மாவலி பதில்கள் 25

vaiko

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

காமராஜர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, ஆன்மிக ஆட்சி, இவற்றில் ரஜினி ஆட்சி எதுவாக இருக்கும்?

("சந்திரமுகி'யில் வடிவேலுவைப் பார்த்து ரஜினி பேசும் டயலாக் பாணியில் படிக்கவும்)

கட்சியையே இன்னும் ஆரம்பிக்கலையாம்.. அதற்குள் ஆட்சி பற்றி அனுமானமாம்.

நித்திலா, தேவதானப்பட்டி

தமிழ்ப் புலனாய்வு இதழியலில் 30 ஆண்டுகளாக தனி முத்திரை பதித்துள்ள நக்கீரன் பற்றி "மாவலி'யின் பார்வை என்ன?

நக்கீரன் பார்வையும் மாவலி பார்வையும் ஒன்றுதான். புராண-இதிகாச அடிப்படையில் நக்கீரனும் மாவலியும் அதிகாரம் கொண்டவர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் உறுதியாக நின்றவர்கள். அதற்காக மாவலி, பூமிக்குள் அழுத்தப்பட்டு மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டார். நக்கீரனோ, நெற்றிக்கண்ணால் எரித்து சாம்பலாக்கப்பட்டார். அந்த நிலையிலும் இருவருமே தங்கள் உறுதிப்பாட்டிலிருந்து மாறவில்லை. புராணகால நக்கீரனைவிட அதிக அடக்குமுறையைக் கண்டது இன்றைய நக்கீரன். அதை சட்டரீதியாகச் சந்தித்து வெற்றி பெற்று, தனது புலனாய்வுச்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

காமராஜர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, ஆன்மிக ஆட்சி, இவற்றில் ரஜினி ஆட்சி எதுவாக இருக்கும்?

("சந்திரமுகி'யில் வடிவேலுவைப் பார்த்து ரஜினி பேசும் டயலாக் பாணியில் படிக்கவும்)

கட்சியையே இன்னும் ஆரம்பிக்கலையாம்.. அதற்குள் ஆட்சி பற்றி அனுமானமாம்.

நித்திலா, தேவதானப்பட்டி

தமிழ்ப் புலனாய்வு இதழியலில் 30 ஆண்டுகளாக தனி முத்திரை பதித்துள்ள நக்கீரன் பற்றி "மாவலி'யின் பார்வை என்ன?

நக்கீரன் பார்வையும் மாவலி பார்வையும் ஒன்றுதான். புராண-இதிகாச அடிப்படையில் நக்கீரனும் மாவலியும் அதிகாரம் கொண்டவர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் உறுதியாக நின்றவர்கள். அதற்காக மாவலி, பூமிக்குள் அழுத்தப்பட்டு மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டார். நக்கீரனோ, நெற்றிக்கண்ணால் எரித்து சாம்பலாக்கப்பட்டார். அந்த நிலையிலும் இருவருமே தங்கள் உறுதிப்பாட்டிலிருந்து மாறவில்லை. புராணகால நக்கீரனைவிட அதிக அடக்குமுறையைக் கண்டது இன்றைய நக்கீரன். அதை சட்டரீதியாகச் சந்தித்து வெற்றி பெற்று, தனது புலனாய்வுச் செய்திகளில் அன்று முதல் இன்றுவரை புலிப் பாய்ச்சலுடன் செயல்பட்டு, இந்திய இதழியலுக்கே வழிகாட்டி வருகிறது.

திராதி, துடியலூர், கோவை-34

ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஒரு லட்சம் லஞ்சம் வழங்க வேண்டியுள்ள அவலம் பற்றி?

கட்டணமே இல்லாமல் பாடப்புத்தகங்கள், சீருடைகள், எழுதுபொருட்கள் தொடங்கி மடிக்கணினி வரை தருகின்ற அரசுப் பள்ளிகளை அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் அவலம்.

vaiko

தீபன், சிட்னி, ஆஸ்திரேலியா

ஈழத் தமிழர் உரிமைக்காக நாடாளுமன்றம் முதல் தமிழீழக்காடுகள் வரை தன் முத்திரையைப் பதித்த வைகோவுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை ஒப்பிட்டு மாவலி பதில் அளித்தது சரியா?

