லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)
அப்பளம் சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் என்று சொன்ன மத்திய அமைச்சர் நமது மாநில அமைச்சர் செல்லூர் ராஜூவையே மிஞ்சிவிட்டாரே?
பாவம்... மற்றவர்களை அப்பளம் சாப் பிடச்சொன்ன பா.ஜ.க. அமைச்சர் மேக்வால், தான் சாப்பிட மறந்துவிட்டார் போலும். இப்போது அவருக்கும் கொரோனா.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர் 77.
உதயநிதி ஆதிக்கத்தால், விரைவில் மு.க.அழகிரி தலைமையில் தி.மு.க.வில் உள்ள பல எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் பற்றி?
தி.மு.க.வுக்கு எதிரிகள் வெளியில் இல்லை என்பதை பா.ஜ.க. உள்பட பல கட்சிகளும் அறிந்து வைத் துள்ளன.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.
"யார் என்ன சொன்னாலும், நாங்கள் செய்ய நினைப்பதை செய்தே தீருவோம்' என்ற ரீதியில் எல்லா விஷயங்களிலும் பா.ஜ.க செயல்பட்டுக்கொண்டிருப்பது பற்றி?
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தா-கோத்தபாய சகோதரர்களுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்தவர் மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்சே. அவர், ஒற்றைக் கட்சி ஆட்சி நடைபெறும் சீனா வின் அதிபர் ஜின்பிங்கையும், ம
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)
அப்பளம் சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் என்று சொன்ன மத்திய அமைச்சர் நமது மாநில அமைச்சர் செல்லூர் ராஜூவையே மிஞ்சிவிட்டாரே?
பாவம்... மற்றவர்களை அப்பளம் சாப் பிடச்சொன்ன பா.ஜ.க. அமைச்சர் மேக்வால், தான் சாப்பிட மறந்துவிட்டார் போலும். இப்போது அவருக்கும் கொரோனா.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர் 77.
உதயநிதி ஆதிக்கத்தால், விரைவில் மு.க.அழகிரி தலைமையில் தி.மு.க.வில் உள்ள பல எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் பற்றி?
தி.மு.க.வுக்கு எதிரிகள் வெளியில் இல்லை என்பதை பா.ஜ.க. உள்பட பல கட்சிகளும் அறிந்து வைத் துள்ளன.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.
"யார் என்ன சொன்னாலும், நாங்கள் செய்ய நினைப்பதை செய்தே தீருவோம்' என்ற ரீதியில் எல்லா விஷயங்களிலும் பா.ஜ.க செயல்பட்டுக்கொண்டிருப்பது பற்றி?
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தா-கோத்தபாய சகோதரர்களுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்தவர் மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்சே. அவர், ஒற்றைக் கட்சி ஆட்சி நடைபெறும் சீனா வின் அதிபர் ஜின்பிங்கையும், மெஜாரிட்டி பலம் இருப்பதாலேயே ஜனநாயக நெறிமுறைகளை சிதைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் தங்களின் முன்னுதாரணமாகக் காட்டியிருக்கிறார். இனப்படுகொலை நடத்திய போர்க் குற்ற வாளியான மகிந்தாவுக்கு 3ல் 2 பங்கு வெற்றி கிடைத்திருப்பதால் அவர்கள் வசதிக்கு இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றத் தயாராகிவிட்டார்கள். குஜராத் படுகொலையின்போது ஆட்சியில் இருந்தவர்களும் அதே மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை இந்தியாவில் எதிர்பார்க்கிறார்கள். அது நடந்தால், காஷ் மீரின் மாநில அந்தஸ்து பறிப்பு முதல் தமிழகத்தில் இந்தி- சமஸ்கிருத திணிப்பு வரை ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகளையும் கொண்ட இன்றைய இந்தியாவைப் பார்க்கமுடியாது.
நித்திலா, தேவதானப்பட்டி
ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆடு-மாடு மேய்த்தபடி விவசாயம் பக்கம் திரும்புகிறார்களே?
தாராளமாக விவசாயம் பார்க்கலாம். அரசு நிர்வாகத்தில் திறமையான திட்ட விதைகளை விதைக்கக்கூடியவர்களாக ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருந்தாக வேண்டும். மற்றவையெல்லாம் திசை திருப்பும் நடவடிக்கைகள். அண்மையில் நடந்த குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூரணசுந்தரியும், பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி பிரித்திகா ராணியும் நம்பிக்கை விதைகளை ஊன்றியிருக்கிறார்கள்.
மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்
வெள்ளையனே வெளியேறு நினைவுநாளில் "அசுத்தமே வெளியேறு' என முழக்கமிடுவோம் என்று கூறியுள்ளாரே மோடி?
முழக்கமிட்டுக் கத்தினால் ஓடிவிடும் என மோடியும் பா.ஜ.க.வினரும் நம்பி ஏமாறுவதற்கு அது என்ன கொரேனாவா? அசுத்தம் என்பது எம்.எல்.ஏ.-எம்.பி.க்களை விலை பேசும் மோசமான ஜனநாயகத்திலேயே ஊறிக் கிடக்கிறதே!
வாசுதேவன், பெங்களூரு
செல்போன் கற்றுக் கொடுக்கும் பாடம்?
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் உறங்கியபடியும், சாத்தான் விழித்தபடியும் இருப்பதுபோல, அவன் கைகளிலும் இருக்கிறது. அகத்தின் அழகு, கரத்தில்.
___________
தமிழி
மல்லிகா அன்பழகன், சென்னை 78
டைம் கேப்சூல் என்றால் என்ன? அது அகழாய்வு ஆராய்ச்சி யாளர்களுக்கு எந்தளவில் உதவுகிறது?
கலைப்பொருள், கட்டடம், வழிபாட்டுத் தலம், வீடு இவை எப்போது உருவாக்கப்பட்டன என்பதை எதிர்காலத் தலைமுறை தெரிந்துகொள்வதற்காக, அது உருவாக்கப்படும் காலகட்டத்தின் அடையாளமான பொருட்களை ஒரு சிறிய பெட்டகத்தில் வைத்து புதைப்பதற்குப் பெயர்தான் டைம் கேப்சூல் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வரலாற்று ஆய்வாளர்கள், அகழாய்வாளர்கள், மானுடவியல் வல்லுநர்கள் ஆகியோருக்கு இந்த டைம் கேப்சூல் பலன் தரும். இப்போது கட்டுகிற கட்டடத்தில் ஒரு ஐ-போன், ஒரு மாஸ்க், ஒரு பாட்டில் சானிட்டைசர் உள்ளிட்டவற்றை ஒரு பெட்டகத்தில் வைத்து புதைத்துவிட்டால், எதிர்காலத் தலைமுறையில் உருவாகும் ஆய்வாளர்கள் இந்தக் கட்டடம், கொரோனா காலத்தில் கட்டப்பட்டது என்பதை உறுதி செய்துகொள்வார்கள். டைம் கேப்சூல் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு ஆழத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது, அதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதற்கான குறிப்பு அதே கட்டடத்தில் கல்வெட்டாகவோ அல்லது வேறு வகையான குறிப்பாகவோ இருக்கும். எப்போது திறக்க வேண்டும் என்ற கால அளவும் குறிக்கப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகள் கழித்து டைம் கேப்சூலை எடுக்கின்ற தலைமுறை, அதில் கூடுதல் விவரங்களை சேர்த்து புதைத்து, அதற்கான குறிப்புகளையும் எழுதி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டலாம். இதன் மூலமாக, கட்டடத்தின் தொன்மை வரலாறும் அதன் தொடர்ச்சியும் அறியப்படும். குடும்ப வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்வதற்கும் இதுபோன்ற டைம் கேப்சூலை வீடுகளின் சுவர் ஓரத்தில் புதைத்து வைக்கும் வழக்கமும் இருக்கிறது. இப்போது அடிக்கல் நாட்டப்பட்ட அயோத்தி கோவிலிலும் டைம் கேப்சூல் வைக்கப் போவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என அறிவித்துவிட்டனர். ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக் காவிலும் இத்தகைய டைம் கேப்சூல்கள் 18ஆம் நூற்றாண்டி லிருந்தே புதைத்து வைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, டைம் கேப்சூல் என்று குறிப்பிடப்படாவிட்டாலும் அந்தக் காலத்தில் பயன்படுத்திய பொற்காசுகள், விலைஉயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றைப் புதைத்து வைப்பதும், கோவில்களில் பாதுகாத்து வைப்பதும் உண்டு. அவை எதிர்காலத்தில் நாட்டிற்கும் வீட்டுக்கும் உதவும் என்பதே முன்னோர்களின் நோக்கம். வைக்கப்பட்டிருக்கிறது.