டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
"உள்ளாட்சித் தேர்தலில் எந்த சித்து விளையாட்டும் விளையாடுவோம்' என்கிறாரே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி... அப்படியென்றால்?
"2001-ல் அ.தி.மு.க.வும், 2006-ல் தி.மு.க.வும் என்ன செய்தனவோ அதை இப்போது செய்வோம்' என்று ஓப்பனாகவே சொல்கிறார் அமைச்சர். அதனால்தான் அவர் அமைச்சராக இருக்கிறார். "அப்படியென்றால்...' என்று கேட்கும் நீங்கள் வாக்காளராக இருக்கிறீர்கள்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
கலைஞர் நினைவிடத்தில் திருமணம் நடத்தி வைத்திருக்கிறாரே மு.க.ஸ்டாலின், இது சரியா?
நடுகல் வழிபாடு என்பது தமிழர்களின் நெடுங்காலப் பழக்கம். குலசாமி வழிபாடுகூட மூதாதையரைப் போற்றும் மரபே. எனினும், தலைவர்களின் நினைவிடங்கள் அதிலும் குறிப்பாகத் திராவிடத் தலைவர்களின் நினைவிடங்கள் என்பவை வேண் டுதல் நிறைவேற்றும் இடங் களன்று. நினைவினைப் போற்று கிற இடம். அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு கடற்கரையில் அமைக்கப்பட்ட நினைவிடங்கள் சுற்றுலா வரு பவர்களை ஈர்க்கின்ற வகையிலும் அமைந்துவிட்டன. இதில், கலைஞர் நினைவிடம் என்பது கடைசியாக உருவானது. மற்ற மூன்று தலைவர்களைவிட அதிக காலம் வாழ்ந்தவர் கலைஞர். அவரது மரணப் போராட்டமும், மரணத்திற்குப் பிறகும் தனக்கான இடத்தைப் பெறுவதற்காக நடந்த சட்டப் போராட்டமும், மெரினா வில் கலைஞருக்கு தனி மரியாதை யை உருவாக்கித் தந்துவிட்டது. அதன் விளைவுதான், அங்கே வேட்பாளர் பட்டியல் வைக்கப் படுகிறது, குழந்தைகளைத் தவழ விடுகிறார்கள், புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது, அதன் தொடர்ச்சி யாக திருமணமும் நடந்துள்ளது. நினைவிடத்தில் திருமணம் என்பது சுயமரியாதை திருமண முறையில் புதிய அத்தியாயம்.
அ.யாழினி பர்வதம், சென்னை
அமெரிக்கா சென்ற ஓ.பி. எஸ்., தங்கத் "தமிழ் மகனாக'த் திரும்பியிருப்பது பற்றி?
தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் டாக்டரைக் கண்டுபிடித்து அடையாளம் காட்டுகின்றன. அமெரிக்க அமைப்புகள் தமிழ்மகனைக் கண்டறிந்து நமக்கு அனுப்புகின்றன.
எபினேசர், நாகர்கோவில்
இந்திய செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியையே மாற்றி மகாராஷ்டிர முதல்வராகிவிட்டாரே பட்னாவிஸ்?
"உத்தவ் தாக்கரே முதல்வ ராகிறார்' எனத் தலைப்புச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ.க. வின் பட்னாவிஸ் மீண்டும் முதல் வரானது அரசியலின் வெளித் தோற்றத்துக்கும் உள்நடப்பு களுக்குமான பெரும் இடை வெளியைக் காட்டுகிறது. ஊடகங் களைத் திசை திருப்ப முடியும் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"சினிமாவில்தான் வெற்றிடம், அரசியலில் வெற்றிடம் இல்லை' என்கிறாரே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்?
"ஜெ.' இட்லி சாப்பிட்ட தாகப் பொய் சொன்னோம்' என்று வெகுளியாக உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்டவர் அவர். சினிமாவிலோ, அரசியலிலோ வெற்றிடம் இருப்பதில்லை. இரு துறைகளிலும் யாருக்கு எந்த இடம், எவ்வளவு இடம் என்பதுதான் முக்கிய மானது. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களும், வருவதாக சொல்பவர்களும் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு இல்லையே?
பரபரப்பும் விறுவிறுப்பும் எதற்கு? அதிசயமும் அற்புதமும் போதாதா?... காத்திருங்கள்.
___________
தமிழி
(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)
மல்லிகா அன்பழகன் சென்னை-78
சிந்து நாகரிகம், நைல் நாகரிகம், வைகை ஆற்று நாகரிகம் என்ன வேற்றுமை?
ஒற்றுமைகளும் உண்டு. வேற்றுமைகளும் உண்டு. பழங்கால நாகரிகங்கள் பலவும் ஆற்றங்கரையி லேயே உருவாகியிருக்கின்றன. வேட்டையாடும் காலத்திலிருந்து வேளாண்மை காலத்திற்கு மனித சமூகம் மாறிய நிலையில், நீர்வளத்தை எதிர்பார்த்தும், அதனைத் திறமையாக நிர்வகிப்பதிலும் நாகரிக வளர்ச்சியை மனிதர்கள் அடைந்துள்ளனர். நைல் நாகரிகம் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிந்து நாகரிகம் ஏறத்தாழ 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது வைகை நாகரிகம். தற்போதைய கீழடி அகழாய்வுகளின் அடிப்படையில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து நடக்கும் ஆய்வுகளின்போது, அதன் காலம் இன்னும் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புண்டு என்கிறார்கள் தொல்லியல் வல்லுநர்கள்.
நைல் நாகரிகத்தில் நீர்ப்பாசன முறை சிறப்பாக இருந்ததை அறிய முடிகிறது. பிரமிடு போன்ற வியத்தகு கட்டடங்கள் உருவாகின. கனிமங்களைத் தோண்டி எடுத்தல், நில அளவியல் போன்றவை நைல் நாகரிகத்தின் சிறப்பம்சங்களாகக் கருதப்படுகின்றன. சிந்துவெளி நாகரிகத்தில் நீர் மேலாண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. குறிப்பாக, வடிகால் வசதி என்பது மற்ற நாகரிகங்களுக்கு முன்பாக சிந்து நாகரிகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டுகின்றனர். பல அடுக்கு கட்டடங்கள் கொண்ட வசிப்பிடங்கள் என்பது சிந்து நாகரிகத்தின் மற்றொரு சிறப்புமிகு அடையாளமாகும். வைகை நாகரிகத்தில் மற்ற இரு நாகரிகங்களைப் போலவே சிறப்பான நகர நாகரிகம் வெளிப்படுகிறது. அத்துடன், ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமின்றி, எளிய மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கு அவரவர் வீட்டுப் பானைகளில் எழுதப்பட்டிருந்த கீறல் எழுத்துகள் சாட்சியாகின்றன. தொழிற்கூடங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிற நாகரிகங்களுடன் வாணிகத் தொடர்பு இருந்ததை மூன்று நாகரிகங்களிலும் காண முடிகிறது. தோண்டத் தோண்ட ஆர்வம் பெருகும் வகையில் பழமையான நாகரிகங்கள் குறித்த செய்திகள் கிடைத்தவண்ணம் உள்ளன.