ஒப்பிட்டது மாவலி அல்ல. மாவலியிடம் கேள்வி கேட்டவர்தான் ஒப்பிட்டிருந்தார். விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரியவர் யார் என்பதில் உறைந்திருக்கும் உண்மையைக் கோடிட்டுக் காட்டியது மாவலியின் பதில். ஈழத்தமிழர் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பி, ராஜீவ்காந்தி அரசையே கிடுகிடுக்க வைத்தவர் வைகோ. தமிழீழக் காட்டுக்குப் பயணித்து விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தங்கியிருந்தவர். "விடுதலைப்புலிகளை அன்றும் ஆதரித்தேன் -இன்றும் ஆதரிக்கிறேன் -என்றும் ஆதரிப்பேன்' என்று அழுத்தமாகப் பதிவு செய்து, அதன் காரணமாக "பொடா' சிறைவாசத்தை ஒன்றரை ஆண்டு அனுபவித்தவர். வைகோவின் அரசியல் எதிரிகளால்கூட அவருடைய தமிழீழ ஆதரவு உணர்வுடன் இன்னொரு தலைவரை ஒப்பிட முடியாது. மற்றவர்களெல்லாம் ஈழப்போர் முடிவுக்கு வந்தபிறகு அதை முன்வைத்து அரசியல் இயக்கங்களை உருவாக்கியவர்கள். "பிரபாகரனுடன் சீமான் உள்ள படம் உண்மையானதல்ல' என்ற வைகோவின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு சீமானிடமிருந்து இதுநாள் வரை பதிலும் வரவில்லை.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர் கோவை

தமிழ் சினிமா துறையில் "அஷ்டாவதானி' எனப் பெயர் எடுத்த நடிகை பானுமதியைப் போல இன்றைக்கு யாராவது இருக்கிறார்களா?

நடிப்பு, பாட்டு, இயக்கம், தயாரிப்பு இன்னும் பிற தொழில்நுட்பங்கள் என சாதித்தவர் பானுமதி. இன்றைய நடிகைகளுக்கும் பல திறமைகள் உண்டு. வாய்ப்பையும் வருமானத்தையும் பொறுத்தே அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

banumathi

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"திராவிடக் கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால்தான் தமிழகத்தின் பிரச்சினைகள் தீரும்' என்று எச்.ராஜா கூறுகிறாரே?

எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் தங்கள் வார்த்தைகளால் உருவாக்கும் பிரச்சினைகளைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க.வை சுத்தமாக வெளியேற்றிவிட்டுத்தான் ஓய்வார்கள் என்பதுபோலத் தெரிகிறது.

--------------------

ஆன்மிக அரசியல்

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவது... புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்குவது.. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

பல எழுத்தாளர்கள் -பல பதிப்பாளர்கள் வெளியிட்ட புத்தகங்கள் ஒரே வளாகத்தில் கிடைக்கும் திருவிழா என்பதால், தங்களுக்குத் தேவையானதை அந்தத் திருவிழாவில் வாங்குவது என்பது வாசகர்களின் தேவையையும் தேடலையும் பொறுத்தது. மாட்டுச் சந்தை நடக்கிறதென்றால், தேவையுள்ளவர்கள் அங்கு சென்று மாட்டை விற்பதும் வாங்குவதும் போலத்தான் புத்தகச் சந்தை என்பதும் அறிவுத்தேடுபவர்களுக்கானது. அட்சய திரிதியை என்பது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அந்த நாளில் தங்கம் வாங்கினால் ஒவ்வொரு வீட்டிலும் செல்வத்தின் கடவுளான லட்சுமி குடியேறுவார் என்றும் அதன் மூலமாக தங்கம் குவியும் என்றும் கடந்த சில ஆண்டுகளாகப் பரப்புரை செய்யப்படுவது என்பது வியாபாரத்திற்கு ஆன்மிகத்தைப் பயன்படுத்தும் உத்தியாகும். இந்த ஆண்டு அட்சய திரிதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் அலைமோதியதுடன் 1000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. நகை தேவையுள்ளவர்கள்-விருப்பமுள்ளவர்கள் அட்சய திரிதியைக்கு அடுத்த சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி போன்ற நாட்களில்கூட தங்கள் வசதிக்கேற்ப வாங்கலாம். ஆனால், அந்த நாட்களில் வாங்கினால் முழு பலன் கிடைக்காது என்பது போன்ற சித்தரிப்புகளுக்குப் பின்னணியில் ஆன்மிக அரசியல் இருக்கிறது. அதே நேரத்தில், புத்தகத் திருவிழா நடைபெறும் எந்த நாளிலும் தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், திருமந்திரம் என எந்த ஒரு புத்தகத்தை வாங்கினாலும் அதில் உள்ள கருத்துகளும் வாசிப்பு தரும் பயனும் மாறவே மாறாது.

mavali answers
இதையும் படியுங்கள்
Subscribe