அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா?
ஊரடங்கு நடைமுறைக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, தனது ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. மேலிடம். அநேகமாக ஊரடங்கு முடிவடையும்போது ராஜஸ்தானிலும் காங்கிரசைக் கவிழ்த்து, பா.ஜ.க. ஆட்சி அமையலாம்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
தமிழகத்தில் கொரோனாவுக்கு வீரியம் மிக்க மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுவது உண்மையா?
மீன் மாட்டுவதற்காக தூண்டிலில் கோர்க்கப்படும் மண்புழுவை சில நேரங்களில் மீன்கள் லாவகமாக சாப்பிட்டு விட்டு, தூண்டிலுக்குத் தப்பிவிடும். அதுபோல, மார்க்கெட்டுக்கு இன்னும் மருந்து வராத நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை கொடுத்த வீரியமான மருந்துகள் கொரோனாவுக்கு உணவாகி அதனை வீரியமாகப் பரவ வைத்து வருகிறது போலும்.
லட்சுமிகாந்தம், வேலூர்(நாமக்கல்)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சேவையைப் பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரப்படுத்தியிருக்கிறதாமே?
பதவியில் இருக்கும்போது டாக்டர் பட்டம், சிறந்த மனிதர் விருது, சாதனையாளர் அவார்டு எல்லாம் தேடித் தேடி வரும். அது ஆளுமைத் திறமைக்கானதல்ல. அதிகாரம் கொண்ட பதவிக்காக. உண்மையாக சேவை செய்திருந்தால், நேர்மையாகத் தேர்தல் நடைபெறும்போது மக்களே வாக்குகள் எனும் விலைமதிப்பில்லா விருதினை வழங்குவார்கள்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
இந்தியா அனைத்து இடங்களிலும் தனது அதிகாரத்தையும் மரியாதையையும் இழந்து வருகிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டுகிறாரே?
கொரோனா காலத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அலட்சியமான செயல்பாடு- நிர்வாகத் திறனின்மை- சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்திய வீரர்களின் உயிர்ப்பலி- நேபாளம் கிளப்பும் எல்லை சர்ச்சை- உள் நாட்டிலேயே வேலைவாய்ப்பின்றி வெகுதூரம் நடந்து பட்டினியால் செத்த மக்கள்- போதிய நிதி வழங்கவில்லை என்கிற மாநில முதலமைச் சர்களின் ஆவேசக் குரல் என பல விதங்களிலும் தடுமாறுகிறது மோடி தலைமையிலான பா.ஜக. அரசு. ஆனால், இவற்றை சாதகமாக்கி அரசியல் செய்வதற்கான தலைமை இன்றி காங்கிரஸ் திண்டாடுவதையும், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள மாநில அரசுகளையும் காங்கிரஸ் இழந்து வருவதையும் ராகுல்காந்தி முதலில் கவனித்தாக வேண்டும். பா.ஜ.க.வுக்கு சட்டைப் பொத்தான் பிய்ந்துள்ளது. காங்கிரசுக்கோ வேட்டி காற்றில் பறக்கிறது.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
தொழிலாளர்களுக்கான பணிப்பலன்களை மறுக்கும் முதலாளிகள்மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயக்கம் காட்டுவது ஏன்?
அரசாங்கத்துக்கும் அவர்கள்தானே மறைமுக முதலாளிகள்.
_________
தமிழி
கே.பி.கே. பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
அயோத்தி நேபாளத்தில் இருக்கிறது என்கிறார் அந்நாட்டு பிரதமர். ராவணன் பறந்த வான்வழி பற்றி ஆராய்ச்சி செய்கிறது இலங்கை அரசின் விமானம் மற்றும் சுற்றுலாத்துறை. இதில் தமிழ்நாட்டுக்கு பங்கு இல்லையா?
300 இராமாயணங்கள் என வரலாற்று ஆய்வாளர் ஏ.கே.ராமா னுஜன் எழுதிய புத்தகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இராமாயணக் கதை எந்தெந்த வகையில் மாறியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை கடல் கடந்து ராமர் மீட்டு வந்தார் என்பது நமக்குத் தெரிந்த ராமாயணம். வடஇந்திய பழங்குடி யினரோ மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு ஏரியைக் கடந்து, ராவணன் சிறை வைத்திருந்த சீதையை ராமர் மீட்டதாக நம்புகிறார்கள். அதுமட்டு மல்ல, ம.பி.யில் உள்ள மாண்ட்சவுர் பகுதி மக்களும், கோண்டுவானா பழங்குடியினரும் ராவணனைத் தங்களின் தெய்வமாக வணங்குகிறார் கள். இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரையிலான நிலப்பகுதியில் இராமாயணம் குறித்து பலப்பல மாறுபாடுகள் உண்டு. அதனால், நேபாளத்தில் அயோத்தி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஒலி குரல் எழுப்புகிறார். இலங்கையை ஆளும் ராஜபக்சே சகோதரர்கள் அரசு, இராவணனை தங்கள் நாட்டு புகழ் அடையாளமாக காட்ட முனைகிறது. புஷ்பக விமானத்தில் சீதையை ராவணன் கடத்தியதாக இதிகாசம் கூறுவதால், ராவணன்தான் முதன்முதலில் வான்வழிப் பயணம் மேற்கொண்ட மன்னன் என்றும், அந்த வழியை ஆய்வுசெய்யும்படியும் அதற்கான தகவல்களைக் கோரியும் விளம்பரம் செய்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராமாயணத்தை ஆரிய-திராவிட யுத்தம் என்றும், திராவிடனான இராவணனை சூழ்ச்சியால் ஆரியர்கள் வீழ்த்தினார்கள் என்றும் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே அரசியல் தளத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துள்ளன. இராவண காவியம் என்று புலவர் குழந்தை எழுதிய நூல் அப்போது தடை செய்யப்பட்டது. ரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்களு டன் ராமாயணம் குறித்து அறிஞர் அண்ணா நடத்திய வாதங்கள் "தீ பரவட்டும்' என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. ராவணனை ‘இரக்கம் எனும் பொருளில்லா அரக்கன்’ என்று கம்பர் பாடியதை கண்டித்து வழக்கு விசாரணை நடப்பதுபோல "நீதிதேவன் மயக்கம்' என்ற நாடகத்தை அண்ணா எழுதி, அதில் அவரே ராவணனாக நடித்து வாதங்களை வைத்தார். பாரதிதாசன், கலைஞர் உள்ளிட்டோர் ‘இராவணன் எங்கள் பாட்டன்’ என கவிதை படைத்தனர். இராமாயணம் பற்றிய விவாதமே இராமாயணம் அளவுக்கு பெரியதுதான்.