சி.கார்த்திகேயன், சாத்தூர்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை முடிவு செய்வதில் ஏன் இத்தனை குழப்பம்?

dd

தேர்வு தேவை என அரசு நினைக்கிறது. எப்போது தேவை என்பதை கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதன்படி ஆலோ சித்து, மாணவர்- பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு முடி வெடுத்திருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. தன் விருப்பம் போல செயல்படுவதாக நினைத்து, கெட்ட பெயரை வாங்கிக் கட்டிய பின், தி.மு.க. இளைஞ ரணி- மாணவரணி செயலா ளர்கள் கோரிக்கை மனுவைப் பெறுவது வரை நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை.

Advertisment

கே.ஆர்.குபேந்திரன், தஞ்சாவூர்

செய்தித்தாள் நிறுவனங்கள் ஏறத்தாழ ரூபாய் 5000 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக நாளிதழ் ஆசிரியர்கள் பிரதமர்-முதல்வ ரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்களே?

கொரோனா உருவாக்கிய பதற்றத்தில் பலிகடாவானவை நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள். பேப்பரைத் தொட்டால் வைரஸ் பரவும் என வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்பி, ஊரடங்கின் முதல் கட்டத்தில் பத்திரிகைகளைத் தொடத் தயங்கினர் பெரும்பாலான வாசகர்கள். அடுத்தடுத்த கட்டங்களிலோ மற்ற ஊடகங்கள் அவர்களை மெய் மறக்கச் செய்துவிட்டன. பத்திரிகைகள் அச்சிடத் தேவையான தாளின் விலையேற்றம்-தட்டுப்பாடு, அச்சிட்ட இதழ்களை அனுப்புவதற்கானப் போக்குவரத்து முடக்கம், விற்பனை செய்ய வேண்டிய கடைகள் மூடப்பட்டிருந்த நிலை எனப் பல காரணங்கள் அச்சுத்துறையை முடக்கியுள்ளன. பிரதமரிடமும் முதல்வரிடமும் மற்ற கட்சித் தலைவர்களிடமும் நாளிதழ் ஆசிரியர்கள் வைத்துள்ள கோரிக்கை நியாயமானவை.

Advertisment

வாசுதேவன், பெங்களூரு

mm

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வரதராஜன் மறைவு?

பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் பலரின் வாழ்வும் தியாக வரலாறு. திருச்சியைச் சேர்ந்த கே.வரதராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்தியத் தலைவர்கள் வரை நெருக்கமானவர். அவர்களின் பாராட்டுக்குரியவர். விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்க தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். தொழிற்சங்க இயக்கங்களில் வி.பி.சிந்தனின் சீடர். கலை-இலக்கிய ஆர்வமும் நிறைய உடைய பொதுவுடைமைவாதி. எல்லாரிடமும் எளிமையாகப் பழகக்கூடிய, முழு நேர கட்சி ஊழியர். கே.வரதராஜனைப் பற்றிய இரங்கல் பதிவில் கவிஞர் இளையபாரதி, ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அரசியலில் ஓர் அத்திப்பூ உதிர்ந்திருக்கிறது.

ஆர்.சுந்தரரராஜன், சிதம்பரம்

உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் இருப்பது அமெரிக்கா வுக்கு பெருமை என்கிறாரே டிரம்ப்?

அதிக பரிசோதனை கள் செய்த நாடு என்பதால் அதிக எண்ணிக்கை என்ற பெருமை என டிரம்ப் சொல்வது, தன் நண்பர் ஆளும் நாட்டை சுட்டிக்காட்டி சொன்னதில்லை என நம்புவோம்.

மதிராஜாதிலகர், சின்னபுங்கனேரி

ஊரடங்கு பார்ட்-5 அறிவிக்கப்பட்டால்?

அது ஊரடங்கு காலம் அல்ல... உயிர் அடங்கும் காலமாக மாறிவிடும்.

_____________

தமிழி

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்

கண்ணதாசன், வாலிக்குப் பிறகு இலக்கியம் இருக்கிறதா?

இலக்கியம் என்பது பெருங்கடல். அதில் இந்த இரு கவிஞர்களும் சில துளிகள். கடலின் ஆழம் அறியாத ரசிகர்கள் சிலர், கரையிலிருந்து பார்த்து விட்டு, ஆர்ப்பரிக்கும் அலைகள் மட்டுமே கடல் என நினைத்து, கால் நனைத்து திரும்பி விடுகின்றனர். திரைப்படப் பாடல்கள் அலைகள். இலக்கியம் என்பது ஆழ்கடல். கவிஞர் கண்ணதாசன், அந்த ஆழ்கடலில் இருந்து முத்துகளை எடுத்து வந்து, கரையில் கால் நனைத்த ரசிகர்களுக்குக் காட்டினார். அன்றொரு நாள் அதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே’ என்ற பாரிமகளிரின் துயரக் கவிதையான சங்க இலக்கியப் பாடல், திரையில் காதலைச் சொல்ல கவிஞர்களுக்குப் பயன்பட்டது. "அத்திக்காய் காய்.. காய்.. ஆலங்காய் வெண் ணிலவே.. இத்திக்காய் காயாதே...' என்பதும் இலக் கியத்திலிருந்து சினிமாவுக்கேற்ப பயன்படுத்தப் பட்டதுதான். உள்ள‘மிளகாயோ, ஒரு பேச்‘சுரைக் காயோ’என அந்த இலக்கிய சிலேடையும் சினிமாவுக்கு கைக்கொடுத்தது. "மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்' என கவிஞர் வாலி எழுதியதும், இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட வரிகள்தான். தேன் எனும் மது குடித்த போதையில், பூவையே சங்கு என நினைத்து வண்டு கள் ஊதுவதாக தமிழ் இலக்கியம் சொல்கிறது. கோவலனும் கண்ணகியும் வறுமைசூழ மதுரைக்கு வந்தபோது, அங்கே கோட்டைச்சுவரில் பறந்த கொடிகள், “இங்கே வராதீர்.. வராதீர்’’ என்பது போல அசைந்தன என்று தற்குறிப்பேற்ற அணியில் சிலப்பதிகாரம் கூறும். அதன் தாக்கத்தில்தான் புலவர் புலமைப்பித்தன், "வெண்சங்கு கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட நான் கண்ட பொருள்கூறவா? என் அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது என்றாடும் நிலையல்லவா'’என்று தங்கையின் கழுத்தில் உள்ள நகையின் அசைவில் தன் எண் ணத்தை வரிகளாக்கினார்.

"ராக்கம்மா கையத் தட்டு' படலில் குனித்த புருவமும் எனும் திருநாவுக் கரசர் தோவரமும், "பார்த்த விழி பார்த்தபடி' என்ற பாடலில் அபிராமி அந்தாதி யும் இசைஞானி இளைய ராஜா இசையில் இடம்பெற் றன. "முத்தைத் திரு பக்தி திருநகை' எனும் அருண கிரிநாதர் பாடலும் திரைப் பாடலாகியுள்ளது. "யானும் ஞாயும் யாராகியரோ' என்ற குறுந்தொகையும், "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது' என்கிற வெள்ளி வீதியார் பாடலும், ஏ.ஆர். ரகுமான் இசையில் கவிஞர் வைரமுத்துவின் கைவண் ணத்தில் நுழைந்தன. பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் திரையில் இடம் பிடிக்கின்றன.