மு. முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

முடிவுக்கு வருகிறதா அ.தி.மு.க. பாஜக கூட்டணி?

அடுத்த முறையும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என நினைக்கும் தொண்டர்கள் கூட்டணியின் முடிவை எதிர் பார்க்கிறார்கள். இருக்கிற ஆட்சியின் மிச்சகாலத்தை நினைக்கும் ஆட்சியாளர்கள் கூட்டணியைத் தொடர் கிறார்கள்.

சி. கார்த்திகேயன், சாத்தூர் - 626203

Advertisment

தமிழகத்தில் பிரஷாந்த் கிஷோர், சுனில்... யார் வின்னர்? யார் ரன்னர்?

இருவரும் இரு கழகங்களின் ஜாக்கிகள். கழகக் குதிரைகளில் எது வலுவுடன் இருக்கிறது, எதனை மக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே தேர்தல் ரேஸில் இரு ஜாக்கிகளில் யார் வின்னர், யார் ரன்னர் என்பது தெரியும்.

mm

Advertisment

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

"ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பன்னோக்கு கண்காணிப்பு விசாரணைக் குழுவின் இறுதி விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதால் 7 பேர் விடுதலை பற்றி முடிவு எடுக்கவில்லை' என இத்தனை நாள் கழித்து ஆளுநர் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதே?

மத்தியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி, தனிப்பெரும் பான்மை பா.ஜ.க. என எந்த அரசு இருந்தாலும், மாநிலத்தை ஆள்வது ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என யாராக இருந்தாலும் 7 பேர் விடுதலையில் நடத்தியது- நடத்துவது எல்லாமே அரசியல் லாப நாடகம்தான். 1991ல் ராஜீவ்காந்தி மனிதவெடிகுண்டால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தக் கொலையில் உள்ள வெளிநாட்டு சதி உள்ளிட்ட பின்னணிகளைக் கண்டறியவேண்டிய பல்நோக்கு கண்காணிப்பு விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை வரவில்லையென்றால், கண்டிக்கப்பட வேண்டி யது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களும் இருப்பவர்களும்தானே தவிர, தண்டிக்கப்பட்ட 7 பேரின் சிறை நீட்டிப்பு என்பது தீர்வாகாது. தமிழக அமைச்சரவையின் விடு தலைத் தீர்மானத்திற்குப் பிறகும் காலந்தாழ்த்த என்ன வழி என கவர்னர் மாளிகைக்கு தரப்பட்டி ருக்கும் ஆலோசனைதான் இது. சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டிய நாட்டில் சட்டத்தின் ஓட்டைகளே ஆள்கின்றன.

ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்

காவல் நிலையங்களிலும், நீதித்துறையிலும் ஆட்சியாளர் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருந்தால் அவைகள் இன்னும் சிறப்பாக செயல்படும்தானே?

சட்ட வழியிலான நீதி என்பதில் இரு இடங்களும் உறுதியாக இருந்தால் இடையில் நுழைபவர்களுக்கு வேலையே இல்லை.

பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்

தங்கம் விலை உயரும் வேகம், கொரோனா பரவும் வேகம் இதில் எது மக்களை அதிகம் கவலை கொள்ளச்செய்கிறது?

வருமானத்திற்கு வழியில்லாத கொரோனா காலத்தில் தங்கம் விலை எப்படி இத்தனை வேகமாக உயர்கிறது என்பதே மக்களை கவலைகொள்ளச் செய்கிறது.

_____

தமிழி!

முரளிமனோகர், வடக்கன்குளம்

இன்றைய ரஃபேல் விமானங்கள் போல எதிரிகளை வெல்ல பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஏதேனும் அகழாய்வு களில் கிடைத்திருக்கிறதா?

பழங்காலத் தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அருங்காட்சியத்தில் இருக்கின்றன. அகழாய்வில் தமிழர் பயன்படுத்திய தொழிற்கருவிகள் கிடைத்திருக் கின்றவே தவிர, கொலைக்கருவிகளான போர்க்கருவிகள் கிடைப்ப தில்லை. தொல்தமிழர்களின் திராவிட நாகரிகத்தை வெளிப்படுத்தும் சிந்துசமவெளி அகழாய்வுகள் முதல் கீழடி அகழாய்வுகள் வரை கல் மற்றும் பல வகை உலோகங்களான கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றில் வேட்டை யாடுவதற்கான கருவிகள் உண்டு. வீட்டு உபயோகங்களுக்கான கருவிகள் உண்டு. தொழிலுக்குத் தேவைப் படும் கருவிகள் உண்டு. போர்க் கருவிகள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் பெரியள வில் கிடைக்கவில்லை. தொல்தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்ப கருவிகளைப் பயன்படுத்தினர். குறிஞ்சி நிலத்தவரும், முல்லை நிலத்தவரும் வேட்டைக்கான கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. மருத நிலத்தவர் உழவுக் கருவிகளைப் பயன்படுத்தினர். நெய்தல் நிலத்தவர் தங்கள் கடல் வாழ்க்கைக்கு ஏற்ற கருவிகளைப் பயன்படுத்தினர். பாலை நிலத்தில் இருந்த கள்வர்கள் வழிப்பறிக் கான மிரட்டல் கருவிகளைப் பயன் படுத்தினர். வேட்டைக் கருவியையே வழிப்பறிக்கும் பயன்படுத்த முடியும். எனவே எவர் கையில் கருவி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடும் அமையும். மூவேந்தர்கள், சிற்றரசர்கள் எனப்படும் வேளிர், குறுநிலங்களை ஆட்சி செய்தவர்கள் என தமிழக நிலப்பரப்பு பல தரப்பினரால் ஆளப்பட்ட காலத்தில் ஒருவர்மீது ஒருவர் போர் தொடுக்கும் பழக்கம் ஏற்பட்டு, போர்க்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் இதற்கான குறிப்புகளை இலக்கியம் வாயிலாகக் காண முடிகிறது. சோழ அரசர்களான நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையிலிருந்த பகைமையைத் தணிக்க கோவூர்கிழார் எனனும் புலவர் மேற்கொண்ட முயற்சிகள் புறநானூற்றில் உள்ளன. அதுபோலவே அதியமானுக்கும் தொண்டைமானுக்கு மான போர்ச்சூழலில் அவ்வையார் ஒரு தூதுவராகத் தன் பணியினைச் செய்திருக்கிறார். தன் சகோதரன் குமணனின் தலையை வெட்டி வருபவருக்குப் பரிசு என அறிவித்த இளங்குமணனிடம்தன் தலையைக் கொண்டு போய் கொடுத்து பரிசு பெறுமாறு தனது வாளை, புலவர் பெருந்தலைச்சாத்தனாருக்கு கொடுத்த குமணனின் செயலும் இலக்கியம் வாயிலாகத் தெரிய வருகிறது. அரண்மனைகளில் இருந்தே பகையுணர்வு எனும் தீப்பொறி பறந்துள்ளது. அது, படைக்கலன்களான போர்க் கருவிகளை உருவாக்கும் உலைக் களம் ஆகியிருக்கிறது.