வாசுதேவன், பெங்களூரு

தடைக்கல்லை, வாழ்க்கையில் படிக்கல்லாக மாற்றுவது எவ்வாறு?

கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் கிருமிநாசினி முதல் பரிசோதனைக் கருவிகள் வரை ஊழல் செய்வதில் கைதேர்ந்த அரசாங்கத்தாருக்கு உங்கள் கேள்வி அனுப்பி வைக்கப் படுகிறது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

வரும் தேர்தலில் தி.மு.க வை தன் வழிக்கு கொண்டு வருவது அல்லது தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது இதுதான் பாஜகவின் அஜென்ட்டா என சொல்லப்படுகிறதே?

சொல்லப்படுவது என்ன, அதை வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் ஜாதக ராசிப்படி அவர் முதல்வராக முடியாது என பா.ஜ.க .தயவில் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளரான முரளிதரராவ் வெளிப்படையாகவே, மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக வர விடமாட்டோம் என்று பேசி னார். 2016ஆம் சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க- தி.மு.க. இரண்டும் ஏறத்தாழ சம இடங்களில் முன்னணியில் இருந்த நிலையில், அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்க, அதன்பின் விறுவிறுவென அ.தி.மு.க.வின் வெற் றித்தொகுதிகள் அதி கரித்தன. குறைந்த வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்ற தாக வாக்கு எண் ணும் மையத்திலிருந்து தூக்கி வீசப் பட்ட தி.மு.க. வேட் பாளர் அப்பாவு, தனது தொகுதியின் மறு வாக்கு எண் ணிக்கைக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, வாக்கு எண்ணிக்கை நடந்தும் முடிவு அறிவிக்கப்படவில்லை. அதிகார பலத்தையும் மீறி நாடாளு மன்றத் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வுக்கு மக்கள் வெற்றி தந்தார்கள். அது சட்டமன்றத் தேர்தலிலும் நிகழ்ந்திடும் என்பதால் இப்போதே அதற்கு எதிராக தனது அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

Advertisment

கட்சித்தாவல் தடைச்சட்டம் இருந்தும் பல மாநிலங்களில் குதிரை பேரமும் ஆட்சி கவிழ்ப்பும் சர்வசாதாரணமாக நடப்பது எப்படி?

சபாநாயகர் என்ற ஜாக்கியை சரியாக வசப்படுத்தி வைத்துக் கொண்டால், எல்லா குதிரைகளின் லகானும் தங்கள் கைகளின் லாவகத்திற்கு இருக்கும் என்பது ஆட்சியைக் கவிழ்ப்போருக்குத் தெரியும். ஜாக்கி சரிவராவிட்டால், குதிரைப்பந்தய விதிகளில் உள்ள சந்துபொந்துகளை சாதகமாக்கி சாதித்துக் கொள்வார்கள்.

ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில்,

புதுச்சேரியில் ஆளுனரின் அனுமதியின்றி பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் தாக்கல் செய்த விவகாரம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி ஆகிவிடாதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தின் முதல்வருக்கு அதிகாரமா, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட லெஃப்டினன்ட் கவர்னருக்கு அதிகாரமா என்ற உரிமைப் போரை சளைக்காமல் நடத்திக் கொண்டிருக்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி. அதனால்தான், ஆளுநர் கிரண்பேடியின் அனுமதி மறுப்பையும் மீறி, சட்டமன்றத்தைக் கூட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டார். மாநில அதிகாரம் குறித்த உரிமைப் போரின் அடையாளம் இது. உள்கட்சி மோதல்- எதிர்க்கட்சிகள் பாய்ச்சல் இவற்றிற்கிடையே துணைநிலை ஆளுநருடனான சட்டப்போரை எப்படி சமாளிக்கப் போகிறார் முதல்வர் என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

சோவின் உறவினர்களை மிரட்டி துக்ளக் பத்திரிகையை அதன் ஆசிரியர் குருமூர்த்தி கைப்பற்றியுள்ளதாக கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டுகிறாரே?

காங்கிரஸ் சொத்துகளை ராகுல்காந்தியிடம் அழகிரி அடமானம் வைத்துவிட்டதாக அவதூறுச் சேற்றை வீசினார் குருமூர்த்தி. பதிலுக்கு அதைவிட காட்டமாக குருமூர்த்தி மீது எதையோ வீசியிருக்கிறார் அழகிரி. அரசியலில் சகஜமப்பா.

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

தந்தை பெரியார் புகழை அவ்வப்போது பலர் ரீசார்ஜ் செய்து கொண்டே இருக்கிறார்களே?

பெரியாரை இந்து விரோதியாகக் காட்டி, மக்களிடம் அவர்மீது வெறுப்பை விதைக்க இந்துத்வா சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால், பெரியார்தான் தங்களின் வழிபாட்டு உரிமை உள்பட பல உரிமைகளுக்கும் காரணமானவர் என்பதை பக்தி கொண்ட இந்துக்களும் உணர்ந்திருப்பதால், அவரைத் தொடும் போதெல்லாம் தமிழகம் ரீ-சார்ஜ் ஆகிறது.

________

தமிழி

அ.யாழினி பர்வதம், சென்னை 78

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன், தமிழகத்துடன் இருந்த பகுதி கள்தான் திராவிடமா?

தமிழை மூல மொழியாகக் கொண்டு அதிலிருந்து கிளைவிட்ட மொழிகளை திராவிட மொழிக் குடும்பங்கள் என்றும், அந்த மொழிகளைப் பேசிய மக்கள் நிறைந்திருந்த பகுதிகளுமே திராவிடம் என அடையாளப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் "பாகூயி' என்கிற மொழி பேசுவோர் உண்டு. அதுவும்கூட திராவிட மொழிக் குடும்பம்தான். சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்பதும் அத்தகைய ஆய்வுகள் அடிப்படையில்தான். பின்னர், திராவிட மொழிகளில் சில மட்டுமே வழக்கத்தில் நின்றன. அதைப் பேசிய தென்னிந்திய மக்களை திராவிடர்கள் என்றார்கள். தென்னிந்தியாவில் சமஸ்தானங்களின் ஆட்சிக் குட்பட்ட பகுதிகள் போக, மிச்ச மிருந்தது சென்னை மாகாண மாக இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தெலுங்கு, கன்னடம், மலை யாளம் பேசும் நிலப்பகுதிகள் தனித்தனி மாநிலங்களாயின. அதில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் சிலவும் பிற மாநிலங்களிடம் பறிபோய், இன்றைய தமிழகம் மிஞ்சியது.