மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயங்குகிறது என்கிறார் மோடி... பயங்கரவாதிகளின் கட்சி பா.ஜ.க. என்று கூறுகிறார் மல்லிகார்ஜுன் கார்கே...?
ஆக, இரண்டு தீவிரவாதக் கும்பலிடம் சிக்கி இந்தியா சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அ.யாழினிபர்வதம், சென்னை-78.
பொதுவாக அரசியல் கட்சிகளில் சீனியர் சிட்டிசன்கள் ஆதிக்கம் செலுத்துவதேன்?
சீனியர் சிட்டிசன் என்றால் பொதுவாக கட்சியில் நீண்ட காலம் இருப்பவர் என அர்த்தம். அதிகாலைப் பறவைகளுக்கே நிறைய புழு கிடைக்கும் என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அந்தக் கணக்கில், கட்சிக்கு முதலிலேயே வந்த சீனியர்கள் ஆதிக்கப் பதவிகளில் இருப்பதில் அதிசயம் இல்லை.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
ஒருவரின் சுயசரிதையில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அனைத் தும் இருக்குமா? இல்லை மைனஸ்களை மறைத்துவிடுவார் களா?
அது எழுதுபவர்களைப் பொருத்தது. எல்லோரும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி போல திறந்தபுத்தகமாக, சத்திய சோதனை போன்று எழுதுவார் கள் என எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
நோபல் பரிசுக்குப் பிறகு ஹான் காங்கின் புத்தகங்கள் 3 நாட்களில் 5 லட்சம் பிரதிகள் விற்பனையாகி யிருக்கிறதே?
அதிலொன்றும் ஆச்சர்ய மில்லை. நோபல் பரிசு பெறும் முதல் கொரிய எழுத்தா ளர் அவர். நோபல் வெல்லுமளவுக்கு அதிலென்ன கதை யிருக்கிறது என்ற ஆர்வத்தில் அனைவரும் வாங்கத் தொடங்கியிருப்பார்கள். நம் ஊரிலும் சாகித்ய அகாடமி, ஞானபீடம் விருது வழங்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட எழுத் தாளர்களின் புத்தக விற்பனை திடீ ரென வேகமெடுக்கும். கிட்டத்தட்ட வாசிப்புப் பழக்கமே மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்துகொண்டிருக்கும் சூழலில், விருது அறிவிப்புக்குப் பின் பாவது கொஞ்சம் பேர் புத்தகத்தை வாங்கி வாசிக்கிறார்களே என நாம் சந்தோஷம்தான் படவேண்டும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
இன்னும் பத்து அமாவாசை முடிந்தவுடன் தி.மு.க. கூட்டணி யில் உள்ளவர்கள் அ.தி.மு.க.வுக்கு வருவார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறாரே?
அதென்ன பத்து அமாவாசை கணக்கு என்று தெரியவில்லையே. தேர்தல் நெருங்கும்போது கட்சி தாவு வார்கள் என்ற கணக்கில் சொல் கிறாரா... அப்படியே தி.மு.க.வில் உள்ளவர்கள் கட்சி தாவுவதாக இருந்தாலும் சசி கலா ஒருபக்கம், ஓ.பி.எஸ். ஒருபக்கம், தினகரன் ஒருபக்கம், எடப்பாடி ஒருபக்கம் என ஆளுக் கொரு பக்கமாக இழுத்து குடைசரியப் பார்க்கும் கட்சிக்கா தாவப்போகிறார்கள்? சந்தேகம்தான்.
ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் பரஸ்பர வரித் திட்டத்தை கொண்டுவருவேன் என்கிறாரே அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்?
இந்தியாவில்தான் வெறும் வரிவிதிப்பிலே வருமானம் பார்க்கும் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால், அமெரிக்கா விலும் அப்படித்தான் போலிருக்கிறதே. ஆக, எந்த அரசியல்வாதியும் ஆக் கப்பூர்வமான திட்டங்களால் பொருளாதாரத்தை உயர்த்தி மக்களை வரி விதிப்பு நெருக்கடியிலிருந்து விடுவிப்பதைப் பற்றி யோசிப்பதில்லை. வரியில் துண்டுவிழுகிறதா.... பொது ஜனத்தின் கோமணத்தில் ஒரு ஓரத்தில் கிழித்துச் சரிக்கட்டு என்றுதான் யோசிக்கிறார்கள்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது கிடைத்திருக்கிறதே?
ஐ.நா.வின் இன்டர் ஏஜென்சி டாஸ்க்போர்ஸ் விருது, தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு அறிவிக்கப்பட் டுள்ளது. கிராமப்புறங்களிலுள்ள மக்களைத் தேடிச்சென்று அவர் களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்து வழங்கும் திட்டம். இதன்மூலம் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் பயன்பெறுகிறார்கள். அரசு தவறுசெய்யும்போது விமர்சிப்பதைப் போல, நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி சர்வதேச கவனத்தைப் பெறும்போது வாழ்த்தவும் வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கும், முதல்வருக்கும் வாழ்த்துகள்.
எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு
அரசுத் திட்டங்கள், விளம்பரங்கள் தமிழில் இருக்கவேண்டுமென புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாரே?
விளம்பரத்துக்காக செய்தாலும் தமிழை முன்னிலைப்படுத்துவதில் சந்தோஷம்தான்.
வண்ணை கணேசன், கொளத்தூர்
உ.பி.யில் டைம் மெஷின் மூலம் வயதைக் குறைப்பதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி செய்திருக்கிறார்களே?
நம் ஊரில் ஈமு கோழி, பிட்காயினில் ஏமாறுவதில்லையா? உத்தரபிரதேசத்துக்கு கால எந்திரம் தேவைப்பட்டிருக்கிறது. இதே யுக்தியை தமிழகத்தில் பயன்படுத்தியிருந்தால் யாரும் ஏமாந்திருக்க மாட்டார்கள் என உறுதியாகச் சொல்லமுடியுமா?