மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

கொரோனா தொற்று நேரத்திலும் ராஜஸ்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமித்ஷா தீவிரமாக செயல்பட்டார் என்கிறதே பழைய பார்ட்னரான சிவசேனா?

கொரோனாவைத் தடுக்க வேண்டிய ஆட்சி யாளர்கள், ஜனநாயகத்தை முடக்குவதையே 6 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் விழிப்புடன் இருந்து, வியூகத்துடன் செயல்பட்டால் ஜனநாயகப் படுகொலைகளைத் தடுக்க முடியும் என்பதற்கு அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு தப்பித்திருப்பது சரியான எடுத்துக்காட்டு. விபத்துக்குள்ளாக இருந்த தனது அரசியல் எதிர்காலத்திலிருந்து மீண்டு, சரியாகத் தரையிறங்கியிருக்கிறார் சச்சின் பைலட்.

Advertisment

எம்.சண்முகம், கொங்கணாபுரம்

கொரோனா காலத்தில் மாவலி செய்த உருப்படியான காரியம் என்ன?

கொங்கணாபுரம் சண்முகம் போன்ற அன்பானவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

தி.மு.க எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்தது ஏன்?

எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு கு.க. செல்வம் அ.தி.மு.க.விலிருந்து எதையோ எதிர்பார்த்து தி.மு.க.வுக்கு வந்தார். தி.மு.க.வுக்கு வந்து எம்.எல்.ஏ.வான பிறகும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி, அது நிறைவேறாததால் பா.ஜ.க. பக்கம் சென்றிருக்கிறார். அவரை இழுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டிய வி.பி.துரைசாமியும் கட்சி தாவுவதில் கு.க.செல்வத்துக்கு முன்னோடி. தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டிய பொறுப்பிலும்-அதற்கு எதிராக உருவாக்கப்படும் தடைகளைத் தகர்ப்பதிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய மு.க.ஸ்டாலினை இப்போதும் கு.க.செல்வம் போன்றவர்கள் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

kk

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவருமான கமலா ஹாரீஸ் போட்டியிடுவது நமக்குப் பெருமைதானே?

அமெரிக்க ஜனாதிபதி தேர்த லில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனுடன் அக்கட்சியின் துணை ஜனாதி பதி வேட்பாளராக கமலா ஹாரீஸ் நிறுத்தப்பட்டுள் ளார். அவர் நிறுத்தப்பட்டி ருப்பது, இந்திய வம்சாவளி என்பதற்காக அல்ல. கமலாவின் அம்மா சியா மளா கோபாலன் தமிழக பிராமண சமுதாயத்தவர். கமலாவின் தந்தை டொனால்டு ஹாரிஸ் ஆஃப்ரோ-அமெரிக்கர் எனப்படும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். டிரம்ப் ஆட்சியில் கறுப்பினத்தவர் மீது தாக்குதல் நடப்பதால், அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என டிரம்ப்பை எதிர்க்கும் ஜோபிடன் டீமின் சமிக்ஞையே மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கமுடைய கமலா ஹாரீஸின் தேர்வு. வெளிநாட்டுக்காரர் சோனியா இந்தியாவை ஆளலாமா என பொங்கிக்கொண்டே வெளிநாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாக கமலா வரவேண்டும் என வாழ்த்துவது இரட்டை நாக்கின் வெளிப்பாடு.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

பொதுத்துறை-கூட்டுறவுத்துறை-தனியார்துறை இவற்றில் மாவலிக்கு பிடித்த துறை?

லாபம் ஈட்டும் பொதுத்துறை, முறைகேடுகளுக்கு இடமளிக்காத கூட்டுறவுத்துறை- உரிமைகளை மதிக்கும் தனியார்துறை இருந்தால் பிடிக்கும்.

_____________

தமிழி

மல்லிகா அன்பழகன், சென்னை 78

ஆற்றங்கரைகளில் குடியேறிய போதுதான் மனித நாகரிகம் தோன்றியதாக கூறப்படுகிறது. தமிழ் நாகரிகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?

பசித்த நேரத்தில் வேட்டையாடி சாப்பிட்டும், பாதுகாப்புக்காக குகைகளில் வாழ்ந்துகொண்டும் இருந்த மனிதகுலம், தங்களுக்கான ஒரு கட்டமைப்பை மெல்ல மெல்ல உருவாக்கியதையே நாகரிகம் என்கிறோம். மனிதர்கள் ஒரே பகுதியில் தங்களுக்கான குடியிருப்புகளை அமைத்து, ஒரு சமூகமாக மாறுகிற சூழல் நாகரிகம் தொடங்கிய காலத்தில் வலுவடைந்தது. இதில் நன்மைகளும் ஏற்பட்டன. சில தீமைகளும் விளைந்தன. உடைமைகள் மீதான அதிகாரம்- அடிமைத்தனம்- ஒடுக்குமுறை ஆகியவை உருவாகின. அதே நேரத்தில், மனிதர்களிடையே ஒத்துழைப்பு, வேளாண்மையில் நாட்டம், தொழில்கள் பெருக்கம், மொழி-பண்பாட்டு வளர்ச்சி, நிர்வாக நடைமுறைகள் ஆகியவை வலுப்பட்டன. ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் வாழும்போது, இயல்பாகவே வேளாண்மையும் அதனைச் சார்ந்த பிற தொழில்களும் செழிப்படையும். குடியிருப்புகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும். சுமேரிய நாகரிகம் என்பது யூப்ரிடிஸ்-டைக்ரீஸ் ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகமாகும். நைல் ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகம் எகிப்து நாகரிகம். மஞ்சள் ஆற்றங்கரையில் தோன்றியது சீன நாகரிகம். தொல்தமிழர்களான திராவிடர்களின் நாகரிகம் குறித்த அடையாளங்கள் சிந்து ஆற்றங்கரையில் கிடைத்திருக்கிறது. தமிழர்களின் நாகரிகத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் வடதிசை வரை பரவியிருந்து, ஆரியர் ஊடுருவலுக்குப் பிறகு தென்பகுதி நோக்கி தள்ளப்பட்டார்கள் என்கிற வரலாற்று ஆய்வுகள் உண்டு. அதேநேரத்தில், கடலில் மூழ்கியதாகக் கருதப்படும் லெமூரியா என்கிற குமரிக்கண்டம், பஃறுளி ஆறு, தென்மதுரை, கபாடபுரம் என இலக்கியமும் ஆய்வுகளும் சுட்டிக்காட்டும் தென்திசை அடையாளங்களைக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய தமிழ் நிலப்பரப்பில் உள்ள முக்கியமான மூன்று ஆறுகள் காவிரி, வைகை, தாமிரபரணி. கீழடி ஆய்வுகள் வைகை ஆற்று நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன. சங்க இலக்கிய காலத்தின் தொன்மையை அவை ஆதாரப்பூர்வமாக நிறுவுகின்றன. அதுபோலவே, தாமிரபரணி ஆற்றங்கரைப் படுகையில் உள்ள ஆதிச்சநல்லூர் ஆய்வுகளும் தொல்தமிழர்களின் வாழ்க்கைக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன. காவிரிப்படுகையை ஒட்டி தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே புதிய சான்றுகள் கிடைத்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளும் அண்மையில் ஆச்சரியப்படுத்தியுள்ளன. வரலாறு என்பது கற்பனைகளின் முடிவல்ல. தொடர் ஆராய்ச்சியின் விளைவு. மூத்த குடியான தமிழர்களின் நாகரிகத் தொடக்கத்திற்கு இன்னும் பல இடங்களைத் தோண்ட வேண்டும்