மாவலி பதில்கள்16

mavalianswers

மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்

காவிரி மேலாண்மை வாரியம் போராட்டத்தால், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ்-பா.ஜ.க. எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்?

"40 வருசம் பொறுத்திருந்தவங்க.. 40 நாள் பொறுக்க முடியாதா? கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கு காவிரித் தண்ணீர் வரும்' என பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசியதை கர்நாடக காங்கிரஸ்காரர்கள் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிரமாகப் பரப்பி, வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

mavali-answers

பி.மணி, வெள்ளக்கோயில்

காவிரி ஆறும் அதன் வழித்தடமும் கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் சொந்தமா?

ஆறுகள் அனைத்தும் இயற்கையின் சொந்தம். அவற்றில் உள்ள நீரின் உரிமையை நியாயமாக நிர்ணயிக்க வேண்டிய அரசுகள் அலட்சியம் காட்டும்போது கேள்வியில் தொடங்கும் போராட்டம் மோதலில் முடிகிறது. காவிரி தங்களுக்குத்தான் சொந்தம் எனவும், தங்கள் பகுதியை தனிமாநிலமாக அமைக்க வேண்டும் என்றும் காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். கர்நாட

மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்

காவிரி மேலாண்மை வாரியம் போராட்டத்தால், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ்-பா.ஜ.க. எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்?

"40 வருசம் பொறுத்திருந்தவங்க.. 40 நாள் பொறுக்க முடியாதா? கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கு காவிரித் தண்ணீர் வரும்' என பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசியதை கர்நாடக காங்கிரஸ்காரர்கள் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிரமாகப் பரப்பி, வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

mavali-answers

பி.மணி, வெள்ளக்கோயில்

காவிரி ஆறும் அதன் வழித்தடமும் கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் சொந்தமா?

ஆறுகள் அனைத்தும் இயற்கையின் சொந்தம். அவற்றில் உள்ள நீரின் உரிமையை நியாயமாக நிர்ணயிக்க வேண்டிய அரசுகள் அலட்சியம் காட்டும்போது கேள்வியில் தொடங்கும் போராட்டம் மோதலில் முடிகிறது. காவிரி தங்களுக்குத்தான் சொந்தம் எனவும், தங்கள் பகுதியை தனிமாநிலமாக அமைக்க வேண்டும் என்றும் காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். கர்நாடகாவின் மைசூரு-மாண்டியா மாவட்ட விவசாயிகளோ, "காவிரி எங்களுக்கே சொந்தம். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமாட்டோம்' என்கிறார்கள். "சர்வதேச விதிகளின்படி ஆற்று நீரோட்டத்தில் உள்ள மாநிலங்களில் (Riparian States) அண்டை மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது' என்பதை வலியுறுத்துகிறது தமிழ்நாடு. "கடைமடைப் பகுதியான எங்களைக் கண்டுக்குங்க' என்கிறது காரைக்காலை உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"நான் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட எம்.பி., என் சம்பளத்தை விட்டுத் தரமாட்டேன்' என்கிறாரே சுப்பிரமணியசாமி?

"மானத்தை விட்டாலும் விடுவேனே தவிர, வருமானத்தை விடமாட்டேன்' என்று வெளிப்படையாகச் சொல்வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.

மேட்டுப்பாளையம், மனோகர், கோவை-14

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலந்தாழ்த்துவதன் நோக்கம்தான் என்ன?

கர்நாடகம் மீதான கரிசனம். காரணம், அங்கே ஆட்சியைப் பிடித்தாக வேண்டிய அவசியம்.

எம்.முகமது ரபீக் ரஷாதி, விழுப்புரம்

மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் நடைபெற்றுவரும் அடுத்தடுத்த போராட்டங்கள் குறித்து?

காவிரி பிரச்சினைக்காக எதிர்க்கட்சிகளையும் விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஸ்டாலின் மேற்கொள்ளும் தொடர்ச்சியான போராட்டங்கள், மக்கள் பங்கேற்புடன் நடப்பது மத்திய-மாநில ஆட்சியாளர்களை யோசிக்க வைத்திருக்கிறது. அதனால்தான், "தமிழ்நாட்டில் 50 ஆண்டுகால ஆட்சியில் அணைகளே கட்டவில்லை; அதனால்தான் தண்ணீரை வீணடித்து பிற மாநிலங்களை கெஞ்ச வேண்டியுள்ளது' என்ற எதிர்ப்பிரச்சாரம் வலுத்துள்ளது. தமிழ்நாட்டில் பெரிதும் சிறிதுமாக 85 அணைகள் உள்ளன. இதில் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசின் ஐந்தாண்டு திட்ட நிதி உதவியுடன் கட்டப்பட்ட பெரிய அணைகளின் எண்ணிக்கை கமார் 10. அதன்பின் 50 ஆண்டுகளில் கட்டப்பட்ட சிறு அணைகளின் எண்ணிக்கை ஏராளம். அதில் முக்கியமானவை பலவும் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டவை என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டிய கடமையும் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தியும் கச்சத்தீவு நமக்கு கிடைக்காமல் இருப்பது போல் காவிரி மேலாண்மை வாரியமும் அமைந்துவிடுமா?

அதிர வைத்த ஐ.பி.எல். எதிர்ப்பையும், அதற்கான விளைவையும் பார்க்கும்போது "கச்சத்தீவு நிலைமை காவிரிக்கு வராது' என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

வி.கார்மேகம், தேவகோட்டை

"சொல்லுக்கும் செயலுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளதால், அரசியல்வாதிகள் என்றாலே பொய் பேசுபவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது' என்கிறாரே ராஜ்நாத்சிங்?

15 லட்ச ரூபாய் டெபாசிட் என்ற வாக்குறுதி அவரையும் பாதித்துவிட்டதோ!

ஆன்மிக அரசியல்

அயன்புரம், த.சத்தியநாராயணன்

ஆன்மிக அரசியலால் கிறிஸ்தவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, ஐயர்களுக்கு யாருக்கு நன்மை? தீமை?

ஆன்மிக அரசியல் என்றால் அது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது என்ற பொதுவான எண்ணம் இருக்கிறது. இந்தியாவில், இந்துக்கள் அதிகம் என்பதால் இந்த எண்ணம் ஏற்படுவது இயற்கை. எனினும், ஆன்மிகத்தை மதம் என்கிற நிறுவனத்தின் வழியே கையில் எடுப்பது எல்லா மதங்களுக்கும் இயல்பானதாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மதமே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகவும், ஆட்சியை வழிநடத்தும் அதிகாரம் கொண்டதாகவும் மாறுகிறது. சவுதிஅரேபியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலான சட்டங்களே ஆட்சியை வழிநடத்துகின்றன. சட்டம் அனைவருக்கும் சமமாக இருந்தாலும் அதையும் மீறி அரண்மனைவாசிகள் தங்களுக்கான தனி உலகத்தில் வாழ்ந்ததை அண்மைக்கால செய்திகள் வெளிப்படுத்தி வருகின்றன. ஐரோப்பாவில் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத் தலைவர் போப் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்படும் நாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என எல்லோருக்குமான ஆன்மிகத் தலைநகராக காஞ்சி சங்கர மடம் இருந்தது. சங்கரராமன் தன் உயிரைக் கொடுத்து அந்த கொடுமையை மாற்றினார். இப்படி ஒவ்வொரு மதத்திலும் அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஆன்மிக அரசியல் நன்மை தரும். அதிகாரத்தின் அட்டகாசத்தை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் தீமை வரும்.

mavali answers
இதையும் படியுங்கள்
Subscribe