மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"தமிழகத்தை வடிகாலாக மட்டுமே கர்நாடகம் கருதுகிறது' என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?
டாக்டரின் வார்த்தைகளை ஆமோதித்து, தமிழ்நாட்டை பேஷன்ட் ஆக்கிக் கொண்டிருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
மேட்டுப்பாளையம் மனோகர்,கோவை-14
ஏர் பூட்டிய இரண்டு காளை மாடுகளை முதல்வர் பழனிச்சாமிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசளித்தது எதற்காக?
மேடைகளில் நினைவுப் பரிசு வழங்குவது வழக்கம். காவிரி டெல்டாவில் விவசாயம் நினைவில் மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதன் அடையாளமோ?
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணை யத்தின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது எதனைக் காட்டுகிறது?
அப்பல்லோவில் ஜெ.வின் ஆயுள்காலம்தான் நீடிக்காமல் போய்விட்டது. அதன் மர்மத்தை விசாரிக்கும் ஆணையத்தின் காலமாவது நீடிக் கட்டும் என நீதியின் ஆயுளோடு விளையாடுகிறார்கள் ஆட்சியாளர்கள
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"தமிழகத்தை வடிகாலாக மட்டுமே கர்நாடகம் கருதுகிறது' என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?
டாக்டரின் வார்த்தைகளை ஆமோதித்து, தமிழ்நாட்டை பேஷன்ட் ஆக்கிக் கொண்டிருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
மேட்டுப்பாளையம் மனோகர்,கோவை-14
ஏர் பூட்டிய இரண்டு காளை மாடுகளை முதல்வர் பழனிச்சாமிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசளித்தது எதற்காக?
மேடைகளில் நினைவுப் பரிசு வழங்குவது வழக்கம். காவிரி டெல்டாவில் விவசாயம் நினைவில் மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதன் அடையாளமோ?
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணை யத்தின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது எதனைக் காட்டுகிறது?
அப்பல்லோவில் ஜெ.வின் ஆயுள்காலம்தான் நீடிக்காமல் போய்விட்டது. அதன் மர்மத்தை விசாரிக்கும் ஆணையத்தின் காலமாவது நீடிக் கட்டும் என நீதியின் ஆயுளோடு விளையாடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நடத்திய தர்ணா போராட்டம் தேவையானதா?
ஆளுநர் தன்னுடைய அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாகச் சொல்லி தர்ணா நடத்தினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் அதிகார வரம்பு மீறும் துணைநிலை ஆளுநரை எதிர்த்துப் போராடுகிறார். தமிழ்நாட்டிலோ ஆளுங்கட்சி வாய்மூடிக் கிடக்க, ஆளுநரின் அதிகார மீறலைக் கண்டித்து எதிர்க்கட்சி போராடுகிறது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டால், 7 ஆண்டு சிறை என மிரட்டுகிறது ராஜ்பவன். இந்த அளவுகோல்படி பார்த்தால், ஆளுநர் மாளிகையில் நுழைந்து அங்குள்ள சோபாவில் உட்கார்ந்தும் -படுத்தும் நாள்கணக்கில் தர்ணா நடத்திய டெல்லி முதல்வருக்கு ஆயுள் சிறைதானோ!
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்,சென்னை-118
சேலம் டூ சென்னை வழியில் அழியப்போகும் பச்சை வயல்கள் முன்பு நின்று, மலரும் நினைவுகளுக்காக செல்ஃபி எடுக்க வேண்டுமென்றால், யார் எடுத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்?
மக்கள் தானாகவே முன்வந்து நிலத்தைக் கொடுக்கிறார்கள் என்று பச்சைப் பொய் சொல்பவர்தான், பாலைவனமாகப்போகும் பசுமைக்குமுன் நின்று செல்ஃபி எடுக்க பொருத்தமானவர்.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
இனிமேலும் தி.மு.க.வால், அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க முடியுமா?
சட்டப்படி சாத்தியமில்லை.. ஜனநாயகப் படி சாத்தியம்.. தேர்தல் வந்தால்!
ஏ.எஸ்.கோவிந்தராசன், சென்னை-24
தமிழ்நாட்டில் எஸ்.வீ.சேகருக்கு ஒரு சட்டம், மன்சூர்அலிகானுக்கு ஒரு சட்டமா?
சட்டம் ஒன்றுதான். அதில் நூலிழை வழியே எஸ்.வீ.சேகர்களால் நுழைந்து விடமுடியும். மன்சூர்அலிகான்கள் அதே நூலிழையாலேயே சிக்கிக்கொள்வார்கள்.
ஆன்மிக அரசியல்
தூயா, நெய்வேலி
ஆண்டுக் கணக்கைக் குறிப்பிடும் கி.மு., கி.பி. இவற்றை பாடப் புத்தகத்தி லிருந்து நீக்கியதில் மத நோக்கமோ உள்நோக்கமோ இல்லை என்கிறதே தமிழக அரசு? இது என்ன வகை அரசியல்?
காலக்கணக்கும், அதற்குரிய நாட்காட்டிகளும் காலந்தோறும் மாறுபட்டும், மாற்றப்பட்டும் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இயேசு பிறப்புக்கு 31 ஆண்டுகள் முன்பாக திருவள்ளுவர் பிறந்தார் எனத் தமிழறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவினை ஏற்று, அரசாங்கத்தால் திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. அதன்படி, தற்போது நடப்பது 2049வது ஆண்டு (2018+31). தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கணக்கை, அ.தி.மு.க. ஆட்சியும் கடைப்பிடிக்கிறது. உலக அளவில் வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டு வதற்கு கி.மு. (கிறிஸ்து பிறப்பதற்கு முன்), கி.பி. (கிறிஸ்து பிறந்த பின்) எனக் குறிப்பிட்டு வந்தனர். அது, ஒரு மதத்தையும் அதன் தேவகுமாரனாகக் கருதப்படும் இயேசுவையும் சுட்டிக்காட்டுவதாலும், இயேசு எந்த ஆண்டு பிறந்தார் என்ற காலக் குழப்பம் வரலாற்று ஆய்வாளர்களிடம் இருப்பதாலும், கி.மு., கி.பி.க்குப் பதிலாக, அதே ஆண்டுக் கணக்கை. பொதுஆண்டுக் கணக்கு (Common Era) என பல நாடுகளும் கடைப் பிடிக்கின்றன.
மத்திய அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசின் புதிய பாடப்புத்தகங்களிலும் கி.மு. என்பதற்குப் பதில் பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்), கி.பி. என்பதற்கு பதில் பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்குப் பின்) என இடம் பெற்றுள்ளது. "இந்த மாற்றம் செய்யப்பட்டதில் மதம் சார்ந்த பிரச்சினை எதுவுமில்லை'’என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மத நம்பிக்கையைக் கடந்து, வரலாற்றின் அடிப்படையிலும் அறிவியல்பூர்வமாகவும் காலக்கணக்கை உறுதிப்படுத்துவது நல்ல அம்சம்தான். அதே வழியில், கண்ணன் பிறந்தநாளான கிருஷ்ண ஜெயந்தி, நரகாசுரன் கொல்லப்பட்ட நாளான தீபாவளி உள்ளிட்டவற்றையும் பிறப்பு-இறப்புச் சான்றிதழ்கள் மூலம் உறுதிப்படுத்தி, விடுமுறை அளிக்குமா தமிழ்நாடு அரசு? இதில்தான் மறைந்திருக்கிறது அரசியல்.