என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

தனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்று நெதன்யாகு எச்சரித்துள்ளாரே...?

முதலில் இந்த பிடிவாரண்டால் நெதன்யாகுவுக்கு எந்த அபாயமும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள், சர்வதேச அளவில் செய்தியாகி சம்பந்தப்பட்ட நபருக்கு நெருக்கடியைத் தருவதற்காகவே வெளியிடப்ப டுவது. சர்வதேச நீதிமன்றத்தையே இத்தனை கீழிறங்கி எச்சரிக்கும் நெதன்யாகு, காசா பகுதியில் வசித்த பாலஸ்தீனர்களை என்னென்ன பாடுபடுத்தியிருப்பார்... எப்படியெல்லாம் அழித்திருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. தினமும் அரசுக்கு எதிராக அறிக்கை விட்டுட்டு இருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறாரே ஸ்டாலின்...?

பதில் சொல்வதா... வேண்டாமா என்பது முதல்வரின் சுதந்திரம். அதில் நாம் தலையிடமுடியாது. அதேசமயம் மருத்துவர் ராமதாஸ் எழுப்பிய கேள்வியும் முக்கியமானது தான். அமெரிக்க நீதிமன்றம், தமிழகத்தின் மாபெரும் தொழிலதிபரான அதானிக்குப் போகிற போக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்து விட முடியாது. அந்த அதானி லஞ்சம் கொடுத்த பட்டியலில், தமிழகம், ஆந்திரா, ஒடிஸா, சத்தீஸ்கர் மாநிலங்கள் உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டும்போது, எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்புவது நியாயமானதுதான். ஆனால், அமெரிக்கா இந்த ஒப்பந்தம் நடந்ததாகச் சொல்வது 2021- 2022 காலகட்டம். அதானி தமிழக முதல்வரைச் சந்தித்தது இந்த வருடம். முதல்வரும் செந்தில்பாலாஜியும் பதில் சொல்லித்தான் இதிலிருந்து வெளிவரவேண்டும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

கூட்டணி ஆட்சிக்கான சூழல் 2026 தேர்தலில் இல்லை என்கிறாரே திருமா வளவன்?

இந்த முறை வாய்ப்பில்லையென்று மனதைத் தேற்றிக்கொண்டார்போல. பெரும்பாலும் எந்த ஒரு கட்சியும் ஆட்சியமைக்கப் போதுமான இடங்களைப் பிடிக்கவில்லையென்றாலே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் இடம்தந்து அரவணைத்துக்கொள்ளும். கூட்டணியமைத்து தேர்தலைச் சந்தித்தாலே ஆட்சியில் பங்கு என்ற சிந்தனை புதிது. விஜய்க்கு இழக்க எதுவுமில்லை என்பதால், ஆட்சியில் பங்கு என்று அறிவிக்கிறார். தேர்தல் நெருங்கட்டும் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

mm

எச்.மோகன், மன்னார்குடி

தீயணைப்புத் துறையில் மட்டும் பெண்கள் சேராதது ஏன்?

Advertisment

தமிழ்நாட்டில் தீயணைப்புத் துறையில் சேர்ந்த பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன். தமிழகத்தில் 2012-ல் சென்னை சேப்பாக்கத்தி லுள்ள கலச மகாலில் தீவிபத்து ஏற்பட்ட போது, துணிச்சலாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீக்காயமடைந்தவர். பின், அதற்காக மாநில அரசின் அண்ணா பதக்கம், குடியரசுத் தலைவரின் பதக்கமெல்லாம் பெற்றார். குரூப் 1 அதிகாரிகளுக்கு அபூர்வமாக வழங்கப்படும் ஐ.ஏ.எஸ். பதவியும் அவரைத் தேடிவந்தது. இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரி மீனாட்சி. அவரும் தமிழர்தான். 2022 முதல் தீயணைப்பு வீரர்களாகவும் பெண்களை நியமிக்க தமிழக அரசு அனுமதித்துவிட்டது. உங்கள் பார்வையில் இவையெல்லாம் படவில்லை அவ்வளவுதான்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை யில், பரோட்டா வாங்கித் தராததால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்டது எதைக் காட்டுகிறது?

Advertisment

தாயிடம் முதலில் இருசக்கர வாகனம் கேட்டிருக்கிறார். கணவர் இறந்த நிலையில், குடும்பத்தைப் பேணிவந்த தாய், கடன் தீரட்டும் வாங்கித் தருகிறேன் என்றிருக்கிறார். இன்னொரு நாள் பரோட்டா கேட்டிருக்கிறார். இது மதியம், பரோட்டா கிடைக்காது. மாலை வாங்கித் தருகிறேன் என்றிருக்கிறார். எது கேட்டாலும் கிடைக்கவில்லையென தற்கொலை செய்துகொண்டார் கல்லூரி மாணவர். தாயின் சிரமம் தெரியாத பிள்ளை.

ப.ராதிகா, அம்பாசமுத்திரம்

உலகளவில் மத வன்முறை மிகுந்த ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதே?

அனுமன் ஜெயந்தி, ராம் நவமி என ஒவ்வொரு இந்துமதப் பண்டிகைகளின் போதும் சிறுபான்மையினரிடம் வம்பிழுக்க ஆளிருக் கிறது. ஒவ்வொரு பள்ளிவாசலின் அடியிலும் இந்துக் கோவில் இருந்தது என பிரச்சனை கிளப்பிவிடப்படுகிறது. பிறகு எந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறும் என நினைக்கிறீர்கள்?