவர்களின் வாழ்வில் விளக்கேற்றும் வணிகத் தன்மை கொண்டவை. அரசு ஊழியருக் கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் கிடைத்தால் அது கடைவீதிக்கு வருகிறது. துணிக்கடை, நகைக்கடை, பாத்திரக் கடை, நடைபாதைக் கடை, பட்டாசுக் கடை எனப் பல தொழில் செய்வோர் கைகளுக்கும் செல்கிறது. அவர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களில் அதனைப் புரளச் செய் கிறார்கள். இந்தப் பண சுழற்சியை முடக்கிப்போட் டது கொரோனா. தீபாவளி முதல் நியூ இயர் வரையிலான பண்டிகைக் காலத்தில் பொருளா தாரத்தை முழுதாக மீட்காவிட்டாலும், இயல்பு வாழ்க்கைக்கு ஏற்ற அளவிலா வது மாற வேண்டும். ஆனால், மத்திய அரசு காட்டும் பிடிவாதப் போக்குகளைத் தளர்த்தினால் மட்டுமே அது சாத்தியம்.

தா.விநாயகம், ரணிப்பேட்டை.

ரஜினி தன் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு கடைசி நாளில் சொத்து வரி கட்டியது குறித்து?

கடைசி நிமிடத்தில்கூட செலுத்தலாம். ஆனால், அதற்கு எதிராக வழக்குத் தொடுத்து, நீதி மன்றத்தின் கண்டனத்தை சுமக்கும் அளவுக்கு அவ ரது சிஸ்டத்தை சீர்கெட வைத்த புண்ணியவான் யார் என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

உ.பி. மாநிலம் மதுராவில் யானையின் மீது அமர்ந்து 'யோகாசனம்' செய்த பாபா ராம்தேவ் தவறி விழுந்த நிகழ்வு பற்றி..!?

தரையில் யோகாசனம் செய்யலாம். எப்படிப் புரண்டாலும் பூமி, பொறுமை இழக்காது. தண்ணீ ரில் யோகாசனம் செய்யலாம். நீருக்கு கோபம் வராது. யானை என்பது ஓர் உயிரினம். அதற்கும் உணர்வுகள் உண்டு. தன் மீதான அசைவுகளால் அதற்கு என்ன சிரமம் ஏற்பட்டதோ, சட்டென தன் உடலால் அந்த உணர்வை வெளிப்படுத்திவிட்டது. முதுகு தொடர்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவது யோகா. அந்த யோகாவாலேவே முதுகில் அடிபட்டிருக்கிறார் யோகா மாஸ்டர். விரைந்து நலன் பெறட்டும்.

துரை.அம்பேத்கர்வாசன், திருவள்ளூர்-2.

நாட்டில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாலியல் ரீதியான கொலை கள், வன்கொடுமைகள் அதிகரிப்புகள் பற்றி...?

1. இத்தனை காலம் இத்தகைய கொடூரங்கள் அவ்வளவாக வெளியே தெரியாதபடி செய்யப் பட்டன. 2. இதுபோன்ற கொடூரங்களை செய்தாலும் அதிகாரம் கையில் இருந்தால் ஒன்றிரண்டு பலியாடுகளை உள்ளே தள்ளிவிட்டு, மற்றவர்கள் வெளியே வழக்கம்போல சுற்றலாம் என்கிற அளவிற்கான சட்டத்தின் ஓட்டைகள். இந்தப் பொல்லாத காட்சிகளுக்கு, பொள்ளாச்சியே சாட்சி.

ம.ரம்யா மணி, குப்பம், ஆந்திரா

லெட்டர்பேடு கட்சிகள் பணம் பறிக்கவே புற்றீசல்கள் போல உருவாகிறது என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பது?

நீதிமன்றங்களின் தீர்ப்புகள்தான் முக்கிய மானவை. கருத்துகள் பல நூறு வெளிப்பட்டாலும் அவை நடைமுறையில் பலன் தருவதில்லை. லெட்டர் பேடு கட்சிகள்-சங்கங்கள்-மீடியாக்கள் எல்லாமும் புற்றீசல் போலக் கிளம்பிவிட்டன. இவை குறித்து தெளிவான நடவடிக்கைக்கு உத்தரவிட்டு, அதனை தேர்தல் ஆணையம் மூலம் செயல்படுத்தினால் மட்டுமே டுபாக்கூர்கள் ஒழியும்.

m

சங்கரசுப்பிரமணியன், நெல்லை

காந்தி படத்தை போலவே ஹிட்லர் படத்தையும் மக்கள் பார்க்கவே செய்வார்கள் என்று முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்த சர்ச்சையில் கருத்து தெரிவித்துள்ளாரே சரத்குமார்?

காந்தி, உமர்முக்தார், ஹிட்லர் (தி டவுன்ஃபால்) இடி அமீன் (தி ரைஸ் அண்ட ஃபால்) என பல வரலாறுகள் வெற்றி பெற்றுள்ளன. முத்தையா முரளிதரன் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீரர். இந்தியாவில் தோனியின் வரலாற்றுப் படத்தில் சுஷாந்த் சிங் அச்சு அசலாக நடித்தார். அத்தெலடிக் மில்கா சிங் படத்தில் ஃபர்ஹான் அக்தர் அசத்தினார். மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகாட் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தங்கல் படத்தில் அமீர்கான் வாழ்ந்தார். குத்துச்சண்டையில் புகழ்பெற்ற மேரிகோம் படத்தில் பிரியங்கா சோப்ரா கலக்கினார். இவையெல்லாமே விளையாட்டும் அதன் உள்குத்து அரசியலும் உள்ள படங்கள். முத்தையா முரளிதரன் பற்றிய 800 படம், விளையாட்டைத் தாண்டிய இனவெறி அரசியல் சம்பந்தப்பட்டது.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன் பெங்களூர் 77

தி.மு.க. கூட்டணியில் உள்ள, வைகோ... திருமா இருவரும் வரும் தேர்தலில் "தனி' சின்னத்தில்தான் போட்டி... என்று அறிவித் துள்ளது பற்றி?

கூட்டணியில் தலைமை தாங்கும் கட்சிகள், ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகங்களை வகுக்கின்றன. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களின் வளர்ச்சி மற்றும் அங்கீகாரத்தைத் திட்டமிடுகின்றன. அதனால், சின்னம் விவகாரத்திற்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கை சின்னதா- பெரியதா என்பது முடிவாகலாம்.

nkn211020
இதையும் படியுங்கள்
Subscribe